Just In
- 5 min ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 5 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 5 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 6 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கொரோனாவால் ஆட்டோமொபைல் துறைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1,500 கோடி வருவாய் இழப்பு!
கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. இந்த சூழல், பெரு நிறுவனங்களை கூட திணற வைத்துள்ளது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் தனது கோர முகத்தை காட்டத் துவங்கியிருக்கிறது. இதுவரை 415 பேர் கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டு இருப்பதுடன், 8 பேர் இந்த கொடிய நோய்க்கு உயிர் இழந்துள்ளனர்.
இந்த நிலையில், கொரோனாவால் மொத்த உலகமும் ஸ்தம்பித்து நிற்கிறது. இதுவரை இல்லாத பெரும் அச்ச உணர்வையும், இழப்புகளையும் கொரோனா ஏற்படுத்தி உள்ளது.
யாரும் எதிர்பாராத இந்த கொள்ளை நோயை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தீவிரமான நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றன. அதன்படி, நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
இதனால், மக்கள் வெளியே வர முடியாத நிலை உருவாகி இருப்பதுடன், இயல்பு வாழ்க்கையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அனைத்து தொழில் மற்றும் உற்பத்தி மையங்கள் முடங்கி இருக்கின்றன.
இந்த நிலையில், கொரோனா பிரச்னை ஆட்டோமொபைல் துறைக்கு பெரிய அடியை கொடுத்துள்ளது. கடந்த ஓர் ஆண்டாகவே வாகன விற்பனை மந்தமாக இருந்த நிலையில், தற்போது பிஎஸ்6 வாகனங்களுக்காக பெரிய அளவிலான முதலீடுகளை வாகன நிறுவனங்கள் செய்துள்ளன.
மேலும், சில நிறுவனங்களும், டீலர்களும் கையில் இருப்பில் தேங்கிவிட்ட பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கு ஒரு வாரமே கால அவகாசம் உள்ளது. இந்த நெருக்கடியான நிலையில், இந்தியா ஸ்தம்பித்துள்ள நிலையில், விற்பனை அடியோடு முடங்கி உள்ளது.
இந்த சூழலில், கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1,500 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், அடுத்த ஒரு வாரம் முதல் 10 நாட்கள் ஆலைகள் மற்றும் டீலர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், ரூ.13,000 கோடி முதல் ரூ.15,000 கோடி வரை இழப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மொத்த உற்பத்தி திறனில் ஆட்டோமொபைல் துறை மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. அதாவது, மொத்த உற்பத்தியில் 7.5 சதவீதமும், ஆலை வாயிலான உற்பத்தித் துறையில் 49 சதவீதம் பங்களிப்பையும் வழங்கி வருகிறது.
இந்த சூழலில், இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கி வரும் ஆட்டோமொபைல் துறைக்கு ஏற்பட்டுள்ள இந்த இழப்பு, அரசின் வரி வருவாயிலும், வேலைவாய்ப்பிலும் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் ஒரு வாரம் கழித்தே, கொரோனா பாதிப்பின் வேகத்தை வைத்து அரசு முடிவுகளை எடுக்கும். அதன் பிறகே, ஆட்டோமொபைல் துறையின் செயல்பாடுகள் சீரடைய வாய்ப்புகள் உள்ளன.
Source: ET Auto
-
கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!