Just In
- 24 min ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 54 min ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 2 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 2 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
Don't Miss!
- News போலி பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா, முடியாதா? உயர்நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட மாற்றம் என்ன?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Movies யாரும் என்னை அழைக்கவில்லை.. நான் தயாராக இருந்தேன்.. ஓஹோ இப்படியும் நடந்திருக்கா.. சுகன்யா பாவம்தான்
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
புத்தம் புதிய காரை திருட ஹூண்டாய் முன்னாள் ஊழியர் போட்ட செம்ம ஸ்கெட்ச்! இப்படியும் திருடுவாங்களா?
ஹூண்டாய் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் புதிய காரை திருட கையாண்ட யுக்தி வாகன உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.
இந்தியாவில் காவல்துறைக்கு தலை வலியை ஏற்படுத்தும் வகையில் வாகன திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அதிலும், சமீபகாலமாக நமது செவிக்கு வரும் செய்திகள் அனைத்தும், நாம் இதுவரை அறிந்திராத வகையிலான, விநோத திருட்டு சம்பவங்களாகவே இருக்கின்றன.
அந்தவகையில் நாட்டையே உலுக்குகின்ற வகையிலான எம்பிஏ பட்டதாரிகளின் மாறுபட்ட திருட்டு யுக்தி அமைந்திருந்தது. விபத்தில் சிக்கி முற்றிலும் பயனற்றதாக மாறும் வாகனங்களைத் தேடிப்பிடிக்கும் இந்த கும்பல், அதன் ஆவணங்களை வாகனத்தின் உரிமையாளரிடம் இருந்தே மிக் குறைந்த விலையில் பெற்று, அந்த ஆவணத்திற்கு ஏற்ற கார்களைத் திருடி பயன்படுத்திய கார்கள் சந்தையில் விற்றிருக்கின்றனர்.
வாகனத்தின் உரிமையாளரே நேரில் வந்தால்கூட அக்காரை கண்டுபிடிக்க முடியாத வகையில் பதிவு எண் முதல் அனைத்தையும் மிகவும் நேர்த்தியாக மாற்றி அதன் பின்னரே செகண்ட் ஹேண்ட் கார்கல் சந்தையில் அவர் விற்றிருக்கின்றனர்.
எம்பிஏ பட்டதாரிகளின் இந்த திருட்டுக்கு ஒரு சில காப்பீட்டு நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளும் உடந்தை எனக் கூறப்படுகின்றது. இவர்களின் மூலமே விபத்தில் சிக்கிய கார்களின் ஆவணங்களை மிகவும் குறைந்த விலையில், அதன் உரிமையாளர்களிடம் இருந்து அவர்கள் பெற்று வந்தனர்.
இந்நிலையில், மற்றுமொரு விநோதமான திருட்டு சம்பவம் இந்தியாவில் அரங்கேறியிருப்பதாக தகவல் வெளியாகியள்ளது. அது, நாட்டின் தலைநகரான புது டெல்லியில் அரங்கேறியிருக்கின்றது. இந்த சம்பவத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையத்தில் பணி புரிந்த நபர் சிக்கியிருப்பது பொதுமக்களுக்கு மட்டுமின்றி போலீஸாருக்கே ஷாக்களிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
ஆம், ஹூண்டாய் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரே தற்போதைய கார் திருட்டு சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளார். இவர் எப்படி புத்தம் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரை திருடினார் என்பது பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.
திருடர் என மட்டுமே சித்தரிக்கப்பட்டுள்ள அந்த மர்ம நபர், தலைநகர் டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரி எனும் பகுதியில் உள்ள ஹூண்டாய் சர்வீஸ் மையத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வந்துள்ளார். இவர், அண்மையில்தான் இந்த பணியில் இருந்து விடைப் பெற்றதாகக் கூறப்படுகின்றது.
முன்னர், பணியில் இருந்த வரை நிர்வாகத்திற்கு தெரியாமல் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களை மட்டும் தொடர்பு கொண்டு அவர்களிடம் நெறுங்கி பழகி வந்துள்ளார் அந்த நபர். இந்த பழக்கத்தையேக் காரணமாகக் காட்டி குறைந்த செலவில் சர்வீஸ் மற்றும் பிற சேவைகளை அவர்களுக்கு மட்டும் வழங்கி வந்திருக்கின்றார்.
இந்த நேரத்தில்தான் தனக்கு தேவையான சில விசித்திரமான செயல் முறைகளையும் அக்கார்களில் அரங்கேற்றியிருக்கின்றார் அந்த மர்ம நபர். அதாவது, காரின் திருட்டைத் தடுக்குகின்ற பாதுகாப்பு அம்சங்களை செயலிழக்கும் காரியங்களை அவர் செய்திருக்கின்றார்.
இதைத்தொடர்ந்தே, காரின் உரிமையாளருக்கே தெரியாமல் அவரை நோட்டமிட்டு, அக்கார் எங்கு எல்லாம் பயணிக்கின்றது, எந்த இடத்தில் நிறுத்தப்படுகின்றது என அனைத்து தகவலையும் அவர் சேகரித்து வந்துள்ளார். இதன்பின்னரே, ஏற்கனவே செய்து வைத்த சூழ்ச்சியை செயல்படுத்தி அக்காரை யாருக்கும் தெரியாமல் லாவமாக திருடி வந்துள்ளார்.
இவ்வாறு, ஜஹாங்கிர்புரி மெட்ரோ ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த க்ரெட்டா எஸ்யூவி காரையும் அந்த நபர் திருடியிருக்கின்றார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக காவலர்களின் உடனடி நடவடிக்கை மற்றும் சிசிடிவி போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் அவர் சிக்கியிருக்கின்றார்.
முன்னாள் ஹூண்டாய் சர்வீஸ் மைய ஊழியரின் இந்த விநோதமான திருட்டு யுக்தி வாகன உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையோர பழுதுநீக்கம் கடையில் வாகனத்தை விட்டால், ஒரிஜினல் பாகங்கள் களவு செய்யப்படுகின்றது என்ற அச்சத்தில்தான் பலர் கூடுதல் செலவாகினாலும் பரவாயில்லை என அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டர்களில் வாகனங்களை விட்டு வருகின்றனர்.
ஆனால், அவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தற்போதைய டெல்லி சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. எனவே, வாகன உரிமையாளர்கள் எந்த இடத்தில் வாகனத்தை சர்வீஸ் செய்தாலும் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகின்றது.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?