அந்த வாகனங்களை எல்லாம் ஏலத்தில் விட போறாங்களாம்... காவல்துறை அதிரடி... எந்த நகரத்தில் தெரியுமா?
தங்களிடம் இருக்கும் வாகனங்களை ஏலத்தில் விட இருப்பதாக குறிப்பிட்ட நகர போலீஸார் அறிவித்திருக்கின்றனர். அது எந்த நகர போலீஸார் என்பதை இப்பதிவில் காணலாம்.

சட்ட ஒழுங்கு, முக்கிய தலைவர்களின் பாதுகாப்பு என பல்வேறு பொது சேவையில் ஈடுபட்டு வரும் காவல்துறை தற்போது வாகனங்களை ஏலத்திற்கு விடும் பணியிலும் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் நகர போலீஸாரே இந்த பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஹைதராபாத் நகரத்தில் இருக்கும் காவல்நிலையங்களில், கைவிடப்பட்ட மற்றும் உரிமையாளர்கள் என கூறிக்கொள்ள யாரும் இல்லாத நிலையில் ஒட்டுமொத்தமாக 2,391 வாகனங்கள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது. இவற்றில் சிலவற்றை ஏலத்தின் மூலமாக விற்பனைச் செய்ய ஹைதராபாத் காவல்துறை திட்டமிட்டிருக்கின்றது.

முதல்கட்டமாக 175 வாகனங்களை அவர்கள் ஏலத்தின் மூலம் வெளியேற்ற திட்டமிட்டுள்ளனர். தற்போது ஏலத்தின் மூலம் விற்பனைச் செய்வதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் காவல்துறை வெளியிட்டிருக்கின்றது.

2004 ஆர்/டபிள்யூ பிரிவு 40ன் படி நகரத்தில் உரிமை கோராமல், கைவிடப்பட்டிருக்கும் வாகனத்தை ஏலத்தில் விடலாம் என்ற விதி இருக்கின்றது. இதனைப் பயன்படுத்தியே ஹைதராபாத் நகர போலீஸார் தங்களிடம் கேட்பாரற்றுக் கிடக்கும் வாகனங்களை ஏலத்தில் விற்க முடிவு செய்திருக்கின்றனர்.

உரிமைக் கோரப்படாத மற்றும் கைவிடப்பட்ட வாகனங்களின் பட்டியல் www.hyderabadpolice.gov.in எனும் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன், நகரத்தின் போலீஸ் பயிற்சி மையத்திலும் வாகனங்கள்குறித்த தகவல் அட்டவணையாக ஒட்டப்பட்டுள்ளது.

அதில், ஏலம் விடப்பட இருக்கும் வாகனங்களின் பதிவெண், எந்த ஆர்டிஓவில் பதிவு செய்யப்பட்டது மற்றும் சேஸிஸ் எண் என பல்வேறு தகவல்கள் அடங்கியிருக்கின்றன. பட்டியலில் பெரும்பாலும் ஹோண்டா ஆக்டிவா, ஹீரோ ஸ்பிளெண்டர், பேஷன் ப்ரோ, பஜாஜ் டிஸ்கவர், டிவிஎஸ் வீகோ, அப்பாச்சி மற்றும் ஹோண்டா யூனிகார்ன் ஆகிய இருசக்கர வாகனங்களே அதிகமாக இருக்கின்றன.

இத்துடன், சில ஆட்டோ ரிக்ஷாக்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. இதில் ஏதேனும் ஓர் வாகனத்தை அதன் உரிமையாளர் உரிமைகோர இருந்தால், அந்த வாகனம் தங்களுடையது என்பதற்கான சான்று மற்றும் சில வழிகாட்டுதல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இதன் பின்னரே வாகனத்தை ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஹைதராபத் காவல்துறை தெரிவித்திருக்கின்றது. மேலும், இதற்கு 6 மாதங்கள் கால அவகாசத்தை வெளியிட்டிருக்கின்றது. பல்வேறு வாகனங்கள் துருவிற்கும், தூசிக்கும் இரையாகும் நிலையில் இருக்கின்றன.

இவை இடத்தையும் ஆக்கிரமப்பைச் செய்வதோடு பல்வேறு இடையூறுகளையும் வழங்கும் வகையில் இருக்கின்றன. எனவேதான் இவற்றை அகற்றும் முயற்சியில் ஹைதராபாத் போலீஸார் களமிறங்கியிருக்கின்றனர். இதன் தொடக்கமாகவே முதல் கட்டமாக 175 வாகனங்களின் பட்டியல் வெளியடப்பட்டுள்ளது.
குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








