போலீசார் மீதான அக்கறையில் எம்ஜி மோட்டார் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

கொரோனா தடுப்புப் பணியில் இரவு பகல் பாராமல் உழைத்து வரும் போலீசார் மீதான அக்கறையில், ஒரு சூப்பர் அறிவிப்பை எம்ஜி மோட்டார் அறிவித்துள்ளது.

போலீசாருக்கு எம்ஜி மோட்டார் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

கொரோனா பிரச்னை சினிமாவை விஞ்சிய நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி இருப்பதுடன், அத்தியாவசியப் பணிகளை தவிர்த்து பிற அனைத்தும் பொது முடக்கத்தின் கீழ் செயலற்று கிடக்கின்றன.

போலீசாருக்கு எம்ஜி மோட்டார் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

இந்த நிலையில், கொரோனா தடுப்புப் பணியை மருத்துவப் பணியாளர்களுக்கு இணையாக போலீசாரும் இணைந்து நிற்கின்றனர். ஊரடங்கு காலத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, மேலும் பரவாத வகையில் செயல்பட்டு வருகின்றனர்.

போலீசாருக்கு எம்ஜி மோட்டார் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

இந்த நிலையில், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு பல்வேறு வகையிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், கொரோனா தடுப்புப் பணிகளில் கார் நிறுவனங்கள் முக்கியப் பங்களிப்பை வழங்கி வருகின்றன. அந்த வகையில், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரின் மீதான அக்கறையில் எம்ஜி மோட்டார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

போலீசாருக்கு எம்ஜி மோட்டார் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

அதன்படி, நாடு முழுவதும் போலீசார் பயன்பாட்டில் உள்ள 4,000 வாகனங்களளை சுத்தப்படுத்தி, கிருமி நீக்கம் செய்து தருவதாக அறிவித்துள்ளது. போலீசாரின் வாகனங்களின் வெளிப்புறமும், உட்புறமும் கிருமி நீக்க முறைகளின்படி, சுத்தப்படுத்தப்படும்.

போலீசாருக்கு எம்ஜி மோட்டார் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

அதேபோன்று, வாகனங்களின் கைப்பிடிகள், ஏசி சிஸ்டம், உட்புறத்தில் கை வைக்கும் பகுதிகள் அனைத்துமே சுத்தப்படுத்தி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, கொரோனா தடுப்புப் பணியில் தனது பங்களிப்பை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது எம்ஜி மோட்டார்.

போலீசாருக்கு எம்ஜி மோட்டார் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

கார் கழுவுதல், உட்புறத்தில் கிருமி நாசினி மூலமாக சுத்தபடுத்தும் பணிகள் கட்டணமில்லாமல் போலீசாரின் வாகனங்களுக்கு செய்து தரப்படும் என்று எம்ஜி மோட்டார் தெரிவித்துள்ளது. இன்று முதல் இந்த பணியை துவங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

போலீசாருக்கு எம்ஜி மோட்டார் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், நல்லெண்ண அடிப்படையில் இந்த திட்டத்தை அறிவித்துள்ளதாக எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது நிச்சயம் வரவேற்கத்தக்க விஷயமாகவே இருக்கும்.

Most Read Articles
English summary
MG Motor has announced a special service drive to sanitize 4,000 police vehicles across the country.
Story first published: Monday, May 4, 2020, 15:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X