Just In
- 36 min ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 2 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 3 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 3 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- News ‛‛திமுக கண்ணில் வந்த தோல்வி பயம்’’.. வாக்காளர்கள் பெயர்களை நீக்கியது ஏன்? எல் முருகன் விமர்சனம்
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- Movies கில்லி படத்தில் வரும் விஜய்யின் வீடு எங்க இருக்கு தெரியுமா? செய்யாறு பாலு சொன்ன சுவாரசியத் தகவல்!
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
புது கார் வாங்குற பிளான் இருந்தா இப்பவே வாங்கிடுங்க... கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக மாருதி அறிவிப்பு!
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி விரைவில் அதன் கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
இந்தியர்களின் அதிக வரவேற்பைப் பெற்று வரும் கார் தயாரிப்பு நிறுவனங்களில் மாருதி சுசுகியும் ஒன்று. இந்த நிறுவனமே விரைவில் அதன் கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து புதன்கிழமை (நேற்று) அந்நிறுவனம் வெளியிட்ட தகவலில், "வருகின்ற ஜனவரி மாதம் முதல் கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
உற்பத்தி செலவு அதிகரிப்பதன் காரணத்தினாலயே விலையுயர்வை செய்ய இருப்பதாக அந்நிறுவனம் காரணம் தெரிவித்துள்ளது. புதிய பாதுகாப்பு விதி மற்றும் மாசு உமிழ்வு விதி காரணமாக வாகன உற்பத்தித்துறை அதன் தயாரிப்புகளில் பல்வேறு அப்கிரேடுகளைச் செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இதன் விளைவாக அண்மைக் காலங்களாக புதிய வாகனங்களின் விலை கணிசமாக உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே மாருதி சுசுகி நிறுவனம் 2021 ஜனவரி மாதத்தில் இருந்து வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றது.
தற்போது மாருதி நிறுவனத்தின் முதல் ஆரம்பநிலை காராக ஆல்டோ மாடல்கள் இருக்கின்றன. இந்த கார் ரூ. 2.95 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. அடுத்த வருடம் இந்த விலை ரூ. 3 லட்சத்திற்கும் அதிகமாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோன்று, இந்நிறுவனத்தின்கீழ் விற்பனைக்குக் கிடைக்கும் வெவ்வேறு மாடல் கார்களும் விலையுயர்வைச் சந்திக்க இருக்கின்றன.
மிகுந்த விற்பனை வீழ்ச்சியில் இருந்து வாகன நிறுவனங்கள் தற்போதே மீள தொடங்கியிருக்கின்றன. இம்மாதிரியான சூழ்நிலையில் மாருதி சுசுகி நிறுவனம் அதன் கார்களின் விலையை உயர்த்த இருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020 நவம்பரில் இந்த நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,35,775 அலகு வாகனங்களை விற்பனைச் செய்திருந்தது. இது 2019 நவம்பரைக் காட்டிலும் 2.4 சதவீத விற்பனை வீழ்ச்சியாகும். 2019 நவம்பரில் 1,39,133 அலகு வாகனங்களை அது விற்பனைச் செய்திருந்தது. இது உள் நாட்டு சந்தை விற்பனை நிலவரம் ஆகும்.
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!