Just In
- 53 min ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 2 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
லட்சக்கணக்கான கார்களை திரும்ப அழைக்கும் ஹூண்டாய்... காரணம் தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க..!
ஹூண்டாய் நிறுவனம் குறிப்பிட்ட ஆண்டில் தயாரிக்கப்பட்ட கார்களை தொழிற்சாலைக்கு திரும்பி அழைத்து வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணாலம்.
முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் குறிப்பிட்ட ஆண்டுகளில் தயாரித்த ஒரு சில மாடல் கார்களை மட்டும் தொழிற்சாலைக்கு திரும்பி வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான காரணத்தைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்ககும்.
தற்போது இந்தியாவில் 2020ம் ஆண்டிற்கான ஆட்டோ எக்ஸ்போ நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில், உலகளாவிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் அவற்றின் புதிய வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன.
ஹூண்டாய் நிறுவனுமும் ஒன்றுதான். ஒரு பக்கம் புதிய வாகனங்களை களமிறக்கும் பணியில் தீவிரம் காட்டி வரும் ஹூண்டாய், மறுபக்கம் தனது முந்தைய தயாரிப்புகளில் உள்ள கோளாறுகளை நிவர்த்தி செய்யும் பணியிலும் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.
அந்தவகையில், தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் கடந்த 2006 முதல் 2011 வரை தயாரிக்கப்பட்ட எலன்ட்ரா மற்றும் 2007 முதல் 2011 ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட எலென்ட்ரா டூரிங் ஆகிய மாடல்களை தான் ஹூண்டாய் தற்போது ரீகால் செய்துள்ளது.
குறிப்பாக இந்த ஆண்டுகளில் மட்டும் 4,30,000 வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவையனைத்திலும் எஞ்ஜினை எளிதில் தீ பீடிக்க வைக்கின்ற அளவிலான கோளாறுகள் இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த காரில் உள்ள ஆண்டிலாக் பிரேக் கம்ப்யூட்டரை தண்ணீர் எளிதில் சேதப்படுத்தும் நிறுவப்பட்டுள்ளது. இது, எல்கட்ரிக்கல் ஷார்ட் சர்க்யூட்டை ஏற்படுத்தி எஞ்ஜினில் தீ விபத்தை உருவாக்குகின்ற அளவிற்கு ஆபத்தானதாக உள்ளது.
இதன்காரணமாகவே, குறிப்பிட்ட ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட லட்சக்கணக்கான கார்களை ஹூண்டாய் திரும்ப அழைத்துள்ளது.
ஹூண்டாயின் இந்த திடீர் அழைப்பிற்கு ஏதேனும் முந்தைய தீ விபத்து சம்பவங்கள் இருக்கின்றதா என்ற கேள்வி எழும்புகின்றது. ஆனால், கடந்த காலங்களில் இதுபோன்ற தீ விபத்து சம்பவங்கள் மிகவும் குறைவாகவே நிகழ்ந்திருப்பதாக அது தெரிவித்துள்ளது.
ஆகையால், அவை அதிகரிப்பதற்கு முன்னதாகவே தகுந்த நடவடிக்கை எடுக்கும் விதமாக பாதிப்பிற்குள்ளாகிய வாகனங்களை திரும்பி அழைக்கும் நடவடிக்கையில் ஹூண்டாய் களமிறங்கியிருக்கின்றது.
இந்த அழைப்பில், பாதிப்புடன் காணப்படும் வாகனங்கள் சீரமைக்கப்பட்டு மீண்டும் அதன் உரிமையாளர்களிடமே வழங்கப்பட உள்ளது.
இதற்கான அனைத்து உபகரணங்களுடன் தயாராக இருக்கும்படி ஹூண்டாய் அதன் சர்வீஸ் மையங்களுக்கு உத்தரவுகளை வழங்கியுள்ளது. அதேசமயம், தீ விபத்து சம்பவங்களுக்கான அறிகுறி வெகு குறைவாகவே இருக்கின்றது. ஆகையால் வாடிக்கையாளர்கள் எந்த கவலையும் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கான ஆவணங்கள் சிலவற்றை ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே அமெரிக்க அரசாங்கத்திடம் வழங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில்கூட ஹூண்டாய் மற்றும் இதன்கீழ் இயங்கும் கியா நிறுவனத்தின் கார்கள் தானாக தீ பிடித்ததாக கூறப்பட்ட 3,100 புகார்களை அடுத்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த தீ விபத்தில் 103 காயங்கள் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து, மூன்று மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் விபத்தைச் சந்திக்காமல் தீ ஏற்பட்டதாக அதிர்ச்சிமிகுந்த தகவல் வெளியாகியது. அதில், பெரும்பாலும் 2011 முதல் 2014 வரை தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் சொனாட்டா மற்றும் சேன்டா ஃபே மாடல்களும், கியாவில் ஆப்டிமா மற்றும் சொரேன்டோ உள்ளிட்ட கார்களும் அதிகம் தீ விபத்தைச் சந்தித்துள்ளன. இவையும் அதே 2011-14 கலாகட்டத்தில் தயாரிக்கப்பட்டவைதான்.
இந்த சம்பவங்களுக்கு எஞ்ஜின் தோல்வியே மிக முக்கியமான காரணம் என கூறப்படுகின்றது. வெவ்வேறு உதிரிபாகங்கள் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து பெற்றதே இந்த சம்பவத்திற்கான முக்கிய காரணம் என்பது தெரியவந்தது.
இந்த கார்களும் பிற்காலங்களில் தொழிற்சாலைகளுக்கு வரவழைக்கப்பட்டு சீரமைத்து மீண்டும் வழங்கபட்டன. தற்போது மீண்டும் இதே மாதரியான ஓர் பணியைதான் ஹூண்டாய் அமெரிக்கா போன்ற ஒரு சில நாடுகளில் மேற்கொண்டு வருகின்றது.
Source: Auto Economic Times
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350