Just In
- 26 min ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 2 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 4 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 4 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஊழியர் நல திட்டத்தின்கீழ் பணியாளர்களுக்கு வீடுகளை வழங்கிய மாருதி சுசுகி... இந்த வீட்டோட சிறப்பு என்ன தெரியுமா?
ஊழியர்கள் நலத் திட்டத்தின்கீழ் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, அதன் பணியாளர்களுக்கு வீடுகளை வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் மாருதி சுசுகி நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனமே ஊழியர்கள் நலத் திட்டத்தின்கீழ் அதன் பணியாளர்களுக்கு வீடுகளை வழங்கியிருக்கின்றது. இது ஓர் மலிவு விலைக் கொண்ட நவீன ரக வீடாகும். மேலும், சுற்றுச் சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் வழங்காத வகையில் இந்த வீடுகளை மாருதி கட்டமைத்திருக்கின்றது.

இதுவே இந்த வீட்டின் சிறப்பு அம்சமாகும். தருஹேராவில் உள்ள தனது ஊழியர்களுக்கே இந்த வீட்டை மாருதி வழங்கியிருக்கின்றது. வீடு வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (டிசம்பர் 23) நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக 360க்கும் மேற்பட்ட வீடுகளை மாருதி கட்டி வருகின்றது.

இதில், தயார்நிலையில் இருந்த கணிசமான வீடுகளையே மாருதி அதன் பணியாளர்களிடத்தில் ஒப்படைத்தது. மீதமுள்ள வீடுகளை விரைவில் வழங்கும் நடவடிக்கையில் அது ஈடுபட்டு வருகின்றது. மாருதி சுசுகி ஊழியர்களுக்கு வீடு கட்டமைத்து தரும் திட்டத்தை முதன் முதலாக 1989ம் ஆண்டிலேயே தொடங்கியது.

அப்போது, சக்கர்பூர் பகுதியில் உள்ள ஊழியர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இதையடுத்து, இரண்டாம் முறையாக 1994ம் ஆண்டு குருகிராமில் உள்ள போந்த்ஸி பகுதியில் வீடுகள் கட்டப்பட்டன. தற்போது மூன்றாவது முறையாக தருஹேரா பாகுதியில் புதிய வீடுகள் மாருதி சுசுகி என்க்ளேவ் எனும் பெயரில் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

பணியாளர்களின் தேவையைப் பொருத்து இந்த வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வீடுகளை ஊழியர்களாலயே நிர்வகிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், ஹரியான மாநிலத்தின் ஒப்புதல் மற்றும் அதன் விதிகளுக்கு உட்படுத்தியே இந்த வீடுகளைக் கட்டமைத்திருக்கின்றது.

ஆகையால், அரசின் சிறப்பு சலுகை திட்டங்களான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மற்றும் தீன் தயால் ஜன் அவாஸ் யோஜனா ஆகியவைப் பொருந்தும். எனவே ஊழியர்களால் இதன் மூலம் கிடைக்கும் மானியத்தைப் பெற முடியும். புதிய வீடுகளுக்காக மாருதி எவ்வளவு செய்தது மற்றும் இதற்கு ஏதேனும் கட்டணம் ஊழியர்களிடத்தில் வசூலிக்கப்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.

இருப்பினும், விலையுயர்ந்த லக்சூரி வில்லாக்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இந்த வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டிருக்கின்றன. பூங்கா, எல்இடி தரத்திலான தெரு விளக்குகள், மழை நீர் சேகரிப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு பிளாண்ட், குடிநீர் சுத்திகரிப்பு பிளாண் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் தயார் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது.