Just In
- 1 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 11 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 55 min ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 2 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
Don't Miss!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Movies அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மெர்சிடிஸ் பென்ஸ் முதல் எலெக்ட்ரிக் கார் இந்திய வருகை விபரம்!
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் முதன்மையான இடத்தில் உள்ளது. பிஎம்டபிள்யூ, ஆடி கார் நிறுவனங்களால் கடுமையான சந்தைப் போட்டி இருந்து வருவதால், தொடர்ந்து புதிய மாடல்களை களமிறக்கி வருகிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக, புதிய கார் அறிமுகங்கள் சற்று தாமதமானாலும், லாக் டவுன் முடிந்த பின்னர் அடுத்தடுத்து புதிய கார் மாடல்களை களமிறக்க உள்ளது. இந்த நிலையில், எதிர்கால சந்தையை மனதில் வைத்து எலெக்ட்ரிக் கார் மாடலையும் இந்தியாவில் விரைவில் களமிறக்க உள்ளது மெர்சிடிஸ் பென்ஸ்.
ஆம். தனது EQC எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் மாடலை இந்த ஆண்டு இரண்டாவது பிற்பாதியில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டுள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மாதம்தான் மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருந்தது.
ஆனால், கொரோனா பிரச்னையால் இக்யூசி எலெக்ட்ரிக் காரின் அறிமுகத்தை சில மாதங்கள் தள்ளிப் போட்டுள்ளது மெர்சிடிஸ் பென்ஸ். இருப்பினும், இந்த காருக்கு இந்தியாவில் வலுவான வர்த்தகம் இருக்கும் என்று ஆணித்தரமாக நம்புகிறது.
இந்த கார் க்ராஸ்ஓவர் எஸ்யூவி ரகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜிஎல்சி எஸ்யூவியின் அடிப்படையில் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
தோற்றத்தில் மிகவும் அழகாகவும் நேர்த்தியான அம்சங்களை பெற்றிருக்கிறது. எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், ஃப்ளோட்டிங் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.
இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் இரண்டு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 402 பிஎச்பி பவரையும், 760 என்எம் டார்க் திறனையும் இந்த மின் மோட்டார்கள் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் 80kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. முழுமையாக சார்ஜ் செய்தால் 445 கிமீ முதல் 471 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.
இந்த கார் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும். ரூ.1.5 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த கார் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் எலெக்ட்ரிக் சொகுசு கார் மார்க்கெட்டிலும் முக்கிய இடத்தை பிடிக்கும் முயற்சியாக இந்த காரை களமிறக்க உள்ளது மெர்சிடிஸ் பென்ஸ்.