Just In
- 1 hr ago கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
- 6 hrs ago 35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!
- 8 hrs ago மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- 8 hrs ago டீசலை எதிர்பாக்காதீங்க.. பெட்ரோல் மட்டும்தான் கிடைக்கும்.. ரொம்ப நாளா எதிர்பார்க்கப்படும் காரில் டுவிஸ்ட்!
Don't Miss!
- Technology 75 இன்ச் Haier 4K டிவி அறிமுகம்.. டால்பி ஆடியோ.. 32ஜிபி மெமரி.. விலையை சொன்னா நம்புவீங்களா?
- News உச்சத்தில் தங்கம் விலை, ஆனா இன்னும் முடியல! அடுத்தாண்டு ரூ.10,000க்கு போகும்- ஆனந்த் சீனிவாசன் பகீர்
- Lifestyle Today Rasi Palan 17 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய நிதி பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது...
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- Movies Actor Vikram: நான் சொல்லாமலேயே என்னுடைய தேவைகளை புரிந்து கொண்ட விக்ரம்.. பாலா ஓபன்!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
மாருதி சுசுகி ஈக்கோ பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகமானது... இவ்வளவு தான் விலையா...!
மாருதி சுசுகி நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான ஈக்கோ மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை அனைவரும் ஆச்சிரியப்படும் விதமாக எக்ஸ்ஷோரூமில் ரூ.3.81 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பிஎஸ்6 மாடல் அதன் முந்தைய மாடலை விட மிகவும் சிறிய அளவில் தான் மாற்றங்களை ஏற்றுள்ளது. என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. அதே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் மாருதியின் பெரும்பாலான கார்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 73 பிஎச்பி பவரையும், 98 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதனுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி ஈக்கோ சிஎன்ஜி வேரியண்ட்டிலும் விற்பனையாகி வருகிறது. ஈக்கோவின் இந்த சிஎன்ஜி வேரியண்ட் ஒரு லிட்டரில் 21.8 கிமீ தூரம் பயணிக்கும் திறன் கொண்டது. அதேபோல் கார்கோ ட்ரிம் உள்பட பல ட்ரீம் வேரியண்ட்டிலும் சந்தையில் ஈக்கோ மாடல் கிடைக்கிறது. கடந்த 2010ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகமான இந்த ஈக்கோ மாடல், இதுவரை 6.5 லட்சம் விற்பனை எண்ணிக்கையை இந்திய சந்தையில் பதிவு செய்துள்ளது.
மாருதியின் ஈக்கோ மாடல் முழுக்க முழுக்க மிடில்-கிளாஸ் குடும்பங்களை குறிக்கோளாக வைத்து தயாரிக்கப்பட்ட வாகனமாகும். இதிலும் முக்கியமாக இதன் கார்கோ வேரியண்ட், நகரப்புற பயன்பாட்டிற்கும், நகர போக்குவரத்திற்கும், சிறிய அளவிலான தொழில் புரிவோர்க்கும் மிகவும் ஏற்ற வாகனமாகும்.
ஈக்கோ பிஎஸ்6 மாடலின் அறிமுகம் குறித்து மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் சந்தை & விற்பனைப்படுத்துதல் பிரிவின் நிர்வாக இயக்குனர் ஷஷான்க் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான வாகனங்களை தொடர்ந்து வழங்குவதில் மாருதி நிறுவனம் உறுதியுடன் உள்ளது.
மாசற்ற போக்குவரத்தை வழங்க வேண்டும் என்ற எங்களது இந்த நோக்கமே, பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட ஈக்கோ மாடலை அறிமுகப்படுத்த உந்துக்கோலாக அமைந்தது. அறிமுகமாகி கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழிந்தப்போதிலும் ஈக்கோ மாடலை முன்பே தீர்மானித்து 84 சதவீதத்தினர் இப்போதும் வாங்குகின்றனர்.
இதற்கு காரணம், இந்த காரின் டிசைன் மற்றும் குறைந்த அளவிலான பராமரிப்பு செலவு தான். இந்த காரை 50 சதவீதத்தினர் சிறு வணிகத்திற்காக வாங்கினாலும், இந்த கார் பாதுகாப்பு அம்சங்களை அதிகமாக கொண்டிருப்பதால் வணிகத்திற்கு மட்டுமின்றி, குடும்ப போக்குவரத்து வாகனமும் பயன்படுத்த முடியும்.
ஈக்கோ மாடல் மூலமாக அதன் பிரிவில் வலுவாக கால்பதித்துள்ளோம். இது தொடரும் என நம்புகிறோம். எங்களது தயாரிப்புகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் என கூறினார்.
ஆம்னி வேனின் தயாரிப்பு நிறுத்தத்திற்கு பிறகு மாருதி சுசுகி நிறுவனத்தில் இருந்து விற்பனையாகி வரும் ஒரே ஒரு வேன் மாடலாக மாருதி சுசுகி ஈக்கோ உள்ளது. இதனால் இதன் விற்பனைக்கு போட்டி மாடலாக எதுவும் இல்லை. இந்திய சந்தையில் மிக சிறப்பாக விற்பனையான 10 கார்களில் ஒன்றாக எப்போதும் இடம்பிடித்துவிடும் ஈக்கோவின் இந்த பிஎஸ்6 மாடல் அறிமுகத்தால் ஈக்கோவின் தயாரிப்பு நிறுத்தம் குறித்து மாருதி சுசுகி நிறுவனம் எந்த திட்டமும் வகுக்கவில்லை என்பது தெரிய வருகிறது.
-
தமிழ் படத்துல நடிச்ச இந்த நடிகையை நினைவிருக்கா!.. புடவையை கட்டிகிட்டு பைக்குல வந்து மனசை கொள்ளையடிச்சுட்டாங்க!
-
வான்வழியை மூடிய 3 உலக நாடுகள்! நேற்று உலகத்தையே பரபரப்பாக்கிய சம்பவம் என்ன தெரியுமா?
-
வந்தே பாரத் ரயிலில் உணவு இல்லாமல் பட்டினியாக பயணித்த குடும்பம்! இப்படியெல்லாம் கூட நடக்குமா?