புத்தம் புதிய காரை திருட ஹூண்டாய் முன்னாள் ஊழியர் போட்ட செம்ம ஸ்கெட்ச்! இப்படியும் திருடுவாங்களா?

ஹூண்டாய் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் புதிய காரை திருட கையாண்ட யுக்தி வாகன உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

புத்தம் புது காரை திருட ஹூண்டாய் முன்னாள் ஊழியர் போட்ட செம்ம ஸ்கெட்ச்! இப்படியும் திருடுவாங்களா? உறைந்துபோன மக்கள்!

இந்தியாவில் காவல்துறைக்கு தலை வலியை ஏற்படுத்தும் வகையில் வாகன திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அதிலும், சமீபகாலமாக நமது செவிக்கு வரும் செய்திகள் அனைத்தும், நாம் இதுவரை அறிந்திராத வகையிலான, விநோத திருட்டு சம்பவங்களாகவே இருக்கின்றன.

புத்தம் புது காரை திருட ஹூண்டாய் முன்னாள் ஊழியர் போட்ட செம்ம ஸ்கெட்ச்! இப்படியும் திருடுவாங்களா? உறைந்துபோன மக்கள்!

அந்தவகையில் நாட்டையே உலுக்குகின்ற வகையிலான எம்பிஏ பட்டதாரிகளின் மாறுபட்ட திருட்டு யுக்தி அமைந்திருந்தது. விபத்தில் சிக்கி முற்றிலும் பயனற்றதாக மாறும் வாகனங்களைத் தேடிப்பிடிக்கும் இந்த கும்பல், அதன் ஆவணங்களை வாகனத்தின் உரிமையாளரிடம் இருந்தே மிக் குறைந்த விலையில் பெற்று, அந்த ஆவணத்திற்கு ஏற்ற கார்களைத் திருடி பயன்படுத்திய கார்கள் சந்தையில் விற்றிருக்கின்றனர்.

புத்தம் புது காரை திருட ஹூண்டாய் முன்னாள் ஊழியர் போட்ட செம்ம ஸ்கெட்ச்! இப்படியும் திருடுவாங்களா? உறைந்துபோன மக்கள்!

வாகனத்தின் உரிமையாளரே நேரில் வந்தால்கூட அக்காரை கண்டுபிடிக்க முடியாத வகையில் பதிவு எண் முதல் அனைத்தையும் மிகவும் நேர்த்தியாக மாற்றி அதன் பின்னரே செகண்ட் ஹேண்ட் கார்கல் சந்தையில் அவர் விற்றிருக்கின்றனர்.

புத்தம் புது காரை திருட ஹூண்டாய் முன்னாள் ஊழியர் போட்ட செம்ம ஸ்கெட்ச்! இப்படியும் திருடுவாங்களா? உறைந்துபோன மக்கள்!

எம்பிஏ பட்டதாரிகளின் இந்த திருட்டுக்கு ஒரு சில காப்பீட்டு நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளும் உடந்தை எனக் கூறப்படுகின்றது. இவர்களின் மூலமே விபத்தில் சிக்கிய கார்களின் ஆவணங்களை மிகவும் குறைந்த விலையில், அதன் உரிமையாளர்களிடம் இருந்து அவர்கள் பெற்று வந்தனர்.

புத்தம் புது காரை திருட ஹூண்டாய் முன்னாள் ஊழியர் போட்ட செம்ம ஸ்கெட்ச்! இப்படியும் திருடுவாங்களா? உறைந்துபோன மக்கள்!

இந்நிலையில், மற்றுமொரு விநோதமான திருட்டு சம்பவம் இந்தியாவில் அரங்கேறியிருப்பதாக தகவல் வெளியாகியள்ளது. அது, நாட்டின் தலைநகரான புது டெல்லியில் அரங்கேறியிருக்கின்றது. இந்த சம்பவத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையத்தில் பணி புரிந்த நபர் சிக்கியிருப்பது பொதுமக்களுக்கு மட்டுமின்றி போலீஸாருக்கே ஷாக்களிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

புத்தம் புது காரை திருட ஹூண்டாய் முன்னாள் ஊழியர் போட்ட செம்ம ஸ்கெட்ச்! இப்படியும் திருடுவாங்களா? உறைந்துபோன மக்கள்!

ஆம், ஹூண்டாய் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரே தற்போதைய கார் திருட்டு சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளார். இவர் எப்படி புத்தம் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரை திருடினார் என்பது பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

புத்தம் புது காரை திருட ஹூண்டாய் முன்னாள் ஊழியர் போட்ட செம்ம ஸ்கெட்ச்! இப்படியும் திருடுவாங்களா? உறைந்துபோன மக்கள்!

