Just In
- 37 min ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 2 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 3 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 3 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- News ‛‛திமுக கண்ணில் வந்த தோல்வி பயம்’’.. வாக்காளர்கள் பெயர்களை நீக்கியது ஏன்? எல் முருகன் விமர்சனம்
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- Movies கில்லி படத்தில் வரும் விஜய்யின் வீடு எங்க இருக்கு தெரியுமா? செய்யாறு பாலு சொன்ன சுவாரசியத் தகவல்!
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் ஹூண்டாய் கார் ஷோரூம்கள் திறப்பு!
கொரோனா பாதிப்பு குறைவான இடங்களில் உள்ள ஹூண்டாய் கார் ஷோரூம்கள் மீண்டும் திறக்கப்பட்டதுடன், கார் விற்பனையும் மெல்ல சூடுபிடிக்கத் துவங்கி உள்ளது.
கொரோனா வைரஸ் பிரச்னையால் கடந்த ஒன்றரை மாதங்களாக கார் ஆலைகளும், ஷோரூம்களும் மூடப்பட்டுள்ளன. வரும் 17ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருந்தாலும், கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகள் பாதுகாப்பு வழிகாட்டு முறைகளுடன் துவங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கார், பைக் நிறுவனங்கள் கார் உற்பத்தி மற்றும் விற்பனையை துவங்குவதில் மும்முரம் காட்டி வருகின்றன. கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் டீலர்களையும் மீண்டும் திறந்து விற்பனையை துவங்கி இருக்கின்றன. இதன்படி, கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் உள்ள 225 ஹூண்டாய் கார் ஷோரூம்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த இரு தினங்களாக ஷோரூம்களில் கார்களுக்கான முன்பதிவு, விற்பனை பணிகள் பாதுகாப்பு விதிகளை பின்பற்றி நடந்து வருகிறது. கடந்த இரு தினங்களில் மட்டும் 4,000க்கும் மேற்பட்டோர் புதிய கார் வாங்குவது குறித்த விசாரணைகளை செய்துள்ளதாக ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரு நாட்களில் புதிய கார் வாங்குவதற்காக 500 பேர் முன்பதிவு செய்துள்ளனராம். அத்துடன், 170 கார்களை விற்பனை செய்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கார்களுக்கான புக்கிங் மற்றும் விற்பனை மெல்ல சூடுபிடிக்கத் துவங்கி இருக்கிறது.
மேலும், ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் மூலமாக 20,000 முன்பதிவுகள் வரை பெற்றிருப்பாதகவும் ஹூண்டாய் தெரிவித்துள்ளது. சென்னை ஆலையில் நேற்று முதல் உற்பத்திப் பணிகள் துவங்கப்பட்டு இருப்பதுடன், படிப்படியாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. ஆலையில் சமூக இடைவெளி மற்றும் உரிய பாதுகாப்பு விதிமுறைகளுடன் உற்பத்தி பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த மாதம் சென்னை கார் ஆலையில் 12,000 முதல் 13,000 கார்களை உற்பத்தி செய்வதற்கு ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. விற்பனை அதிகரிக்கும்போது, படிப்படியாக உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டவுடன் கார் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நிச்சயம் கார் நிறுவனங்களுக்கு உற்சாகத்தை தரும் விஷயமாக இருக்கும். ஏனெனில், கடந்த ஒன்றரை மாதங்களாக ஒரு யூனிட் கூட விற்பனை செய்ய முடியாமல் பெரும் முதலீட்டுடன் கார் நிறுவனங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளன. அங்கு பணியாற்றுவோருக்கும் இது மகிழ்ச்சி தரும் செய்தியாக அமையும்.
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி