Just In
- 4 min ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 8 min ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 1 hr ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 3 hrs ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
Don't Miss!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
கொரோனா பரவுவதை தடுக்கும்... மாருதி அறிமுகம் செய்த தயாரிப்புக்கு செம ரெஸ்பான்ஸ்... ரேட் ரொம்ப கம்மி
கொரோனா பரவுவதை தடுப்பதற்காக, மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள தயாரிப்பிற்கு, நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது கோர தாண்டவம் ஆடி வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி கொண்டுள்ளது.
ஆனால் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு இந்தியாவில் தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே நீண்ட நாட்களாக முடங்கி கிடந்த தொழில்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வருகின்றன. இதில், ஆட்டோமொபைல் துறை மிகவும் முக்கியமானது.
இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் அன்று முதல் இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் வாகன உற்பத்தி நடைபெறவில்லை. அத்துடன் ஷோரூம்களும் தற்காலிகமாக மூடப்பட்டன. ஆனால் அரசு வழங்கிய தளர்வுகள் காரணமாக கடந்த மே 4ம் தேதி முதல் மீண்டும் வாகன உற்பத்தி தொடங்கியது. அத்துடன் டீலர்ஷிப்களும் திறக்கப்பட்டன.
இந்தியாவின் மற்ற நிறுவனங்களை போன்று, மாருதி சுஸுகி நிறுவனமும் தனது அன்றாட செயல்பாடுகளை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. ஆனால் அரசு வழங்கிய பாதுகாப்பு நெறிமுறைகளை மாருதி சுஸுகி தீவிரமாக பின்பற்றி வருகிறது. அதன் தொழிற்சாலைகளிலும், டீலர்ஷிப்களிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஊழியர்கள் மட்டுமின்றி, தனது வாடிக்கையாளர்கள் நலனிலும் மாருதி சுஸுகி நிறுவனம் அக்கறை செலுத்த தொடங்கியுள்ளது. இதன்படி கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தேவைப்படும் அவசியமான தயாரிப்புகளை மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த தயாரிப்புகள் மாருதி ஜென்யூன் ஆக்ஸஸெரீஸ்களாக கிடைக்கும்.
மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள தயாரிப்புகளில், கார் கேபின் ப்ரொடெக்டிவ் பார்ட்டீசியன் (Car Cabin Protective Partition) முக்கியமானது. இது பிளாஸ்டிக் சீட் ஆகும். வெல்க்ரோ மூலமாக இதனை அட்டாச் செய்து கொள்ள முடியும். முன் மற்றும் பின் பகுதியில் அமர்ந்திருக்கும் பயணிகளை பிரிப்பதற்கு இந்த பிளாஸ்டிக் சீட் பயன்படும்.
எர்டிகா, எக்ஸ்எல்6, சியாஸ், எஸ்-க்ராஸ், பழைய வேகன்ஆர், ரிட்ஸ், டிசையர் டூர், செலிரியோ மற்றும் ஆல்டோ உள்ளிட்ட கார்களுக்கு இந்த பிளாஸ்டிக் சீட் கிடைக்கிறது. ரூ.549 மற்றும் ரூ.649 ஆகிய விலைகளில் இந்த பிளாஸ்டிக் சீட் கிடைக்கும். தற்போது இந்த பிளாஸ்டிக் சீட் இந்தியா முழுக்க பிரபலமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த பிளாஸ்டிக் ஸ்க்ரீன் மூலமாக காரின் இன்டீரியரை தனித்தனி கேபின்களாக பிரித்து கொள்ள முடியும். எனவே தற்போதைய நிலையில் மிகவும் அத்தியாவசியமானதாக கருதப்படும் சமூக இடைவெளியையும் உறுதி செய்து கொள்ளலாம். குறிப்பாக வாடகைக்கு கார் ஓட்டுபவர்களுக்கு இந்த பிளாஸ்டிக் ஸ்க்ரீன் உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஒரு சில கார் மாடல்களின் கேபின்களுக்கு ஏற்ற வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பிளாஸ்டிக் சீட் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. இருமல், தும்மல் மற்றும் பேசுவதன் மூலம் வெளிப்படும் திரவ துளிகள், காரின் கேபினுக்குள் பரவுவதை இந்த ஸ்க்ரீன் தடுக்கிறது. இதன் மூலம் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.
அதிவேகத்தில் பயணம் செய்தாலும் கழன்று விடாதபடி அதிக ஒட்டுதல் திறன் கொண்ட வெல்க்ரோ மூலமாக இந்த பிளாஸ்டிக் ஸ்க்ரீனை அட்டாச் செய்து கொள்ளலாம். விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஈக்கோ உள்ளிட்ட மாடல்களுக்கும் இந்த பிளாஸ்டிக் ஸ்க்ரீன் வெகு விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர கொரோனா வைரஸிடம் இருந்து தற்காத்து கொள்வதற்காக இன்னும் ஒரு சில தயாரிப்புகளையும் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி ஃபேஸ் வைசரையும் (Face Visor) மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலையை மாருதி சுஸுகி நிறுவனம் 55 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.
அத்துடன் 20 ரூபாய் என்ற விலையில் கையுறைகளையும் (Hand Gloves), 149 ரூபாய் என்ற விலையில் என்95 முக கவசங்களையும் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து டீம்-பிஎச்பி செய்தி வெளியிட்டுள்ளது.
-
உலகின் பவர்ஃபுல் ஹார்பர் கிரேன் இதுதான்.. எங்கே வேணும்னாலும் நகர்ந்து போகும்.. 300டன்னைகூட அசால்டா தூக்கிரும்!
-
பொண்ணு ஆசைப்பட்டதற்காக 3 கோடி ரூபாய் காரை பரிசளித்த அப்பா! இதுக்கு முன்னாடி யாருமே இந்த காரை வாங்குனது இல்ல!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!