Just In
- 19 min ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 3 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 5 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 6 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
Don't Miss!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Movies கில்லி ரீ ரிலீஸ்.. ஆல் ஏரியாலயும் மாஸ்.. முதல் நாளில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா?
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
லாக்டவுன் முடிந்தாலும் வாகன உற்பத்தியை துவங்குவதில் ஏகப்பட்ட சவால்கள்!
கொரோனா லாக்டவுன் முடிந்தாலும், வாகன உற்பத்தியை துவங்குவதில் ஏகப்பட்ட சவால்கள் இருப்பதால் வாகன நிறுவனங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளன.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனாவால் தேசிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த வாரத்துடன் தேசிய ஊரடங்கு முடிந்துவிடும் என்று எதிர்பார்ப்பு மேலோங்கினாலும், கொரோனா பரவும் வேகம் காரணமாக, ஊரடங்கை உடனடியாக விலக்க முடியாத அளவுக்கு இக்கட்டான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் தொழிற்சாலைகள் செயல்பட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், வரும் 4ந் தேதி முதல் தொழிற்சாலைகளில் உற்பத்திப் பணிகளை துவங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. கார், பைக் உள்ளிட்ட அனைத்து வகையான வாகன நிறுவனங்களும் உற்பத்தியை துவங்குவதற்கு ஆவலோடு காத்திருக்கின்றன.
ஆனால், ஊரடங்கு விதிகளை தளர்த்தினாலும், உடனடியாக வாகன உற்பத்தியை துவங்குவதில் ஏகப்பட்ட சவால்களும், நடைமுறை சிக்கல்களும் இருக்கிறது. வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு நூற்றுக்கணக்கான சப்ளையர்களிடம் இருந்து உதிரிபாகங்கள் வர வேண்டி இருக்கும்.
இருப்பில் உள்ள உதிரிபாகங்களை வைத்து ஒரு சில வாரத்திற்கு உற்பத்தி செய்ய முடிந்தாலும், தொடர்ச்சியாக உற்பத்தியை செய்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றன. சில உதிரிபாக நிறுவனங்கள் அல்லது வாகன உற்பத்தி ஆலைகள் 'ரெட் ஸோன்' வளையப் பகுதியில் இருக்கின்றன. இதனால், அங்கு உற்பத்தி செய்ய முடியாத நிலை இருக்கிறது.
ஒன்றுக்கு ஒன்று சங்கிலித் தொடர் போல இருப்பதால், உதிரிபாகங்கள் சப்ளை முழுமையாக சீரடைந்தால் மட்டுமே வாகன உற்பத்தியை முழு வீச்சில் தொடங்க முடியும். அதேபோன்று, வாகன ஆலைகள் ஒரு மாதத்திற்கும் மேலாக மூடி கிடப்பதால், பராமரிப்புப் பணிகளை மேற்கொண்ட பின்னரே உற்பத்தி செய்ய முடியும்.
அதேபோன்று, பல ஆயிரம் பேர் பணிபுரியும் கார் ஆலைகளில் சமூக இடைவெளியை பின்பற்றுவதும், தொழிலாளர்களுக்கு தினசரி உடல் வெப்பநிலை பரிசோதனை செய்வதிலும் கால தாமதம் உள்ளிட்ட நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
அதேபோன்று, வாகன விற்பனையும் சீரடைந்தால் மட்டுமே உற்பத்தி செய்யும் வாகனங்களை டீலர்களுக்கு அனுப்புவதில் பயன் இருக்கும். இல்லையெனில், அதிக அளவில் இருப்பில் தேங்கும் அபாயம் இருக்கிறது. இதனை தவிர்க்க, விற்பனை சீரடைந்தால் மட்டுமே உற்பத்தியை துவங்குவது சிறப்பானதாக கார், பைக் நிறுவனங்கள் கருதுகின்றன.
மாருதி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வாகன உற்பத்தியை துவங்குவதற்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டும், அந்த நிறுவனங்கள் உற்பத்தியை துவங்குவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. இப்போது உற்பத்தி துவங்கினால், அது சரியானதாக இருக்காது என்றும் கருதுகின்றன.
எனவே, ஜூலை மாதத்திற்கு பின்னரே, நிலைமை சீரடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதுவும் கொரோனா முழுவதுமாக கட்டுக்குள் வந்தால் மட்டுமே முழு வீச்சில் வாகன உற்பத்திப் பணிகள் நடக்கும். எனவே, அடுத்த இரு மாதங்களுக்கு வாகன உற்பத்தித் துறைக்கும், இதனை நம்பி இருக்கும் பல லட்சம் தொழிலாளர்களுக்கும் கடினமான காலமாகவே இருக்கும்.
-
காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!