Just In
- 35 min ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 2 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 9 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 9 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
Don't Miss!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எகிறும் டிமாண்ட்... கார் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்தியது ஹூண்டாய்!
டிமான்ட் அதிகரித்து வருவதையடுத்து, சென்னை ஆலையில் கார் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்தி உள்ளது ஹூண்டாய் மோட்டார் நிறுவனம்.
கொரோனா பிரச்னையால் கடந்த மார்ச் 24ந் தேதி முதல் சென்னை கார் ஆலையில் உற்பத்தியை அடியோடு நிறுத்தி வைத்திருந்தது ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம். கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆலை மூடப்பட்டதால், பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஹூண்டாய் நிர்வாகத்திற்கும், பணியாளர்களுக்கும், டீலர்களுக்கும் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
இந்த நிலையில், கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இருந்து கொரோனா தொற்று குறைவான பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதுடன், தொழில் நிறுவனங்கள் இழப்பை ஈடுகட்டும் வகையில் குறைந்த அளவு பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த சூழலில், சென்னையில் உள்ள ஹூண்டாய் கார் ஆலையிலும் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இருந்து குறைந்த அளவு பணியாளர்களுடன் உற்பத்தி துவங்கப்பட்டது. தினசரி 200 கார்கள் என்ற இலக்குடன் உற்பத்தி நடந்து வந்தது.
இந்த நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பெரும்பாலான ஹூண்டாய் கார் ஷோரூம்கள் திறக்கப்பட்டதுடன், ஆன்லைன் மூலமாகவும் கார் விற்பனை நடைமுறைகள் எளிதாக்கப்பட்டன. இதனால், முன்பதிவு அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது.
மேலும், ஏற்றுமதி தேவையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, க்ரெட்டா, வெனியூ, வெர்னா உள்ளிட்ட கார்களுக்கு அதிக அளவில் முன்பதிவு செய்யப்படுகிறது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தேவை அதிகரித்து வருவதையடுத்து உற்பத்தியையும் அதிகரித்துள்ளது ஹூண்டாய்.
கடந்த மாதம் நாள் ஒன்றுக்கு 200 கார்கள் என்ற அளவில் இருந்த தினசரி உற்பத்தி தற்போது நாள் ஒன்றுக்கு 1,000 கார்களுக்கு மேல் என்ற அளவில் உயர்த்தப்பட்டுள்ளதாக ஃபைனான்ஸியல் எக்ஸ்பிரஸ் தள செய்தி தெரிவிக்கிறது.
தற்போது ஆலையில் 7,500 முதல் 8,000 பணியாளர்கள் இரண்டு ஷிஃப்ட்டுகளில் உற்பத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மொத்தம் 15,000 பணியாளர்களில் 50 சதவீத பணியாளர் எண்ணிக்கையுடன் தற்போது பணிகளை மீட்டெடுத்து வருவதாக அந்நிறுவன வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த மாதம் உள்நாட்டில் 6,883 கார்களையும், 5,700 கார்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், இது பன்மடங்கு குறைவு என்றாலும், விற்பனையை இந்த இக்கட்டான தருணத்தில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஹூண்டாய் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாகவே கருதப்படுகிறது.
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!