திருடர் என மட்டுமே சித்தரிக்கப்பட்டுள்ள அந்த மர்ம நபர், தலைநகர் டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரி எனும் பகுதியில் உள்ள ஹூண்டாய் சர்வீஸ் மையத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வந்துள்ளார். இவர், அண்மையில்தான் இந்த பணியில் இருந்து விடைப் பெற்றதாகக் கூறப்படுகின்றது.

புத்தம் புது காரை திருட ஹூண்டாய் முன்னாள் ஊழியர் போட்ட செம்ம ஸ்கெட்ச்! இப்படியும் திருடுவாங்களா? உறைந்துபோன மக்கள்!

முன்னர், பணியில் இருந்த வரை நிர்வாகத்திற்கு தெரியாமல் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களை மட்டும் தொடர்பு கொண்டு அவர்களிடம் நெறுங்கி பழகி வந்துள்ளார் அந்த நபர். இந்த பழக்கத்தையேக் காரணமாகக் காட்டி குறைந்த செலவில் சர்வீஸ் மற்றும் பிற சேவைகளை அவர்களுக்கு மட்டும் வழங்கி வந்திருக்கின்றார்.

புத்தம் புது காரை திருட ஹூண்டாய் முன்னாள் ஊழியர் போட்ட செம்ம ஸ்கெட்ச்! இப்படியும் திருடுவாங்களா? உறைந்துபோன மக்கள்!

இந்த நேரத்தில்தான் தனக்கு தேவையான சில விசித்திரமான செயல் முறைகளையும் அக்கார்களில் அரங்கேற்றியிருக்கின்றார் அந்த மர்ம நபர். அதாவது, காரின் திருட்டைத் தடுக்குகின்ற பாதுகாப்பு அம்சங்களை செயலிழக்கும் காரியங்களை அவர் செய்திருக்கின்றார்.

புத்தம் புது காரை திருட ஹூண்டாய் முன்னாள் ஊழியர் போட்ட செம்ம ஸ்கெட்ச்! இப்படியும் திருடுவாங்களா? உறைந்துபோன மக்கள்!

இதைத்தொடர்ந்தே, காரின் உரிமையாளருக்கே தெரியாமல் அவரை நோட்டமிட்டு, அக்கார் எங்கு எல்லாம் பயணிக்கின்றது, எந்த இடத்தில் நிறுத்தப்படுகின்றது என அனைத்து தகவலையும் அவர் சேகரித்து வந்துள்ளார். இதன்பின்னரே, ஏற்கனவே செய்து வைத்த சூழ்ச்சியை செயல்படுத்தி அக்காரை யாருக்கும் தெரியாமல் லாவமாக திருடி வந்துள்ளார்.

புத்தம் புது காரை திருட ஹூண்டாய் முன்னாள் ஊழியர் போட்ட செம்ம ஸ்கெட்ச்! இப்படியும் திருடுவாங்களா? உறைந்துபோன மக்கள்!

இவ்வாறு, ஜஹாங்கிர்புரி மெட்ரோ ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த க்ரெட்டா எஸ்யூவி காரையும் அந்த நபர் திருடியிருக்கின்றார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக காவலர்களின் உடனடி நடவடிக்கை மற்றும் சிசிடிவி போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் அவர் சிக்கியிருக்கின்றார்.

புத்தம் புது காரை திருட ஹூண்டாய் முன்னாள் ஊழியர் போட்ட செம்ம ஸ்கெட்ச்! இப்படியும் திருடுவாங்களா? உறைந்துபோன மக்கள்!

முன்னாள் ஹூண்டாய் சர்வீஸ் மைய ஊழியரின் இந்த விநோதமான திருட்டு யுக்தி வாகன உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையோர பழுதுநீக்கம் கடையில் வாகனத்தை விட்டால், ஒரிஜினல் பாகங்கள் களவு செய்யப்படுகின்றது என்ற அச்சத்தில்தான் பலர் கூடுதல் செலவாகினாலும் பரவாயில்லை என அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டர்களில் வாகனங்களை விட்டு வருகின்றனர்.

புத்தம் புது காரை திருட ஹூண்டாய் முன்னாள் ஊழியர் போட்ட செம்ம ஸ்கெட்ச்! இப்படியும் திருடுவாங்களா? உறைந்துபோன மக்கள்!

ஆனால், அவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தற்போதைய டெல்லி சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. எனவே, வாகன உரிமையாளர்கள் எந்த இடத்தில் வாகனத்தை சர்வீஸ் செய்தாலும் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, July 31, 2020, 16:29 [IST]
English summary
Hyundai Creta SUV Stolen By Ex Hyundai Service Centre. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+