Just In
- 42 min ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 1 hr ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 3 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- 4 hrs ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
Don't Miss!
- News மேடையிலேயே நிலைக்குலைந்த நிதின் கட்கரி.. மயங்கி விழுந்ததால் பரபரப்பு.. ஷாக் வீடியோ
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Movies அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
ரூ.5 கோடி நிதியை அடுத்து தரமான கருவிகளை வாரி வழங்கும் ஹூண்டாய்.. தீவிரமாகும் கொரானவிற்கு எதிரான போர்
கொரோனாவிற்கு எதிரான போரில் பங்களிக்கும் விதமாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு அட்வான்ஸ்ட தொழில்நுட்பம் அடங்கிய ஆய்வு கருவிகளை ஹூண்டாய் நிறுவனம் வழங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
கொரோனா வைரசுக்கு எதிரான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. வைரஸ் தனது பரப்புதலை எந்தளவிற்கு அதிகரித்து வருகின்றதோ, அதைவிட பல மடங்கு வேகத்தில் அதனைக் கட்டுபடுத்துவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், அதனைக் கட்டுப்படுத்துவதில் சற்று சிக்கல் நிலவிய வண்ணம் உள்ளது.
ஆனாலும், கொரோனா வைரசுக்கு எதிராக தொடுக்கப்பட்டு வரும் போரில் எந்தவொரு நாடும் பின் வாங்காமல் முழு வீச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த போரில் வாகனம் சார்ந்து இயங்கும் நிறுவனங்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளது.
அவை, நிதியுதவி வழங்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல், தங்களது 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மருத்துவ உபகரணங்களைத் தயாரித்து வருகின்றன.
அந்தவகையில், பிபிஇ எனப்படும் பாதுகாப்பு கவசம், மாஸ்க், கண்ணாடி முக மூடிகள், கையுறை மற்றும் வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அவை தயாரித்து வழங்கி வருகின்றன.
இந்நிலையில், ஹூண்டாய் நிறுவனம் நோய் தொற்றை எளிதில் கண்டறியக் கூடிய கருவிகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்வான்ஸ்ட் தொழில்நுட்பம் பொருந்திய அந்த கருவிகள் ஒட்டுமொத்தமாக 25 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு ஆய்வு செய்யும் அளவிற்கு தகுதி வாய்ந்தவை என கூறப்படுகின்றது.
இம்மாதிரியான ஆய்வு கிட்டுகளை ஹூண்டாய் நிறுவனம், இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவை, தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஆய்வு கருவியைக் காட்டிலும் மிக வேகமாக ஆய்வின் முடிவுகளை வழங்கும் திறன் கொண்டவை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் உற்பத்தி மையத்தை வைத்து செயல்பட்டு வரும் ஹூண்டாய், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ. 5 கோடி நிதியை தமிழக அரசுக்கு வழங்கியிருக்கின்றது. கொரோனாவிற்கு எதிரான போரில் தமிழக அரசு வலு சேர்க்கும் விதமாக இந்த நிதியுதவியை அந்நிறுவனம் வழங்கியது. இதைத்தொடர்ந்தை தென் கொரிய நிறுவனமான ஹூண்டாய் அதிநவீன தொழில்நுட்பம் பொருந்திய ஆய்வு கருவிகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பிற்கு வழங்கியிருக்கின்றது.
இதுதவிர, அரசுக்கு கூடுதல் உதவியளிக்கும் விதமாக வென்டிலேட்டர்கள், மருத்துவ உபகரணங்கள், மாஸ்க்குகள் மற்றும் பிபிஇ உள்ளிட்டவற்றையும் ஹூண்டாய் நிறுவனம் போர் கால உதவியாக வழங்கி வழங்கியுள்ளது.
கொரோனா வைரசின் பரவும் தன்மை முந்தைய காலங்களைக் காட்டிலும் தற்போது மிக தீவிரமாகக் காணப்படுகின்றது. எனவே, இதனை ஒழித்து கட்டும் விதமாக அனைத்து துறைகளும் பேருதவிகளை வழங்கி வருகின்றன.
இதனடிப்படையிலேயே ஹூண்டாய் நிறுவனமும் இந்த தரமான கருவிகளை வழங்கி மக்களைக் காக்கும் முயற்சியில் பங்கேற்றிருக்கின்றது.
ஹூண்டாய் நிறுவனத்தைப் போலவே மஹிந்திரா குழுமம், டிவிஎஸ், சுசுகி உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன.
தொடர்ந்து, இம்மாதிரி உதவிகளை செய்து வரும் அதே வேலையில் இலவச சர்வீஸ், மெயின்டெனன்ஸ் உள்ளிட்டவற்றின் கால அவகாசத்தையும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் நீட்டித்து வருகின்றன.
மக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை உணர்ந்த உற்பத்தி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு உதவும் விதமாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றன.
தொடர்ந்து, ஒரு சில நிறுவனங்கள் அரசு உதவியளிக்கும் விதமாக கொரோனா வைரஸ்குறித்த விழிப்புணர்வு பணியிலும் ஈடுபட்டு வருகின்றன. முக்கியமாக கிராமப்புறங்களில் அவை இம்மாதிரியான பணிகளை செய்து வருகின்றன.
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!