Just In
- 18 min ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 22 min ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 1 hr ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 3 hrs ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
Don't Miss!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
உயிர் காப்பான் தோழன்... மீண்டும் ஒரு தரமான அறிவிப்பை வெளியிட்ட மஹிந்திரா... சந்தோஷத்தில் மக்கள்..!
கொரோனாவிற்கு எதிரான போரில் கூடுதல் பங்களிக்கும் விதமாக தரமான அறிவிப்பை மஹிந்திரா குழுமம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
கொரோனா வைரசுக்கு எதிரான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. இந்த போரில் எப்படியாவது வெற்றிப் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக அனைத்துத்துறை சார்ந்த நிறுவனங்களும் பெரும் உதவிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன. இதில், வாகனத்துறை சார்ந்து இயங்கும் நிறுவனங்களின் பங்கு இன்றியமையாததாக இருக்கின்றது.
அதிலும், வாகன உற்பத்தியை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள் தற்போது வரை உதவிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன.
அந்தவகையில், மஹிந்திரா நிறுவனம் முன்னதாக நிதியுதவி, பாதுகாப்பு கவசங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு உதவிகளை செய்தது.
இதைத்தொடர்ந்து, உயிர் காக்கும் கருவியான வெண்டிலேட்டர்கள் மற்றும் பாதுகாப்பு கவசங்களான கையுறை, முகமூடிகள் உள்ளிட்டவற்றையும் அது தயாரித்தது.
இதைத்தொடர்ந்து, தற்போது இலவச ஆம்புலன்ஸ் சேவையையும் அது அறிவித்துள்ளது. இந்த சேவைக்காக மஹிந்திரா குழுமத்தின்கீழ் இயங்கும் மஹிந்திரா லாகிஸ்டிக்ஸ் லிமிடெட்டின் (எம்எல்எல்) வாகனங்களை அது பயன்படுத்த இருக்கின்றது.
இந்த சிறப்பு சேவை மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் அது உதவி செய்ய இருக்கின்றது. வைரசுக்கு எதிரான போரில் கூடுதல் பங்கினை அளிக்கும் விதமாக இந்த இலவச அவசர வாகன சேவையை மஹிந்திரா நிறுவனம் தொடங்கியிருக்கின்றது.
அவசர வாகன சேவையான இது ஏற்கனவே தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டதாக அது தகவல் தெரிவித்துள்ளது.
இந்த சேவை ஆரம்பகட்டமாக தொடங்கப்பட்டிருப்பதால் சைபராபாத், சங்கரெட்டி மற்றும் ரச்சகொண்ட உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் மஹிந்திரா செய்து வருகின்றது. இதில், சில மின்சார வாகனங்களையும் பயன்படுத்த இருப்பதாக மஹிந்திரா அறிவித்துள்ளது. குறிப்பாக, இந்த சேவைக்காக எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்போவதில்லை அது தெரிவித்துள்ளது. ஆகையால், முழுக்க முழுக்க கட்டணமில்லா சேவையாகவே இது இயக்கப்பட இருக்கின்றது.
மேலும், மக்கள் இந்த சேவையை 24*7 என எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையில் கணிசமான வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட இருப்பதால் ஒரு சிலருக்கு முன்னுரிமையின் அடிப்படையில் முக்கியத்துவம் வழங்கப்பட இருக்கின்றது.
குறிப்பாக, வயது மூத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தனியாக வாழும் பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட இருப்பதாக எம்எல்எல் தெரிவித்துள்ளது.
தற்போது, ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் நிலவுவதால் வாகன போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆள் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்கின்றது.
இந்நிலையில், உயிர் காப்பான் தோழன் என்பதை நிரூபிக்கும் வகையில் மஹிந்திரா நிறுவனம், ஆபத்தில் வாடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு சிறப்பு உதவியை வழங்க இருக்கின்றது.
ஆகையால், அவசர வாகனமான 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கிடைக்காத சூழ்நிலையில் மஹிந்திரா நிறுவனத்தின் இந்த சேவையை எப்போது வேண்டுமானால் பொதுமக்கள் தொடர்பு கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதேசமயம், இந்த வாகனம் கொரோன தொற்றுடையவர்களை மட்டுமே கையாள இருப்பதால் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை, வாகனம் மற்றும் ஓட்டுநர்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது.
அது, பயனருக்கும் பொருந்தும். அதாவது, ஒவ்வொரு முறையும் நோயாளியைக் கையாளும் முன்பு மற்றும் பின்பு, வாகனத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட இருக்கின்றன.
இது கொரோனா தொற்றுடையவர்களைக் கையாளும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசமாக செயல்படும். இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, பணியாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உறை உடை மற்றும் கையுறைகள் வழங்கப்பட இருக்கின்றன.
இந்த சிறப்பு சேவை தெலுங்கானாவில் மட்டும் தொடங்கப்பட்டிருக்கும்நிலையில், கூடிய விரைவில் இந்தியாவின் மற்ற நகரங்களிலும் அறிமுகம் செய்ய இருப்பதாக மஹிந்திரா அறிவித்துள்ளது. மஹிந்திராவின் இந்த முயற்சிக்கு மக்கள் பாராட்டையும், வரவேற்பையும் ஒருசேர தெரிவித்து வருகின்றனர்.
-
உலகின் பவர்ஃபுல் ஹார்பர் கிரேன் இதுதான்.. எங்கே வேணும்னாலும் நகர்ந்து போகும்.. 300டன்னைகூட அசால்டா தூக்கிரும்!
-
பொண்ணு ஆசைப்பட்டதற்காக 3 கோடி ரூபாய் காரை பரிசளித்த அப்பா! இதுக்கு முன்னாடி யாருமே இந்த காரை வாங்குனது இல்ல!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!