அடுத்த அதிரடி... எம்ஜி நிறுவனத்தின் அறிவிப்பால் உறைந்து நிற்கும் ரசிகர்கள்... அப்படி என்ன அறிவிப்பு அது?
எம்ஜி நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் அதன் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

2020ம் ஆண்டின் நிறைவை முன்னிட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்க ஆரம்பித்துள்ளன. தற்போது ஸ்டாக்கில் இருக்கும் வாகனங்களை வெளியேற்றும் விதமாக சிறப்பு தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், வருடத்தின் முடிவை முன்னிட்டு சில நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளின் விலையை உயர்த்திய வண்ணம் இருக்கின்றன.

அந்தவகையில், எம்ஜி மோட்டார் நிறுவனமும் அதன் கார்களின் விலையை உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெக்டர் ப்ளஸ் மாடலின் ஏழு இருக்கைக் கொண்ட மாடலை வருகின்ற ஜனவரி மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாகக் கூறி தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அந்த நிறுவனம், அடுத்த சில மணி நேரங்களிலேயே விலையுயர்வு பற்றி கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது எம்ஜி நிறுவனத்தின்கீழே ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ், குளோஸ்டர் எஸ்யூவி மற்றும் இசட்எஸ் மின்சார கார் ஆகிய மாடல்களே விற்பனையில் இருக்கின்றன. இவற்றின் விலையையே தற்போது 3 சதவீதம் வரை எம்ஜி நிறுவனம் உயர்த்தியிருக்கின்றது. உதிரிபாகங்களின் விலை அதிகரித்திருப்பதால் இந்த விலையுயர்வைச் செய்திருப்பதாக எம்ஜி காரணம் தெரிவித்துள்ளது.

எம்ஜி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளப்பக்கத்தில் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, ஹெக்டர் கார் ரூ. 12.83 லட்சம் என்ற ஆரம்ப விலையிலும், ஹெக்டர் ப்ளஸ் கார் ரூ. 13.73 லட்சம் என்ற ஆரம்ப விலையிலும், குளோஸ்டர் எஸ்யூவி ரூ. 29.98 லட்சம் என்ற ஆரம்ப விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மின்சார காரான இசட்எஸ் இவி 20.88 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. தற்போது நாம் பார்த்தவை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆகையால், அவை ஆன்ரோடில் வேரியண்டிற்கு ஏற்ப புதிய விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். புதிய விலையுயர்வு இந்தியர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது என்றே கூறலாம்.

எம்ஜி நிறுவனத்தைப் போலவே இந்தியாவின் பிற முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான மாருதி சுசுகி, ஃபோர்டு இந்தியா, மஹிந்திரா மற்றும் மஹிந்திரா, ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் பஜாஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் அதன் தயாரிப்புகளின் விலையை உயர்த்தியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இன்னும் சில நிறுவனங்கள் அதன் விலையுயர்வை பற்றிய அறிவிப்பை வெளியிட தயாராக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








