Just In
- 19 min ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- 44 min ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 4 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 5 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
Don't Miss!
- News சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரிகள் இடையே மோதல்.. பாட்டிலால் தாக்கியதில் ஒருவர் காயம்! பரபர!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Movies விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எளிய கார் கடன் திட்டத்தை அறிவித்தது மாருதி நிறுவனம்!
கொரோனா பிரச்னையால் புதிய கார் வாங்கும் திட்டத்தை ஒத்தி போட நினைக்கும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் விதமாக, புதிய கார் கடன் திட்டங்களை மாருதி அறிவித்துள்ளது.
கொரோனா பிரச்னையால் கடந்த இரு மாதங்களாக தேசிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த இரு வாரங்களாக ஊரடங்கு விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டு வருவதால், கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் கார் நிறுவனங்கள் வர்த்தக செயல்பாடுகளை மீண்டும் துவங்கி இருக்கின்றன.
இந்த நிலையில், புதிய கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் கொரோனாவை கருதி, திட்டத்தை ஒத்திப் போடும் வாய்ப்பு இருக்கிறது. நிலைமை சீரடையும் வரை காத்திருக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர்.
MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!
அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, உடனடியாக கார் வாங்கும் வகையில் சிறப்புக் கடன் திட்டங்களை கார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகியும் புதிய கார் கடன் திட்டத்தை அறிவித்துள்ளது.
சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த சிறப்பு கார் கடன் திட்டத்தை வழங்க உள்ளது மாருதி சுஸுகி. இந்த திட்டத்தின்படி, அதிக ஆண்டுகள் திருப்பி செலுத்தும் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
மேலும், Buy Now, Pay Later என்ற திட்டத்தின்படி, புதிய மாருதி கார் வாங்குவதற்கான கடன் அனுமதித்த நாளில் இருந்து முதல் 60 நாட்களுக்கு மாதத் தவணை செலுத்துவதிலிருந்து விலக்கு பெறும் வாய்ப்பு உள்ளது.
இதுதவிர்த்து, குறைவான முன்பணத்தை செலுத்தி, காரின் ஆன்ரோடு விலையில் 90 சதவீதம் வரை கடன் பெறும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புக் கார் கடன் திட்டங்கள் புதிய மாருதி கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு அதிக மதிப்பையும், நம்பிக்கையையும் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சிறப்பு கார் கடன் திட்டம் குறித்து அருகாமையிலுள்ள மாருதி கார் ஷோரூமை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு ஆசுவாசத்துடன் புதிய மாருதி கார் வாங்கும் வாய்ப்பை வழங்கும்.
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!