Just In
- 32 min ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 2 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 3 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 3 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- Movies கில்லி படத்தில் வரும் விஜய்யின் வீடு எங்க இருக்கு தெரியுமா? செய்யாறு பாலு சொன்ன சுவாரசியத் தகவல்!
- News கரன்ட் இல்லாத நேரங்களிலும் இயங்குவதுதான் இன்வெர்ட்டர் ஏசியா?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் வருகை குறித்து புதிய தகவல்!
மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் வருகை குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றமாகவும் அமைந்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிரிமீயம் தேர்வாக அமைந்துள்ளது. பிரம்மாண்ட தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின், நவீன தொழில்நுட்ப வசதிகள் என வாடிக்கையாளர்களின் முக்கிய தேர்வாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் அடிப்படையிலான மின்சார மாடலும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதாவது, இந்த ஆண்டு மத்தியில் அல்லது இரண்டாம் பாதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியின் அறிமுகம் அடுத்த ஆண்டுதான் என்று மஹிந்திரா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கோ தெரிவித்துள்ளார்.
இதனால், இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி வருவதற்கு இன்னும் ஓர் ஆண்டு காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியை எதிர்பார்த்து காத்திருந்தவர்களை ஆறுதல்படுத்தும் விதத்தில், அடுத்த மாதம் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய எஸ்யூவி காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.
இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவியானது எஸ்210 என்ற பெயரில் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் மாடலில் 40kWh திறன் கொண்ட பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட இருக்கின்றது. இந்த காரின் பேட்டரியும், மின் மோட்டாரும் இணைந்து அதிகபட்சமாக 130 எச்பி பவரை வழங்கும் திறனை அளிக்கும்.
அதேபோன்று, இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிகிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு நடைமுறையில் சிறந்த பயண தூரத்தை வழங்கும் என நம்பலாம்.
இந்த காருக்கான பேட்டரியை எல்ஜி கெம் தயாரித்து வழங்க இருக்கிறது. மேலும், இந்த எலெக்ட்ரிக் காருக்கு சாதாரண வீட்டு சார்ஜர் மற்றும் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படும்.
புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அதிக செயல்திறனை வழங்கும் விதத்தில் வருவதால், விலையும் கணிசமாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது. இந்த கார் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு போட்டியாக இருக்கும்.
Source: Autocarindia
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!