இனி இந்த டயரை வாங்குவது ரொம்ப சுலபம்... அதுவும் எந்தவித தொடர்பும் இல்லாமல் வாங்கலாம்... சூப்பர்ல!
நாட்டின் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஜேகே டயர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளை இனி வாங்குவது மிக சுலபம் ஆகும்.

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மிகப்பெரிய டயர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக ஜேகே டயர் மற்றும் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் உள்ளது. இந்நிறுவனமே தனது தயாரிப்புகளை தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

ஆன்லைன் வர்த்தக தளமான அமேசானில் தனது அனைத்து விதமான டயர்களையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. தொடர்பில்லா ஹோம் டெலிவரியை வழங்கும் விதமாக இந்த சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக ஜேகே டயர் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் சிறிய டயர்கள் மட்டுமின்றி அனைத்து விதமான டயர்களையும் மிக சுலபமாக டூர் டெலிவரி பெற முடியும். அதாவது, இருசக்கர வாகனங்களுக்கு தேவையான டயர்கள் முதல் பெரிய பயணிகள் வாகனங்களுக்கான டயர்களைகூட வீடு தேடி வரவழைக்க முடியும்.

இந்த வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காகவே கடந்த ஆகஸ்ட் 1ம் முதல் இரு நிறுவனங்களும் முயற்சி மேற்கொண்டு வந்தன. இதனடிப்படையில் தற்போது டூர் டெலிவரி சேவை தொடங்கப்பட்டிருக்கின்றது. ஹோம் டெலிவரி சேவையைத் தொடர்ந்து அமேசான் பிரைம் நாளில் டயர்கள் விற்பனைக்குக் கிடைப்பதற்கான வசதியையும் ஜேகே ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இதுகுறித்து ஜேகே டயர் அண்ட் இண்டஸ்ட்ரீஸின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குனர் சீனிவாசு அல்லாபன் கூறுகையில், "அண்மைக் காலங்களாக வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வர்த்தகத்தை நாட ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, அதன் தொடர்பு இல்லா பணம் செலுத்துதல் மற்றும் கொள்முதல் ஆகியவற்றை அதிக விரும்புகின்றனர். எனவேதான் அமேசான் இந்தியாவுடன் புதிய கூட்டணை நாங்கள் தொடங்கியிருக்கின்றோம்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தொடர்பில்லா டூர் டெலிவரி மூலம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்" என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமேசான் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஷாலினி புச்சலப்பள்ளி, "அமேசான்.இன் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பிரீமியம் வீச்சு டயர்களை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "புதிய சேவை அறிமுகத்தின் மூலம், வாகன பிரிவில் ஒரு வலுவான போர்ட்ஃபோலியோவை நாங்கள் தொடர்ந்து உருவாக்குவோம். இது வாடிக்கையாளர்களுக்கு பரந்த தேர்வு மற்றும் பாதுகாப்பான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும்" என கூறினார்.

தற்போதும் கொரோனா வைரசின் தாக்கத்தின் சற்றும் குறையாமல் குறையாமல் காணப்படுகின்றது. இருப்பினும், வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக மக்கள் தங்களின் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளன. இந்த நிலையிலேயே நாட்டின் ஒவ்வொரு துறையும் பழைய நிலைக்கு ஆரம்பித்திருக்கின்றன.

அந்தவகையிலேயே முந்தைய கொரோனா காலத்தில் இழந்து தவித்த விற்பனையை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியில் நிறுவனங்கள் களமிறங்கியிருக்கின்றன. அந்தவகையிலேயே, ஜேகே டயர் நிறுவனம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற வேண்டும் என்பதற்காக தொடர்பில்லா டூர் டெலிவரி சேவையை தொடங்கியிருக்கின்றது.

ஜேகே டயர் நிறுவனத்தைப் போலவே நாட்டின் சில முன்னணி நிறுவனங்களும் பழைய நிலை விற்பனையைப் பெற வேண்டும் என்பதற்காக சில தனித்துவமான சலுகை மற்றும் சிறப்பு திட்டத்தை அறிவித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








