Just In
- 13 min ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 42 min ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 1 hr ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 2 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
Don't Miss!
- News சோகத்தில் முடிந்த ஈஸ்டர் பயணம்.. பஸ் விபத்தில் 45 பேர் உடல் கருகி பலி! 8 வயது சிறுமி படுகாயம்
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Movies Pandian stores 2: கல்யாண வைபோகத்தில் பங்கேற்ற பாண்டியன் குடும்பத்தினர்.. பதற்றத்தில் சரவணன்!
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஜீப் எஸ்யூவிகளுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்
கொரோனா பிரச்னையால் ஆட்டோமொபைல் துறை பெரும் கஷ்ட காலத்தில் உள்ளது. கடந்த இரு மாதங்களாக வருவாய் அடியோடு பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழிகளை கையில் எடுத்து வருகின்றன.
கொரோனா பிரச்னையால் ஆட்டோமொபைல் துறை பெரும் கஷ்ட காலத்தில் உள்ளது. கடந்த இரு மாதங்களாக வருவாய் அடியோடு பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழிகளை கையில் எடுத்து வருகின்றன.
அதன்படி, பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் வாடிக்கையாளர்கள் அல்லது வேலை இழப்பு, சம்பள குறைப்பு பிரச்னையில் சிக்கி இருக்கும் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் சிறப்பு கார் கடன் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. இந்த வரிசையில் ஜீப் கார் நிறுவனமும் இணைந்துள்ளது.
MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!
அனைவருக்கும் ஜீப் என்ற அடைமொழியுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்களது தற்போதைய பொருளாதார சூழலை பொறுத்து கார் கடனை தேர்வு செய்து கொள்ள முடியும்.
மாதச் சம்பளதாரர்கள் அதிகபட்சமாக 7 ஆண்டுகளில் கடனை மாதத் தவணைகளில் திருப்பிச் செலுத்தும் கால அளவுடன் சிறப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் மூன்று மாதங்களுக்கு குறைவான மாதத் தவணையை செலத்தும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. அதன்பிறகு, ஆண்டுதோறும் மாதத் தவணை குறிப்பிட்ட சதவீதம் அதிகரித்துக் கொண்டே செல்லும்.
பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடோ வங்கி மூலமாக கடன் வசதியை பெறும் தனது வாடிக்கையாளர்களுக்கு குறைவான வட்டி வீதத்தில் பெறும் வாய்ப்பு உள்ளதாகவும் ஜீப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆன்ரோடு விலையில் 90 சதவீதம் வரை கடனாக பெறும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
ஸ்டெப் அப் கடன் வசதி திட்டம் மூலமாக அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை மாத் தவணைகளை திருப்பிச் செலுத்தலாம். அதேபோன்று, முதல் 24 மாதங்களுக்கு குறைவான மாதத் தவணையை கட்டும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
அடுத்து பெண் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகளில் மாதத் தவணையை திருப்பிச் செலுத்தும் வாய்ப்பு வழங்கப்படுவதுடன், ஆன்ரோடு விலையில் 100 சதவீதம் கடன் பெறும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
இந்த சிறப்பு கார் கடன் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு தற்காலிகமாக தீர்வுடன் கூடிய சீக்கிரமே ஜீப் எஸ்யூவியை வாங்கும் வாய்ப்பை பெற முடியும் என்று கருதப்படுகிறது. கூடுதல் விபரங்களுக்கு அருகாமையிலுள்ள ஜீப் கார் ஷோரூமை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.