Just In
- 2 hrs ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 3 hrs ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 5 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 10 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
Don't Miss!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Movies இப்படி செய்வீங்கணு நினைக்கல..கல்யாணமே பண்ணியிருக்க மாட்டானே.. மேடையில் ஓபனா பேசிய ரெடின் கிங்ஸ்லி!
- News எனக்கே ஸ்கெட்சா? தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தகராறு..தூக்கியடிக்கப்படும் தலைகள்! இவர் தான் காரணமா?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இவ்வளவு ஈசியா EPF பாஸ்புக் டவுன்லோட் செய்ய முடியுமா.. சிம்பிள் ஸ்டெப்ஸ்!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே அணியில் குளறுபடி.. தீபக் சாஹரை நம்பாத ருதுராஜ்.. தோல்விக்கு காரணமே இதுதான்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஒரே கல்லில் ரெண்டு மாங்கா... பெரிய பிரச்னையை அசால்டாக முடிக்கும் மோடி அரசு... என்னனு தெரியுமா?
பெரிய பிரச்னை ஒன்றை அசால்டாக முடிக்கும் காரியத்தில் மத்திய அரசு களமிறங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் தற்போது பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலம் அடைந்து வருகின்றன. வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்படுத்தி பயன்படுத்தி அலுத்து போயுள்ள இந்திய மக்களின் கவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி திரும்பி வருகிறது. மத்திய அரசு வழங்கி வரும் ஊக்கமும் இதற்கு ஒரு காரணம்.
ஆம், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் மத்திய அரசு மிகவும் ஆர்வமாக உள்ளது. குறிப்பாக பிரதமர் மோடியே இந்த விஷயத்தில் மிகவும் ஆர்வமாகதான் இருக்கிறார். எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், இந்தியாவிற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்ற காரணத்தால்தான், இந்த விஷயத்தில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், முதலில் பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யின் தேவை குறையும். இந்தியாவிடம் போதுமான அளவிற்கு கச்சா எண்ணெய் வளம் இல்லை என்பது பச்சை குழந்தைக்கு கூட தெரியும். எனவே கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்காக அதிகப்படியான தொகையை இந்தியா செலவிட்டு வருகிறது.
ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் தொகை குறையும். எனவே இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதற்காக பிரதமராக பதவியேற்றது முதலே நரேந்திர மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்தாக வேண்டியதன் அவசியத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் மிக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார். இந்த பிரச்னையை சமாளிக்க எலெக்ட்ரிக் வாகனங்கள் நல்ல தீர்வாக இருக்கும். எனவேதான் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது என்பது கூடுதல் சிறப்பம்சம். தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில், காற்றின் தரம் மிக மோசமான நிலையில் உள்ளது. டெல்லி போன்ற நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த பிரச்னையை சமாளித்தாக வேண்டிய கட்டாயமும் மத்திய அரசுக்கு உள்ளது.
ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் புழக்கம் குறைந்து, எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும்போது, காற்று மாசுபாடு பிரச்னை படிப்படியாக கட்டுக்குள் வரும். ஆக, மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகமாகும் பட்சத்தில், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும். நாட்டின் நன்மைக்காகவும், தங்களது நன்மைக்காகவும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க மக்கள் ஆர்வமாகதான் உள்ளனர்.
பெட்ரோல், டீசல் வாகனங்களை இயக்குவதற்கு ஆகும் செலவை காட்டிலும் மிகவும் குறைவான செலவில் எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்க முடியும். இதனை தங்களுக்கான நன்மையாக மக்கள் பார்க்கின்றனர். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் இரண்டு முக்கியமான பிரச்னைகள் உள்ளன. மின்சார வாகனங்களின் விலை கொஞ்சம் அதிகம் என்பது முதலாவது பிரச்னை.
அவற்றை சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் போதிய அளவிற்கு இல்லை என்பது இரண்டாவது பிரச்னை. இந்த 2 பிரச்னைகளையும் களைய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலில் மின்சார வாகனங்களின் விலை குறைய வேண்டும் என்பதற்காக, ஜிஎஸ்டி வரி குறைப்பு, ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ் மானியம் உள்ளிட்ட சலுகைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
இதனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கொஞ்சம் குறைந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகளில் மத்திய அரசு தற்போது தீவிரமாக களம் இறங்கியுள்ளது. தற்போது மருந்துக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாய்தான் சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருக்கின்றன.
ஆனால் இந்தியாவில் வெகு விரைவில் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகரிக்கவுள்ளது. ஆம், 2,600 சார்ஜிங் ஸ்டேஷன்களை புதிதாக கட்டமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த 2,600 சார்ஜிங் ஸ்டேஷன்களும் 62 நகரங்களில் இன்ஸ்டால் செய்யப்படவுள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க முடிவு செய்திருப்பவர்கள் மத்தியில் இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரேஞ்ச் காரணமாக இருக்கும் பயத்தால்தான் மின்சார வாகனங்களை வாங்க பலர் தயங்குகின்றனர். மின்சார வாகனங்கள் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பதுதான் ரேஞ்ச். இதனிடையே ஓரிடத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது சார்ஜ் தீர்ந்து விட்டால் என்ன செய்வது? என்ற அச்சம் பலரிடமும் காணப்படுகிறது.
இதுவே பெட்ரோல், டீசல் வாகனங்கள் என்றால் உடனடியாக பங்க்கிற்கு சென்று எரிபொருள் நிரப்பி விட்டு தொடர்ந்து பயணிக்கலாம். ஆனால் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் பெரிய அளவில் இல்லாததால், சார்ஜ் தீர்ந்து விட்டால் சிக்கலை சந்திக்க வேண்டியது இருக்கும். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க தயக்கம் நிலவுகிறது.
ஆனால் அரசின் தற்போதைய முடிவு எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் தொடர்பாக மக்கள் மத்தியில் உள்ள பதற்றத்தை போக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளில் மிகவும் முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இந்த 2,600 சார்ஜிங் ஸ்டேஷன்களும் ஃபேம்-2 திட்டத்தின் கீழ் அமைக்கப்படுகின்றன.
ஃபேம்-2 திட்டத்தின் கீழ், 62 நகரங்களில் 2,600 சார்ஜிங் ஸ்டேஷன்களை இன்ஸ்டால் செய்வதற்கான ஒப்புதலை அரசு வழங்கியுள்ளதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தற்போது அறிவித்துள்ளார். அரசின் இந்த நடவடிக்கை பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். இதுபோன்ற நடவடிக்கைகளால் இனி இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை வேகம் எடுக்கலாம்.
-
40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!