எனக்கு இப்படி ஒரு பரிசா! அழகிய மனைவிக்கு அழகான பரிசை வழங்கிய கணவன்... இத உங்க மனைவிக்கு தெரியாம பாத்துக்கோங்க!
இளைஞர் ஒருவர் தனது அழகான மனைவியை ஆச்சரியப்படுத்தும் நோக்கில் சூப்பர் பரிசு ஒன்றை வழங்கி இணையத்தின் ஹீரோவாக மாறியுள்ளார். இதுகுறித்த சுவாரஷ்ய தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

வருஷம் முடியபோகுது புத்தாண்டு நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த விசேஷ தினத்தை முன்னிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு ஆண்டின் இறுதி நினைவு பரிசை வழங்கத் தொடங்கியிருக்கின்றனர். இம்மாதிரியான சூழ்நிலையே ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் அவரது மனைவிக்கு எதிர்பார்த்திராத ஆச்சரிய பரிசை வழங்கியிருக்கின்றார்.

மஹிந்திரா நிறுவனத்தின் புதுமுக அறிமுகமான தார் எஸ்யூவி காரையே அவர் பரிசாக வழங்கியிருக்கின்றார். உண்மையில் இது எதிர்பார்க்க முடியாது பரிசுதான். ஏனெனில் இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவரேற்பு கிடைத்து வருகின்றது. இதனால் காரை புக் செய்தோர் அதிகபட்சமாக 10 மாதங்கள் வரையிலாவது காத்திருக்க வேண்டும் என்ற சூழ்நிலை நிலவுகின்றது.

இம்மாதிரியான சூழ்நிலையிலேயே சற்றும் எதிர்பாராத நேரத்தில் மஹிந்திரா தார் காரை ஹரியான மாநிலத்தைச் சேர்ந்த அந்த இளைஞர், தனது மனைவிக்கு பரிசாக வழங்கியிருக்கின்றார். மனைவியை ஆச்சரியப்படுத்தும் நோக்கில் இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. பரிசைப் பெற்ற அந்த இளம்பெண் ஓர் யுட்யூபர் ஆவார்.

டிஎன்ஜி வ்ளாக்ஸ் எனும் பெயரில் யுட்யூப் சேனலை நடத்தி வருகின்றார். இந்த சேனலின் வாயிலாகவே தான் பெற்ற பரிசு பற்றிய தகவலை வீடியோவாக வெளியிட்டிருக்கின்றார். அந்த வீடியோவில், "தான் யுட்யூப்-பிற்காக வேலை செய்து கொண்டிருந்ததாகவும், அப்போது கைப் பேசியில் திடீரென அழைத்த கணவர் வாசலில் ஓர் ஆச்சரிய பரிசு காத்திருப்பதாக தெரிவித்தார். அப்போது தான் மஹிந்திரா தார் கார் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது எனக்கு தெரியவந்தது" என கூறியுள்ளார்.

இளம் தம்பதியினரின் இந்த செயல் நெட்டிசன்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் இடம்பெற்றிருக்கும் காட்சிகளின் அடிப்படையில், இது ஓர் தார் எஸ்யூவியின் உயர்நிலை தேர்வான எல்எக்ஸ் ஹார்ட் டாப் வெர்ஷன் என்பது தெரிய வந்துள்ளது.

மஹிந்திரா நிறுவனம் தார் காரை பல ஆண்டுகளாக உற்பத்தி செய்து வந்தாலும், இப்போதுதான் முதல் முறையாக இக்காரில் ஹார்ட் டாப் வசதியை நிறுவனத்தின் வாயிலாகவே பொருத்தி வருகின்றது. இதுமட்டுமின்றி, முன்னதாக ஆஃப்-ரோடு பயணத்திற்கு மட்டுமே உகந்த அம்சங்களில் காணப்பட்ட இக்காரை தற்போது அனைத்து விதமான சாலை பயன்பாட்டிற்கும் ஏற்ற வசதிகளுடன் வழங்கத் தொடங்கியுள்ளது.

இதுபோன்ற எக்கசக்க காரணங்களினாலயே இந்தியாவில் மிக அமோகமான டிமாண்டை இக்கார் பெற்று வருகின்றது. உருவம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளிலும் இக்கார் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. பன்முக கன்ட்ரோல்களைக் கொண்ட ஸ்டியரிங் வீல், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்பீக்கர்கள், மிகவும் மிருதுவான இருக்கை என எக்கசக்க பிரீமியம் வசதிகளுடன் இக்கார் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.
இத்தகைய சிறப்பு வசதிகளைக் கொண்ட கவர்ச்சியான மஹிந்திர தார் காரையே தனது அழகிய மனைவிக்கு ஹரியான மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் பரிசாக வழங்கியிருக்கின்றார். மஹிந்திரா தார் ரூ. 12 லட்சத்தில் இருந்து ரூ. 17 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.


Click it and Unblock the Notifications








