Just In
- 1 hr ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 3 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 6 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 7 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
செம கெத்து... சத்தமே இல்லாமல் மஹிந்திரா செய்த தரமான சம்பவம்... என்னவென்று தெரியுமா?
சத்தமே இல்லாமல் தரமான சம்பவம் ஒன்றை மஹிந்திரா செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கான டிமாண்ட் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் ரக கார்களை இந்திய வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். இவற்றின் விலை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் இருப்பதுதான் இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்திய மார்க்கெட்டின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வெனியூ உள்ளிட்ட கார்கள் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்திருக்கின்றன. அத்துடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரும் வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கும் மாடலாக உள்ளது.
எஸ்யூவி கார்களை தயாரிப்பதில் புகழ்பெற்ற இந்தியாவின் மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து வெளிவரும் மாடல்தான் எக்ஸ்யூவி300. கடந்த 2019ம் ஆண்டு காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14), எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி காரை மஹிந்திரா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த சூழலில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனையில் தற்போது புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
ஆம், இந்தியாவில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை என்ற புதிய மைல்கல்லை மஹிந்திரா எக்ஸ்யூவி300 எட்டியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது முதல் 40,503 எக்ஸ்யூவி300 கார்களை விற்பனை செய்து மஹிந்திரா நிறுவனம் அசத்தியுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரை வாடிக்கையாளர்கள் எவ்வளவு விரும்புகின்றனர் என்பதற்கு இந்த மைல்கல் ஒரு உதாரணம்.
மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரை பொறுத்தவரை டீசல் வேரியண்ட்களைதான் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். மொத்த விற்பனையில் 72 சதவீதம் டீசல் வேரியண்ட்களில் இருந்துதான் கிடைத்துள்ளது. அதே சமயம் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் பெட்ரோல் வேரியண்ட்களை 28 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே தேர்வு செய்துள்ளனர்.
மஹிந்திரா நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2,132 எக்ஸ்யூவி300 எஸ்யூவி கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் எக்ஸ்யூவி300 காரின் மொத்த விற்பனை 40,503 யூனிட்களாக அதிகரித்துள்ளது. சக்தி வாய்ந்த இன்ஜின்கள், அட்டகாசமான வசதிகள் மற்றும் சவாலான விலை நிர்ணயம் ஆகிய காரணங்களால்தான் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வெற்றிகரமான மாடலாக வலம் வருகிறது.
அத்துடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் கவர்ச்சிகரமான டிசைனும் வாடிக்கையாளர்களை கவர ஒரு காரணமாக இருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில், 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், சில்வர் ரூஃப் ரெயில்ஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில், 7.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இதில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அத்துடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரில் டீசல் இன்ஜின் தேர்வும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.
இந்த 1.5 லிட்டர் டீசல் யூனிட் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி காரானது, 8.30 லட்ச ரூபாய் முதல் 12.69 லட்ச ரூபாய் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 காருக்கு மற்றொரு பெருமையும் உண்டு.
இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமாக வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த முதல் மஹிந்திரா வாகனம் என்ற பெருமை எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரைதான் சேரும். மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் பிஎஸ்-6 பெட்ரோல் மாடலானது, கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதியன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியாவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன. அதற்கு இன்னும் சுமார் 5 மாதங்கள் இருந்த நிலையிலேயே எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் பிஎஸ்-6 வெர்ஷனை மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலம் அடைந்து வருகின்றன. எனவே அதற்கு ஏற்ப வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷனை மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!