Just In
- 2 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 4 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 4 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 5 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- News "இது" வேற வெளியே வந்துருச்சு.. காந்திராஜ் தோட்டத்தில்.. அது பாட்டுக்கு போகுது.. திகைத்த தஞ்சாவூர்
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- Movies எரிகிற கொள்ளியில் இன்னும் ஏன் எண்ணெய் ஊத்துற.. விஜய்யை கடுமையாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பு!
கொரோனா பரவல் தாக்கத்தை கருத்தில்கொண்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் மத்திய அரசு நீடித்துள்ளது. இதுதொடர்பான விரிவானத் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.
கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் முதல் அரசு சேவைகள் முற்றிலுமாக முடங்கின. இதையடுத்து, வாகனங்களுக்கான பதிவுச் சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், பெர்மிட் உள்ளிட்ட ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை மூன்று மாதங்கள் வரை மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டது.
இதையடுத்து, பொது முடக்கம் சில தளர்வுகளுடன் தொடர்ந்து அமலில் உள்ளது. இதனை மனதில் வைத்தும், வாகன ஓட்டிகள் மற்றும் உரிமையாளர்களின் நிலையை கருத்தில்கொண்டும், ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டது.
இதுவரை மூன்று முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் 31ந் தேதியுடன் இந்த கால அவகாசம் முடிவுக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில், ஓட்டுனர் உரிமம், பெர்மிட் மற்றும் பதிவுச் சான்று உள்ளிட்டவற்றை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, வரும் 2021ம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் தாக்கம் தொடர்ந்து இருந்து வருவதால், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், காலக்கெடு நெருங்கிவிட்ட நிலையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு ஏராளமானோர் வரும் வாய்ப்பு இருப்பதை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓட்டுனர் உரிமம், பதிவுச் சான்று ஆகியவற்றின் காலாவதி காலத்தை தாண்டினாலும் தொடர்ந்து வரும் ஆண்டு மார்ச் 31ந் தேதி வரை பயன்படுத்த இயலும். அதற்குள் புதுப்பித்துக் கொள்வது அவசியம் என்பதை வாகன ஓட்டிகள் நினைவில் கொள்வது அவசியம்.
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?