2 நாட்கள்தான்... 4,000 விசாரணைகள், 500 புக்கிங்குகள், 170 டெலிவரிகள்... ஹூண்டாயை திணற வைத்த மக்கள்!
லாக்டவுண் அமலில் இருக்கின்ற நிலையில் ஹூண்டாய் கார் விற்பனையைத் தொடங்கியிருக்கின்றது. இது தொடங்கிய இரண்டு நாட்களில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கார்களை வாங்குவதற்காக தொடர்பு கொண்டுள்ளனர். தொடர்ந்து பலர் புக்கிங்கையும் செய்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக இந்தியாவில் ஒரு மாதங்களையும் கடந்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கின்றது. ஏற்கனவே இரண்டு கட்டங்களாக அமலில் இருந்த ஊரடங்கு, தற்போது மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளது.

ஆனால், முந்தைய ஊரடங்கு காலத்தைப் போன்றஅல்லாமல் இப்போது லேசான தளர்வு வழங்கப்பட்டிருக்கின்றது. இதனால், ஒரு சில குறிப்பிட்ட நிறுவனங்கள் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கின்றது.

இந்த லேசான தளர்வானது கொரோனா வைரஸ் பாதிப்பின் அளவீட்டைக் கொண்டே அந்தந்த பகுதிகளுக்கு அரசு வழங்கி வருகின்றது. அதாவது, தற்போது அளவீட பயன்படுத்தப்படும் நிற குறியீடுகள் பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆகிய பகுதிகளைக் கருத்தில் கொண்டு தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

அந்தவகையில், அரசின் வழிக்காட்டுதல்களின் அடிப்படையில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் நாடு முழுவதும் 225 ஷோரூம்கள் வாயிலாக மீண்டும் வாகன விற்பனை பணியைத் தொடங்கியிருக்கின்றது.

ஆனால், முன்பெப்போதும் இல்லாத வகையில் ஷோரூம்களை மிகவும் தூய்மையாக மற்றும் அதிக பாதுகாப்பு வழிமுறைகளைக் கொண்டதாக அது திறந்திருக்கின்றது. குறிப்பாக, தனது ஷோரூம்களை நாடி வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நோய் தொற்று ஏற்படக்கூடாது என்பதற்காக சில வழிமுறைகளை அது கையாண்டுள்ளது.

இதே நடைமுறையைதான் நாடு முழுவதும் உள்ள அனைத்துறைகளும் தற்போது கையாண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே ஹூண்டாய் நிறுவனத்தின் தூய்மைப் பணிகள் மக்களுக்கு பெரியளவில் வித்தியாசமாக தெரியவில்லை. இருப்பினும், பலர் வியக்கும் வகையில் அந்நிறுவனத்தின் வாகனங்கள் தற்போது விற்பனையைப் பெற்றிருக்கின்றன.

அதிலும், குறிப்பாக லாக்டவுணிற்கு பின்னர், விற்பனைத் தொடங்கப்பட்ட இரண்டு நாட்களில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஹூண்டாயின் கார்கள்குறித்த விசாரணையைச் மேற்கொண்டிருக்கின்றனர்.

இதுமட்டுமின்றி புதிய கார்களை வாங்கும் விதமாக 500-க்கும் அதிகமானோர் புக்கிங்குகளை வாரி வழங்கியிருக்கின்றனர். இதைத்தொடர்ந்து, 170 பேருக்கு ஹூண்டாய் அதன் புதிய கார்களை டெலிவரியைச் செய்திருக்கின்றது.

கொரோனா வைரஸ் காரணமாக இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்து வரும் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்தியில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு கிடைத்திருக்கும் இந்த விற்பனை விகிதம், இந்திய வாகன சந்தைக்கே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், இக்கட்டான சூழ்நிலையில் தங்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பைக் கண்டு ஹூண்டாய் மகிழ்ச்சியில் திகைத்திருக்கின்றது.
கடந்த சில வாரங்கள் வரை ஒரு யூனிட் வாகனம்கூட விற்பனையாகத நிலையையே ஹூண்டாய் சந்தித்து வந்தது.

இந்நிலையில், அந்நிறுவனத்தை சற்றே உற்சாகப்படுத்தும் விதமாக விற்பனை திடீரென குவியத்தொடங்கியிருக்கின்றது. விரைவில் இந்தியாவில் செயல்படும் மற்ற நிறுவனங்கள் இதுமாதிரியான வரவேற்பைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்பு இரவு, பகல் பாராமல் வாகனங்களை உற்பத்திச் செய்து வந்த ஹூண்டாய், தற்போது ஒரே ஷிஃப்ட் என்னும் முறையில் உற்பத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றது. அதாவது, 12 மணி நேரம் அதன் பணியாளர்களை வேலை வாங்கி வருகின்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாகன உற்பத்திச் செய்யப்பட்டு வருகின்றது.

இதுதவிர சில அலுவலக பணியாளர்களுக்கு ஒர்க் ஃபிரம் ஹோம் திட்டத்திற்கு அனுமதி வழங்கியிருக்கின்றது.
இம்மாதிரியான சூழ்நிலையிலேயே ஹூண்டாய் நிறுவனம் இந்தியர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. அதிலும், வெறும் இரண்டு நாட்களில் இந்திய வாகன சந்தையே எதிர்பாராத வரவேற்பை அது பெற்றிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








