Just In
- 37 min ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- 1 hr ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 4 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 5 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
Don't Miss!
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Movies விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்திய வருகையை உறுதிப்படுத்தியது கிரேட்வால் மோட்டார்ஸ்!
இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவங்க இருப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது கிரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம்.
சீனாவை சேர்ந்த கார் நிறுவனங்கள் இந்திய கார் சந்தையில் வர்த்தகத்தை துவங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. ஏற்கனவே, சீனாவை சேர்ந்த செயிக் குழுமம் தனது கீழ் செயல்படும் எம்ஜி மோட்டார்ஸ் மூலமாக இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவக்கிவிட்டது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் கார் மாடலான ஹெக்டர் எஸ்யூவிக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், சீனாவை சேர்ந்த முன்னணி கார் நிறுவனமான கிரேட்வால் மோட்டார்ஸ் இந்திய கார் சந்தையில் களமிறங்க இருப்பதை ட்விட்டர் மூலமாக உறுதிப்படுத்தியுள்ளது.
நமஸ்தே இந்தியா என்று ட்விட்டரில் தெரிவித்து தனது இந்திய வருகையை இந்தியர்களுக்கு பரைசாற்றி உள்ளது. மேலும், செயிக் குழுமம் எப்படி தனது கீழ் செயல்பட்டு வரும் எம்ஜி மோட்டார்ஸ் பிராண்டை இந்தியாவில் அறிமுகம் செய்ததோ, அதே பாணியில் கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனமும் தனது கீழ் செயல்பட்டு வரும் ஹவல் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.
இந்தியாவில் ஹவல் பிராண்டை முறைப்படி பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், இந்திய கார் வர்த்தகத்திற்காக ரூ.7,000 கோடியை முதலீடு செய்ய கிரேட்வால் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் கார் ஆலை அமைப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. தலேகான் பகுதியில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆலையை கையகப்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டது. ஜெனரல் மோட்டார்ஸ் ஆலையை கையகப்படுத்தும் பணிகள் முடிந்து கார் உற்பத்தியை துவங்குவதற்கு சில மாதங்கள் பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஹவல் எச்-6 கூபே ரக கார் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருந்தது குறித்த ஸ்பை படங்கள் வெளியானது. இந்த கார்தான் இந்தியாவில் முதல் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய எஸ்யூவி ரக கார் அடுத்த ஆண்டு மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தர ரக எஸ்யூவி மாடல்களுக்கும், பிரிமீயம் ரக எஸ்யூவி மாடல்களுக்கும் இந்த கார் போட்டியை தரும்.