Just In
- 28 min ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 1 hr ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- 2 hrs ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 5 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
Don't Miss!
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்தியாவில் ரூ7,500 கோடியை முதலீடு செய்யும் சீன கார் நிறுவனம்!
கொரோனா பிரச்னையால் முதலீடுகள் செய்வதற்கு பல பெரிய நிறுவனங்கள் தயங்கி வரும் நிலையில், சீன கார் நிறுவனம் இந்தியாவில் ரூ.7,500 கோடியை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.
கொரோனா பிரச்னை காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளில் பல நாடுகளும் தீவிரமாக இறங்கி உள்ளன. குறிப்பாக, பல பெரும் நிறுவனங்கள் முதலீடுகளை தவிர்க்க முடிவு செய்துள்ளன.
இந்த நிலையில், சீனாவை சேர்ந்த கிரேட்வால் மோட்டார் நிறுவனம் ஏற்கனவே திட்டமிட்டபடி இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், மஹாராஷ்டிராவில் 1 பில்லியன் டாலர்களை (ரூ.7,800 கோடி) முதலீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்காக மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் இந்தியாவுக்கான சீன தூதர் சூன் வெய்டாங் முன்னிலையில் கிரேட்வால் மோட்டார் நிறுவனத்திற்கும் மஹாராஷ்டிர அரசுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மஹாராஷ்டிர மாநிலம், புனே அருகில் தலேகானில் செயல்பட்டு வந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செவர்லே கார் ஆலையை கிரேட்வால் மோட்டார் நிறுவனம் கடந்த ஜனவரியில் கையகப்படுத்தி உள்ளது.
இந்த ஆலை 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. புனேயில் இருந்து 45 கிமீ தூரத்திலும், மும்பை துறைமுகத்தில் இருந்து 100 கிமீ தூரத்திலும் இருக்கிறது. இந்த ஆலையில் படிப்படியாக ரூ.7,500 கோடி வரை முதலீடு செய்யப்போவதாக கிரேட்வால் நிறுவனம் தெரிவித்துள்ளது. கார் உற்பத்தி மட்டுமின்றி, பணியாளர் பயிற்சி, நிர்வாக அலுவலகம் உள்ளிட்டவை இங்கு செயல்படும்.
அத்துடன், பெங்களூரில் கார் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்தியாவில் படிப்படியாக 3,000 ஊழியர்களை பணியமர்த்தவும் திட்டமிட்டுள்ளதாக கிரேட்வால் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் மிகப்பெரிய கார் நிறுவனங்களில் ஒன்றான கிரேட்வால் நிறுவனம் தனது கீழ் செயல்பட்டு வரும் ஹவல் நிறுவனத்தின் கார்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதாவது, சீனாவை சேர்ந்த செயிக் குழுமம் இந்தியாவில் எம்ஜி பிராண்டில் கார்களை விற்பனை செய்யும் அதே யுக்தியை கையில் எடுத்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் எச்9, எஃப்-7, எஃப்7எக்ஸ், எஃப்-5 ஆகிய எஸ்யூவி மாடல்கள் மற்றும் ஐக்யூ மற்றும் ஆர்1 ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை காட்சிப்படுத்தி இருந்தது. அடுத்த ஆண்டு முதல் ஹவல் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த கிரேட்வால் மோட்டார் திட்டமிட்டுள்ளது.
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!