Just In
- 2 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 2 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 4 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 5 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஷோரூம்களில் முன்பதிவு மெல்ல அதிகரிக்கிறது... ஹூண்டாய் உற்சாகம்!
கொரோனா பிரச்னைக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட ஹூண்டாய் கார் ஷோரூம்களில் நேரடி முன்பதிவு மெல்ல அதிகரித்து வருகிறது. இது அந்நிறுவனத்திற்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
கொரோனா பிரச்னையால் கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக ஹூண்டாய் கார் ஷோரூம்கள் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில், பிரச்னை குறைவான பகுதிகளில் தனது ஷோரூம்களை உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறந்தது ஹூண்டாய் மோட்டார்ஸ்.
மேலும், நாடு முழுவதும் மொத்த ஹூண்டாய் ஷோரூம்களில் 35 சதவீதம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. மேலும், படிப்படியாக இதர பகுதிகளிலும் ஷோரூம்களை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், தனது ஷோரூம்களில் முன்பதிவு எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருவதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஆட்டோகார் இந்தியா தளத்திடம் பேசிய ஹூண்டாய் அதிகாரி தருண் கர்க், இதுவரை திறக்கப்பட்டுள்ள ஷோரூம்களில் 17,000 பேர் புதிய கார் வாங்குவதற்கான விசாரணைகளை செய்துள்ளனர்.
மேலும், 2,500 பேர் புதிய கார் வாங்குவதை உறுதி செய்யும் வகையில் முன்பதிவு செய்துள்ளனர். ஷோரூம்கள் மீண்டும் திறக்கப்பட்டது முதல் 1,600 கார்கள் டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளன. இதர பகுதிகளிலும் ஷோரூம்களை திறக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். எனவே, வரும் நாட்களில் முன்பதிவு மெல்ல அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தற்போது கிடைத்துள்ள முன்பதிவு எண்ணிக்கை வழக்கத்தைவிட குறைவுதான் என்றாலும், நிலைமை படிப்படியாக சீரடையும் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த 13ந் தேதி 450 முன்பதிவுகளை பெற்றோம். ஆனால், வழக்கமாக நாள் ஒன்றுக்கு 1,400 முன்பதிவுகளை பெற்று வந்தோம். இது விரைவில் சீரடையும் என்று நம்புகிறோம்.
கர்நாடகா, கேரளாவில் அனைத்து ஷோரூம்களையும் திறந்துவிட்டோம். பிற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு மற்றும் அரசு விதிமுறைகளை பின்பற்றி ஷோரூம்களையும், சர்வீஸ் மையங்களையும் திறக்க முயற்சித்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.
இதனிடையே, கொரோனா பாதிப்பால் கார் விற்பனையில் இந்த ஆண்டு கடும் சரிவு ஏற்படும் என்றும் ஹூண்டாய் தெரிவித்துள்ளது. அதாவது, இந்த ஆண்டு மொத்த விற்பனைியில் 20 சதவீதம் சரிவு ஏற்படும் என்று கணிப்பு தெரிவித்துள்ளது.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?