அரசு வழங்கிய காரில் செல்ல முடியாமல் தவித்த போலீஸ்.. பிரச்னையை தீர்க்க என்ன செய்தார் தெரியுமா..?

காவலர்களுக்கு வழங்கப்படும் வழக்கமான காரை பயன்படுத்த முடியாமல் போலீஸ்கார் ஒருவர் விசித்திரமான சிக்கலைச் சந்தித்து வந்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

அரசு வழங்கிய காரில் செல்ல முடியாமல் தவித்த போலீஸ்.. பிரச்னையை தீர்க்க என்ன செய்தார் தெரியுமா..?

இந்தியாவின் மிக உயரமான போலீஸ் என்ற புகழை பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜக்தீப் என்ற காவலர் பெற்றிருக்கின்றார். இவர் எத்தனை அடி உயரம் என்று தெரிந்தால் நீங்களே ஆச்சரியத்தில் மூழ்கிவிடுவீர்கள். ஏனென்றால், அவர் நமது சத்தியராஜை விட 1 1/2 அடி அதிக உயரத்தில் இருக்கின்றார். அவரின் உயரம் 7.6 அடியாக இருக்கின்றது.

அரசு வழங்கிய காரில் செல்ல முடியாமல் தவித்த போலீஸ்.. பிரச்னையை தீர்க்க என்ன செய்தார் தெரியுமா..?

இந்த அதீத உயரத்தின் காரணமாக அவர் தற்போது பஞ்சாப் மாநிலத்தின் செலிபிரிட்டியாக மாறியிருக்கின்றார். இவரை பார்ப்போர் பலர், போலீஸ் என்றாலும்கூட அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க ஆசைப்படுகின்றனர்.

அரசு வழங்கிய காரில் செல்ல முடியாமல் தவித்த போலீஸ்.. பிரச்னையை தீர்க்க என்ன செய்தார் தெரியுமா..?

ஜக்தீப் சிங் கடந்த 19 ஆண்டுகளுக்கும் மேலாக காவலர் பணியை மேற்கொண்டு வருகின்றார். இவரைப் பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

ஜக்தீப் சிங் அதிக உயரத்தில் இருப்பதனாலயே ஒரு சில நேரங்களில் அசௌகரியமான உணர்வை அவர் எதிர்கொள்கின்றார். மேலும், இந்த அதீத உயரம் அவரின் வாழ்க்கை நடைமுறையையே மாற்றிவிட்டது.

அரசு வழங்கிய காரில் செல்ல முடியாமல் தவித்த போலீஸ்.. பிரச்னையை தீர்க்க என்ன செய்தார் தெரியுமா..?

குறிப்பாக, இவரின் உயரத்திற்கேற்ப சற்று உயர்த்தப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, காலணிகள் அவரின் விசாலமான கால்களுக்கு ஆர்டரின் பேரில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றது. இதேபோன்று, உடை விஷயத்திலும் அவருக்கென பிரத்யேகமாக தைத்து தரப்படுகின்றது.

இவ்வாறு, அனைத்து விஷயங்களிலும் ஜக்தீப் சிங்கிற்கென தனித்துவமாக பொருட்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.

அரசு வழங்கிய காரில் செல்ல முடியாமல் தவித்த போலீஸ்.. பிரச்னையை தீர்க்க என்ன செய்தார் தெரியுமா..?

ஆனால், வாகனம் சார்ந்த விவகாரத்தில் ஜக்தீப் சிறு பின்னடைவைச் சந்தித்திருக்கின்றார். இவரது பைக் அவரது உயரத்திற்கும், உடல் தோற்றத்திற்கும் சற்றும் உகந்ததாக இல்லை. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் ஜக்தீப் சிங்கின் தோற்றத்திற்கு ஸ்பிளெண்டர் பைக் சிறுவர்களின் விளையாட்டு பைக்கைப் போன்று காட்சியளிக்கின்றது.

அரசு வழங்கிய காரில் செல்ல முடியாமல் தவித்த போலீஸ்.. பிரச்னையை தீர்க்க என்ன செய்தார் தெரியுமா..?

இந்நிலையில், அவருக்கு பஞ்சாப் காவல்துறை அதிகாரப்பூர்வ அரசு வாகனமாக மஹிந்திரா பொலிரோ வழங்கியது. இந்த காரும் அவரது அசாதாரண உடல் தோற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.

அரசு வழங்கிய காரில் செல்ல முடியாமல் தவித்த போலீஸ்.. பிரச்னையை தீர்க்க என்ன செய்தார் தெரியுமா..?

