Just In
- 19 min ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 6 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 6 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 7 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இந்தியாவின் முதல் மாடிஃபை மஹிந்திரா எக்ஸ்யூவி500 விற்பனைக்கு.. அதுவும் ஸ்விஃப்டை விட கம்மி விலையில்!
மாடிஃபிகேஷன் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்களுக்கு இணையான வசதியைப் பெற்ற மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் செகண்ட் ஹேண்டில் விற்பனைக்கு விற்பனைக்கு. அதுவும் மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் காரைக் காட்டிலும் மிகக்குறைந்த விலையில் வந்துள்ளது.
தியாவின் மிகவும் புகழ்பெற்ற வாகன மாடிஃபிகேஷன் நிறுவனங்களில் டிசி டிசைன் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம், வாகனங்களுக்கு புதுவிதமான டிசைன் வழங்குதல் மற்றும் இன்டீரியரில் காணப்படும் வசதியை அதிகப்படுத்துதள் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த பணியின் அடிப்படையில் இதற்கு முன்பாக ஏராளமான பட்ஜெட் வாகனங்களை வெற லெவல் டிசைன் மற்றும் சொகுசு அம்சத்திற்கு இது அப்கிரேட் செய்திருக்கின்றது.
அந்தவகையில், தற்போது மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி500 காரை அந்நிறுவனம் பல கோடி மதிப்புள்ள லக்சூரி கார்களுக்கு இணையாக மாடிஃபை செய்திருந்தது. இந்த காரை மட்டுமின்றி டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா, மஹிந்திரா மராஸ்ஸோ உள்ளிட்ட ஏராளமான கார்களை அந்நிறுவனம் மாடிஃபை செய்திருந்தது.
இதுபோன்ற மாடிஃபிகேஷன் பெற்ற பல கார்கள் இந்தியாவின் முதல் மாடிஃபிகேஷன் கார் என்ற பட்டத்தை சூடியிருக்கின்றன.
அந்தவகையில், இந்தியாவின் முதல் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட கார்களில் ஒன்றான மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரைப் பற்றிய தகவலைதான் இங்கு நாம் பார்க்கவிருக்கின்றோம்.
இந்த காரைப் பற்றி நாம் ஏன் இங்கு பார்க்கிவிருக்கின்றோம் என்ற கேள்வி உங்களிடம் தோன்றலாம். வாருங்கள் அதையும் இந்த பதிவில் பார்த்துவிடலாம்.
டிசி நிறுவனத்தின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்ட பல கார்களில் மிக முக்கியத்தும் வாய்ந்தது மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி ரக கார். இந்தியாவின் முதல் மாடிஃபைட் கார் என்கிற பெறுமையையும் தாண்டி பல்வேறு சொகுசு வசதிகளை உள்ளிடக்கிய பட்ஜெட் என்பதே மிகச் சிறந்த விஷயமாக இருக்கின்றது.
இந்த அதீத சிறப்பு வாய்ந்த கார் தற்போது செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதற்கான அதிகாரப்பூர்வ காரணம் தெரியவில்லை.
ஆனால், மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் நல்ல முறையில் பராமரித்திருப்பது உறுதியாகியுள்ளது. இந்த காரை அதன் விற்பனையாளர் ரூ. 8.25 லட்சம் என்ற விலையில் விற்பனைச் செய்ய முடிவு செய்துள்ளார். இது புத்தம் புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் காரைவிட குறைந்த விலையாகும்.
விலை மட்டும்தான் மலிவு. ஆனால், அந்த காரில் காணப்படும் அம்சங்கள் பல கோடி ரூபாய் மதிப்பில் விற்பனையாகும் பிஎம்டபிள்யூ, பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் கார்களுக்கே டஃப் கொடுக்கின்ற வகையில் உள்ளது.
