Just In
- 1 hr ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 1 hr ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 1 hr ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 2 hrs ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
Don't Miss!
- News தமிழ்நாட்டின் 26 வருட கனவு.. நிஜமாகும் அதிசயம்.. சென்னை டூ குமரி.. ரயில் பயண நேரம் அடியோடு மாறுது!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Movies Baakiyalakshmi serial: பழனிச்சாமி -பாக்கியா திருமணம்.. செல்வி சொன்ன விஷயம்.. உறைந்த பழனிச்சாமி!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆன்லைன் மூலம் எளிதாக கார் வாங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது மஹிந்திரா
கொரோனாவால் ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல்களை மனதில் வைத்து, முழுக்க முழுக்க ஆன்லைன் மூலமாக கார் வாங்கும் திட்டத்தை மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் மட்டும் காலை முதல் மாலை வரை வர்த்தக செயல்பாடுகளும், மக்கள் நடமாடுவதற்கும் விதிகளில் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி, கார் நிறுவனங்கள் வர்த்தக செயல்பாடுகளை துவங்கி இருக்கின்றன. எனினும், கொரோனா அச்சம் காரணமாக, வாடிக்கையாளர்கள் ஷோரூம்களுக்கு வர தயக்கம் காட்டும் வாய்ப்புள்ளது.
இதனை பயன்படுத்தி, கார் நிறுவனங்கள் வர்த்தக செயல்பாடுகளை துவங்கி இருக்கின்றன. எனினும், கொரோனா அச்சம் காரணமாக, வாடிக்கையாளர்கள் ஷோரூம்களுக்கு வர தயக்கம் காட்டும் வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், வீடுகளில் இருந்தே கார் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக வாங்கும் வசதியை கார் நிறுவனங்கள் ஏற்படுத்தி கொடுத்து வருகின்றன. அந்த வகையில், மஹிந்திரா நிறுவனமும் தற்போது ஆன்லைன் மூலமாக கார் விற்பனை செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது.
முழுக்க முழுக்க ஆன்லைன் மூலமாகவும், மிக எளிதான நடைமுறைகளுடன் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மஹிந்திரா Own-Online என்ற பெயரில் இந்த திட்டம் குறிப்பிடப்படுகிறது.
புதிய மஹிந்திரா கார்களை முன்பதிவு செய்வது, பழைய வாகனங்களுக்கான உடனடியாக எக்ஸ்சேஞ்ச் மதிப்பு பெறுவது, கடன் வசதி திட்டங்கள், வீட்டிலேயே கார் டோர் டெலிவிரி பெறுவது உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் ஆன்லைன் மூலமாகவே செய்து கொள்ளலாம் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.
இந்த அனைத்து நடைமுறைகளும் வெறும் 4 படிகளில் முடித்துவிடலாம் என்றும் மஹிந்திரா தெரிவித்துள்ளது. இதற்காக, நாடு முழுவதும் உள்ள 270 மஹிந்திரா டீலர்கள் மற்றும் 900 விற்பனை மற்றும் சேவை மையங்கள் ஆன்லைன் மூலமாக இணைக்கப்பட்டுள்ளன.
டீலர்களில் உள்ள பணியாளர்களும் இந்த புதிய ஆன்லைன் நடைமுறையில் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் வகையில் பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.
மஹிந்திரா கார்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடி சலுகை விபரம், பதிவுக் கட்டணம், இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இந்த ஆன்லைன் கார் வாங்கும் நடைமுறையில் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள முடியும்.