Just In
- 51 min ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 3 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 3 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 3 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- Movies விரட்டி விட்ட விஷால்.. கடுப்பான பயில்வான் ரங்கநாதன்.. மனுவே நிரப்ப தெரியாது என மரண கலாய்!
- News ‛‛திமுக கண்ணில் வந்த தோல்வி பயம்’’.. வாக்காளர்கள் பெயர்களை நீக்கியது ஏன்? எல் முருகன் விமர்சனம்
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
டாடா, மஹிந்திராவை ஓவர்டேக் செய்த கியா... இந்தியாவின் 3-வது பெரிய கார் நிறுவனமாக மாறியது!
கடந்த மாதம் கார் விற்பனையில் மஹிந்திரா, டாடாவை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் 3வது பெரிய கார் நிறுவனம் என்ற பெருமையை கியா மோட்டார்ஸ் பெற்றிருக்கிறது.
தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவக்கியது. முதல் மாடலாக வந்த செல்டோஸ் கார் விற்பனையில் சக்கை போடு போடுகிறது. இந்தியாவில் எதிர்பாராத அளவிற்கு செல்டோஸ் காரின் விற்பனை அமைந்துள்ளது.
மாதத்திற்கு மாதம் கியா செல்டோஸ் காரின் விற்பனை அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 15,450 செல்டோஸ் கார்கள் விற்பனையாகி அசத்தியது. இதனால், ஒரே கார் மாடலை வைத்து இந்தியாவின் டாப் -5 கார் நிறுவனங்களின் பட்டியலில் நுழைந்தது கியா மோட்டார்ஸ்.
இந்த நிலையில், கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் தனது இரண்டாவது மாடலாக கார்னிவல் எம்பிவி காரை கியா மோட்டார்ஸ் களமிறக்கியது. இந்த காரின் டெலிவிரி பணிகளும் கடந்த மாதம் பிற்பாதியில் துவங்கப்பட்டன. செல்டோஸ், கார்னிவல் கார்களின் விற்பனையின் மூலமாக கியா மோட்டார்ஸ் இந்திய கார் மார்க்கெட்டில் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
அதாவது, மாருதி சுஸுகி, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கு அடுத்து விற்பனையில் இந்தியாவின் மூன்றாவது பெரிய கார் நிறுவனம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. கடந்த மாதம் மொத்தமாக 15,644 கார்களை கியா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது.
அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில், கடந்த மாதம் 14,024 செல்டோஸ் எஸ்யூவிகளையும், 1,620 கார்னிவல் கார்களையும் கடந்த பிப்ரவரியில் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி மிக குறுகிய காலத்தில் இந்தியாவின் மூன்றாவது பெரிய கார் நிறுவனம் என்ற பெருமையை கடந்த மாதம் பெற்றிருக்கிறது கியா மோட்டார்ஸ்.
இந்த சூழலில், தனது வர்த்தகத்தை ஸ்திரமாக கொண்டு செல்ல ஏதுவாக புதிய கார் மாடல்களை கொண்டு வருவதற்கும் கியா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் பண்டிகை காலத்தில் சொனெட் என்ற புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை கியா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் அடிப்படையில் இந்த புதிய சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் எஞ்சின் தேர்வுகள்தான் இதிலும் பயன்படுத்தப்படும். இந்த மாடலும் வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது.
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!