Just In
- 25 min ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 2 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 3 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 3 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- News லண்டன் To சென்னை பறந்து வந்த மூத்த குடிமகன்! 1.5 லட்சம் செலவு! ஓட்டுக்கு வேட்டு வைத்த அதிகாரிகள்!
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Movies பீரியட்ஸ் நேரத்தில் அதை குடிக்க மாட்டேன்.. நான் ரொம்ப சுயநலக்காரி.. பிகில் நடிகை பகீர்!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
கொரோனா ஒழிப்பு போர்... பிரதமரின் பிஎம் கேர்ஸ் நிதிக்கு அள்ளிக்கொடுத்த ஹூண்டாய்!
கொரோனா ஒழிப்புப் போரில் பிரதமரின் பிஎம் கேர்ஸ் நிதிக்கு ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் பெரிய அளவிலான தொகையை கொடுத்து நெகிழ வைத்துள்ளது.
கொரோனா தாக்கம் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது. ஒரு புறம் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. மறுபுறத்தில் பெரும் பொருளாதார இழப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்த இரட்டை தாக்குதலால், கொரோனா எதிர்ப்பு போருக்கு அதிக அளவிலான நிதி உதவியும், இதர உதவிகளும் அரசாங்கத்திற்கு தேவைப்படுகிறது.
அந்தவகையில், கொரோனா எதிர்ப்பு போருக்கு தேவையான நிதியை பெறுவதற்காக பிஎம் கேர்ஸ் என்ற நிவாரண நிதி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவங்கினார். இந்த அசாதாரண சூழலில், பிஎம் கேர்ஸ் நிதி திட்டத்திற்கு நாட்டு மக்களுக்கும், நிறுவனங்களும் நிதி உதவியை வழங்குமாறும் பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்தார்.
இந்த வேண்டுகோளை ஏற்று, மக்களும், நிறுவனங்களும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. அந்த வகையில், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ், பிரதமரின் பிஎம் கேர்ஸ் நிதிக்கு ரூ.7 கோடியை வழங்கி உள்ளது.
இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ்எஸ் கிம் கூறுகையில்,"சமூகத்திற்கு சிறந்த திட்டங்களையும், உதவிகளையும் வழங்குவதில் எங்களது பவுண்டேஷன் முக்கிய நோக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த சவாலான தருணத்தில் பிஎம் கேர்ஸ் மூலமாக இந்திய மக்களுக்கு உதவி செய்வதை கடமையாக கருதுகிறோம். மனிதாபிமானத்துடன் இந்த மோசமான நிலையை கடப்பதற்கு இந்தியாவுடன் உறுதுணையாக இருப்போம்,"என்று தெரிவித்துள்ளார்.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் சென்னை அருகே கார் ஆலைகளை அமைத்துள்ளது. மேலும், கொரோனா தடுப்புப் பணிகளுக்காக அண்மையில் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி நிதி உதவியையும் வழங்கியது.
கொரோனா ஒழிப்புப் போரில் ஈடுபட்டுள்ள மருத்துவமனைகளுக்காக கொரியாவிலிருந்து ரூ.4 கோடி மதிப்புடைய பரிசோதனை உபகரணங்களையும், வென்டிலேட்டர் கருவிகளையும் கூட இறக்குமதி செய்து வழங்கியது.
அத்துடன், மருத்துவப் பணியாளர்களுக்கு தேவையான கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாக்கும் விசேஷ உடைகள், முக கவசங்கள் உள்ளிட்டவற்றை தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, ஹரியானா மற்றும் டெல்லி மாநில அரசுகளுக்கும் தயாரித்து வழங்கி வருகிறது.
மொத்தத்தில் கொரோனா எதிர்ப்பு தடுப்புப் பணிகளுக்காக தனது முழுமையான ஒத்துழைப்பையும், நிதி உதவிகளையும் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் வழங்கி வருகிறது. இதேபோன்று, மாருதி சுஸுகி, மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் அதிக அளவில் கொரோனா தடுப்புப் பணிகளில் தங்களதை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன.
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!