Just In
- 3 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 3 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 5 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பு!
கொரோனா பரவல் தாக்கத்தை கருத்தில்கொண்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் மத்திய அரசு நீடித்துள்ளது. இதுதொடர்பான விரிவானத் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் முதல் அரசு சேவைகள் முற்றிலுமாக முடங்கின. இதையடுத்து, வாகனங்களுக்கான பதிவுச் சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், பெர்மிட் உள்ளிட்ட ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை மூன்று மாதங்கள் வரை மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டது.

இதையடுத்து, பொது முடக்கம் சில தளர்வுகளுடன் தொடர்ந்து அமலில் உள்ளது. இதனை மனதில் வைத்தும், வாகன ஓட்டிகள் மற்றும் உரிமையாளர்களின் நிலையை கருத்தில்கொண்டும், ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டது.

இதுவரை மூன்று முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் 31ந் தேதியுடன் இந்த கால அவகாசம் முடிவுக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில், ஓட்டுனர் உரிமம், பெர்மிட் மற்றும் பதிவுச் சான்று உள்ளிட்டவற்றை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, வரும் 2021ம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் தாக்கம் தொடர்ந்து இருந்து வருவதால், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், காலக்கெடு நெருங்கிவிட்ட நிலையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு ஏராளமானோர் வரும் வாய்ப்பு இருப்பதை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓட்டுனர் உரிமம், பதிவுச் சான்று ஆகியவற்றின் காலாவதி காலத்தை தாண்டினாலும் தொடர்ந்து வரும் ஆண்டு மார்ச் 31ந் தேதி வரை பயன்படுத்த இயலும். அதற்குள் புதுப்பித்துக் கொள்வது அவசியம் என்பதை வாகன ஓட்டிகள் நினைவில் கொள்வது அவசியம்.