160 சொகுசு கார்களை இலவசமாக வாரி வழங்கும் பிரபல நிறுவனம்.. எதற்காக தெரிஞ்சா அசந்துருவீங்க!
பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று 160க்கும் அதிகமான சொகுசு கார்களை வாரி வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸ் எனும் ஒற்றை கொள்ளைநோய் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. அந்த வைரஸ் ஒவ்வொரு நாளும் அதன் தீவிரத்தை காட்டுத் தீயைப் போல் அதிகரித்து வருகின்றது. இதனால், பல ஆயிரம் உயிர்கள் இதுவரை பரிதாபமாக உலகை விட்டு பிரிந்திருக்கின்றன.

இதுபோதாதென்று கூடுதலாக பல உயிர்களை காவு வாங்கும் விதமாக அது மிக அதி-தீவிரமாக உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கின்றது.
கண்களுக்குப் புலப்படாத இந்த வைரஸ் மனித இனத்திற்கே பேராபத்தை விளைவிக்கும் வகையில் தற்போது பரவி வருகின்றது. மேலும், மக்கள் மத்தியில உலகப் போரைக் காட்டிலும் அதிக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அச்சத்தை போக்கும் விதமாக உலக நாடுகள் பல கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றன. இதில் ஒரு சில நாடுகள் வேறொரு நாட்டுடன் இணைந்து தன் குடி மக்களைக் காக்கும் முயற்சி களமிறங்கி இருக்கின்றன.

அரசின் இந்த முயற்சிக்கு சில தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நிதி மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவி புரிந்து வருகின்றன.
இதேபோன்று, சில வாகன தயாரிப்பு நிறுவனங்கள் நிதி உதவி வழங்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல் உயிர் காக்கும் கருவிகளான வென்டிலேட்டர்கள் மற்றும் பாதுகாப்பு கவசங்களை உற்பத்தி செய்து வழங்கும் பணியில் களமிறங்கியிருக்கின்றன.

அந்தவகையில், பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர், கொரோனாவிற்கு எதிரான போல் ஏராளமான உதவிகளை செய்து வருகின்றது.
இதைத்தொடர்ந்து, தற்போது நூற்றுக் கணக்கான கார்களை உலக நாடுகளில் உள்ள செஞ்சிலுவை அமைப்புகளுக்கு வழங்க அது திட்டமிட்டுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து பணிகளும் தொய்வின்றி நடைபெற வேண்டும் என்பதற்காகவே ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை இலவசாக வழங்கி வருகின்ரது. இதனடிப்படையில், ஏற்கனவே ஒரு சில நாடுகளுகு இலவசமாக கார்கள் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக அது தெரிவித்துள்ளது.

இத்திட்டத்திற்காக 167-க்கும் அதிகமான கார்களை ஒதுக்கியதாக அந்நிறுவனம் தகவல்கள் வெளியிட்டிருந்தது. இதில், பிரிட்டிஷ் அரசுக்கு மட்டுமே 27 டிஃபென்டர்கள் உட்பட 60 கார்களை அது தானமாக வழங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

அவையனைத்தும் மருத்துவ பொருட்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக் தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதேபோன்று, ஸ்பெயின், ஃபிரான்ஸ், தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் செஞ்சிலுவை நிர்வாகங்களுக்கு ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் கார்களை அனுப்பி வைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அரசுடன் இணைந்து கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் அந்நிறுவனம் வலு சேர்த் வருகின்றது. அதாவது, 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் உதவி மூலம் மருத்துவ உபகரணங்கள் தயாரித்தல் மற்றும் பாதுகாப்பு கவசங்களை தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை அது செய்து வருகின்றது. இத்துடன், ஆராய்ச்சி மற்றும் பொறியியல் போன்றவற்றிலும் தனது உதவியை ஜாகுவார் வழங்கி வருகின்றது.

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தை உலகின் பல வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களால் இயன்ற வரைலான உதவிகளை கொரோனாவிற்கு போராட்டத்தில் வழங்கி வருகின்றன. இந்தியாவைச் சேர்ந்த டாடா நிறுவனம்கூட அண்மையில் ரூ. 1,500 கோடியை வாரி வழங்கியிருந்தது. இதேபோன்று, பல நிறுவனங்கள் பல விதமான வழிகளில் உதவிகளைச் செய்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