குறிப்பாக அவரால் மற்றும் இறங்குவதில் அதிக சிக்கல் ஏற்பட்டது. ஆகையால், இந்த காரை அவர் மாடிஃபை செய்தாரா என்ற கேள்வியெழும்பலாம்..? இது அரசு வாகனம் என்பதால், அவர் பெரியளவில் மாடிஃபிகேஷன்களை மேற்கொள்ளவில்லை. மாறாக, காரின் உயரத்தை மட்டும் மாற்றியமைத்திருக்கின்றார். இது அவருக்கு முன்பைக் காட்டிலும் ஏறி, இறங்குவதற்கு சுலபமாக இருக்கின்றது.

அரசு வழங்கிய காரில் செல்ல முடியாமல் தவித்த போலீஸ்.. பிரச்னையை தீர்க்க என்ன செய்தார் தெரியுமா..?

இதற்காக லிஃப்ட் கிட்டை மட்டுமே அவர் மாடிஃபிகேஷனாக பயன்படுத்தியிருக்கின்றார். உண்மையைக் கூற வேண்டுமானால் ஜக்தீப் சிங், தி கிரேட் காலியை விட உயரமானவர் ஆவார். உயரம் மட்டுமில்லைங்க அவரது உடலும் சற்று அதிக எடையுடையதாக இருக்கின்றது.

அரசு வழங்கிய காரில் செல்ல முடியாமல் தவித்த போலீஸ்.. பிரச்னையை தீர்க்க என்ன செய்தார் தெரியுமா..?

இந்த நிலையிலேயே அவர் மஹிந்திரா காரை மாடிஃபை செய்துள்ளார். வேறேதேனும் சிறப்பு மாற்றங்களை அவர் மேற்கொண்டிருக்கின்றாரா என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

அரசு வழங்கிய காரில் செல்ல முடியாமல் தவித்த போலீஸ்.. பிரச்னையை தீர்க்க என்ன செய்தார் தெரியுமா..?

ஆனால், இந்த காரில்தான் தற்போது அவரது காவல் பணியினை மேற்கொண்டு வருகின்றார். காரில் செய்யப்பட்டட ஒரு சில மாற்றங்கள் வெளிப்படையாக தெரிகின்றன. குறிப்பாக, காரின் டயர் சற்று வெளியே நீண்டு காணப்படுகின்றது. மேலும், அது வழக்கமான மஹிந்திரா பொலிரோவைக் காட்டிலும் கூடுதல் உயரத்துடன் காட்சியளிக்கின்றது. இருப்பினும், ஜக்தீப் சிங் அந்த காரைக் காட்டிலும் அதிக உயரமாக இருக்கின்றார்.

அரசு வழங்கிய காரில் செல்ல முடியாமல் தவித்த போலீஸ்.. பிரச்னையை தீர்க்க என்ன செய்தார் தெரியுமா..?

மேலும், இந்த காரில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் எந்தளவு சட்டபூர்வமானவை என்பதுகுறித்த தகவல் எங்களுக்குத் தெரியவில்லை. இதுபோன்று மாடிஃபிகேஷன் செய்து பயன்படுத்தும் வாகனங்களுக்கு இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் அனுமதியில்லை.

அதற்கேற்ப வகையில், ஜக்தீப் சிங்கின் மஹிந்திரா காரில் பல்வேறு ஆஃப்டர் மார்க்கெட் வாகன ஆபரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பிடும் வகையில், பம்பர் மற்றும் காரின் வீல்களை சற்று உயர்த்துவதற்காக சில உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவையனைத்தும் மோட்டார் வாகன சட்டத்தின்படி அங்கீகரிக்கப்படாதையாகும்.

அரசு வழங்கிய காரில் செல்ல முடியாமல் தவித்த போலீஸ்.. பிரச்னையை தீர்க்க என்ன செய்தார் தெரியுமா..?

இதுபோன்ற மாற்றங்களை மேற்கொண்டும் அவர் காரில் அமரும்போது தலைப்பாகே காரின் ரூஃப் பகுதியில் உராயும் வகையில் இருக்கின்றது. இருப்பினும், சற்று அசௌகரியமான சூழல் மாறியிருக்கின்றது.

Source: History TV18/YouTube

More from DriveSpark

Article Published On: Friday, March 6, 2020, 18:17 [IST]
English summary
India’s Tallest Cop Modifies His Official Mahindra Bolero. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+