குறிப்பாக, இந்த காரின் இன்டீரியரில் அதிக சொகுசு வசதிகளைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு மெனக்கெடுதலை டிசி நிறுவனம் செய்திருக்கின்றது.
இதனை விளக்கும் வகையில் காரின் இன்டீரியர் இருக்கின்றது. ஏனென்றால், காரின் உள்பகுதியில் தரமான அம்சங்கள் உட்புகுத்தப்பட்டிருக்கின்றன. அதேசமயம், காரின் பழைய அம்சங்கள் ஒன்றுகூட அதில் தென்படவில்லை. குறிப்பாக, காரின் இருக்கைக்கு வழங்கப்பட்டிருக்கும் இளஞ்சிவப்பு நிறம் அடங்கியலெதர் இருக்கை மிகவும் ரிச் லுக்கை வழங்குகின்றது.
இத்துடன், இன்டீரியரின் குறிப்பிட்ட பகுதிகளில் ஆங்காங்கே ஃபாக்ஸ் கார்பன் பேனல்களும் கூடுதல் பிரிமியம் லுக்கிற்காக பொருத்தப்பட்டிருக்கின்றன. இதையடுத்து, சொகுசான இருக்கை அமைப்பிற்காக நடுவில் இருந்த இருக்கைகள் நீக்கப்பட்டு, புதிய கேப்டனை இருக்கைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. இவற்றை, எலக்ட்ரானிக் ஸ்விட்சுகளைக் கொண்டு கன்ட்ரோல் செய்ய முடியும்.
இதுமட்டுமின்றி, மையப்பகுதி இருக்கை பயணிகளும் கண்டுகளிக்கின்ற வகையில் 10 இன்ச்சிலான திரை, மடக்கி-விரித்துக்கொள்ளக்கூடிய டிரேக்கள், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்த லைட் சொகுசு நட்சத்திர விடுதிகளில் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும். குறிப்பாக, மாலை நேர பயணத்தின்போது இந்த மின் விளக்குகள் அலாதியான பயண அனுபவத்தை வழங்கும். இந்த ஓட்டுமொத்த மாறுதலும் ரூ. 6 லட்சம் என்ற விலையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
ஆனால், செகண்ட் ஹேண்டிலோ அது வெறும் ரூ. 8.25 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. ஆனால், இந்த கார் எத்தனை கிமீ தூரம் ஓடியிருக்கின்றது என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. இது சாவ்லா மோட்டார்ஸ் வாயிலாக விற்பனைக்கு வந்துள்ளது. மேலும், காரை வாங்க விரும்புவர்களுக்கான அனைத்து தகவலையும் அந்நிறுவனம் வீடியோ வாயிலாக வெளியிட்டுள்ளது. அதனை நீங்கள் கீழே காணலாம்.
மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூ500 எஸ்யூவி காரின் அடுத்த தலைமுறை காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதனை அடத்த ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்குக் கொண்டுவரவிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது, புதிய தலைமுறை கார் என்பதால் பல்வேறு சொகுசு அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால், இது தற்போது மாடிஃபிகேஷன்மூலம் பெறப்பட்டிருக்கும் அம்சங்களுக்கு இணையாக இருக்காது.
இருப்பினும், எஞ்ஜின் மற்றும் வெளிப்புறத்தில் தோற்றத்தில் லேசான மாற்றம் வழங்கப்படலாம். குறிப்பாக புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. பெட்ரோல் மாடலில் இடம்பெற இருக்கும் மஹிந்திராவின் புதிய எம் ஸ்டாலியன் டர்போ எஞ்ஜின் அதிகபட்சமாக 190 எச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.
இதேபோன்று, 2.0 லிட்டரில் கிடைக்கும் டீசல் எஞ்ஜின் அதிகபட்சமாக 185 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் இதில் எதிர்பார்க்கப்படுகின்றது. சில வேரியண்ட்டுகளில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்திற்கு வாய்ப்புள்ளது. இது இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
Source: New To Explore/YouTube
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?