ஆபத்தான சாலையை அசால்டாக கடந்த மஹிந்திர கார்... இந்த ரோட்ல வண்டி ஓட்ட தனி தைரியம் வேணும்.. உதற வைக்கும் வீடியோ!
மிக ஆபத்தான சாலையை மஹிந்திரா சவாரி கார் மிக அசால்டாக கடக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்த சுவாரஷ்யத் தகவலைக் கீழே காணலாம்.

பார்ப்போரை ஒரு கணம் உறைய வைக்கின்ற வகையில் அதிர்ச்சி மிகுந்த வீடியோக்கள் பல இணையத்தில் உலா வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வரிசையில் மஹிந்திரா நிறுவனத்தின் சவாரி கார் பற்றிய வீடியோ புதிதாக இணைந்துள்ளது. வீடியோவில், அதிக ஆபத்தான மலைப் பாதையில், அதிக வேகத்தில் பாய்ந்தோடும் நீர் வீழ்ச்சியை கார் அசால்டாக கடந்து செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

இதுகுறித்த வீடியோவையே சூப்பர் கார் ப்ளாண்டே முகப்புத்தக பக்கம் வெளியிட்டுள்ளது. இத்தளம் சூப்பர் கார் மற்றும் புதிய விலையுயர்ந்த கார்களை ரிவியூ செய்து வீடியோக்களை வெளியிடும் தளம் ஆகும். யுட்யூபை மையமாகக் கொண்டு இயங்கும் இத்தளம் அவ்வப்போது பேஸ்புக்கிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றது. அந்தவகையில், அதன் முகப்புத்தக பக்கத்திலேயே மஹிந்திரா சவாரி காரின் சாகச வீடியோவை அது பகிர்ந்துள்ளது.

ஹிமாலயா மலையை எல்லைப் பகுதியைப் பகிர்ந்து கொள்ளும் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்திலேயே இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. வீடியோ எடுக்கப்பட்ட இடமும் ஹிமாலய மலையின் ஓர் பகுதியாகும். இப்பகுதி மிகுந்த ஆபத்தான மலைப் பாதைக்கு பெயர்போன இடமாகும். இதன் சாலைகள் வழக்கமான நேரங்களிலேயே அதிக சவால்களை ஏற்படுத்தக்கூடியவை.

இம்மாதிரியான சூழ்நிலையில் நீர் வீழ்ச்சியில் நீரோட்டம் அதிகரித்துக் காணப்படுகின்ற வேலையிலேயே மஹிந்திரா சவாரி கார் துணிச்சலுடன் அப்பாதையில் இயக்கப்பட்டிருக்கின்றது. எனவேதான் இந்த விடீயோ தற்போது இணையத்தை ஆக்கிரமிப்பு செய்கின்ற வகையில் வைரலாகி வருகின்றது. இதுபோன்ற பாதையில் வாகனத்தை இயக்குவது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய செயலாகும்.

இருப்பினும், ஓட்டுநர் மிக சாமர்த்தியமாக செயல்பட்டு அதிக வேகத்தில் பாய்ந்துக் கொண்டிருந்த நீர் வீழ்ச்சியைக் கடந்தது சென்றிருக்கின்றார். இந்த வீடியோ பார்ப்போரின் அடிய வயிற்றையே கலக்கச் செய்கின்ற வகையில் திக் திக் அனுபவத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்றது. அவ்வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
மாலைச் சாலைகளுக்கு ஏற்ற திறன் கொண்ட காராக மஹிந்திர சவாரி உள்ளது. இது ஓர் எம்யூவி ரக காராகும். எந்த மாதிரியான கரடு முரடான சாலையாக இருந்தாலும் இது மிக சுலபமாக கடந்துவிடும். எனவேதான் மலைப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டிருக்கும் எஸ்யூவி அல்லது எம்யூவி ரக கார்களையே தங்களின் விருப்பமான வாகனமாக தேர்வு செய்கின்றனர்.

அதேசமயம், என்ன அதி திறன் கொண்ட காராக இருந்தாலும் இதுமாதிரியான மிக அதிக வேகத்தில் ஓடக் கூடிய நீர் வீழ்ச்சியைக் கடப்பது பேராபத்தை விளைவிக்கும். எந்த இடத்தில் பள்ளம், மேடு இருக்கிறது என்பதையே இதுமாதிரியான சாலைகளில் கண்டறிய முடியாது. ஆகையால், இதுபோன்ற சூழ்நிலையில் வேறு பாதையைத் தேர்வு செய்வதே சிறந்தது.

ஆனால், மஹிந்திரா சவாரி காரின் ஓட்டுநர் உள்ளூர் ஓட்டுநர் என்பதால் மிக சாமர்த்தியமாக அப்பாதையைக் கடந்திருக்கின்றார். குறிப்பாக, அச்சாலையைப் பற்றி அவர் முழுவதுமாக அறிந்திருந்த காரணத்தினால் எந்த சிரமத்தை அவர் சந்திக்கவில்லை. குறிப்பாக, நீரின் வேகத்திற்கு ஏற்ப காரின் வேகத்தையும், திசையையும் திருப்பி அவர் சென்ற விதம் பாராட்டிற்கு உரியது.

மஹிந்திரா சவாரி ஓர் 9 இருக்கைக் கொண்ட காராகும். இதில் கூடுதலாக சிலர் மேற்கூரை மீது ஏற்றப்பட்டிருப்பதையும் நம்மால் காண முடிகின்றது. ஆகையால், காரின் அதிக எடையும் ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவியது என்றே கூறலாம். நீரின் அதிக வேகத்தில் மெல்லிய எடைக் கொண்ட வாகனம் கடந்திருந்தால் நிலைமை சற்றே மோசமானதாகியிருக்கும்.


Click it and Unblock the Notifications








