Just In
- 7 min ago ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- 1 hr ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- 3 hrs ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 3 hrs ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
Don't Miss!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Technology Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Movies கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருப்பது எங்களுக்கு பெருமை... நெகிழும் நெட்டிசன்கள்! ஏன் தெரியுமா?
இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருப்பது எங்களுக்கு பெருமை என நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக நம்பப்படும் கோவிட்-19 வைரஸ், உலகையே ஆட்டி படைத்து வருகிறது. இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கோவிட்-19 வைரஸால் கதிகலங்கி போயுள்ளன. உலகம் முழுவதும் தற்போது வரை 59,221 பேரின் உயிரை கோவிட்-19 வைரஸ் பறித்துள்ளது.
உயிரிழப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருப்பதால் மக்கள் கவலையடைந்துள்ளனர். அதே சமயம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை கடந்துள்ளது. துல்லியமாக சொல்வதென்றால், தற்போது வரை உலகம் முழுவதும் 11,18,304 பேரை கோவிட்-19 வைரஸ் தாக்கியுள்ளது. உயிரிழப்புகள் ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் பொருளாதார ரீதியிலான நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன.
கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, உலகின் பல்வேறு நாடுகளும் தங்களின் எல்லைகளை மூடி விட்டன. எனவே சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் பலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு சில விமான நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன.
மேலும் ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பது போன்ற நடவடிக்கைகளும் கூட எடுக்கப்பட்டு வருகின்றன. விமான நிறுவனங்கள் மட்டுமல்லாது, முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பலவும் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நாடுகளில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் வாகனங்களின் விற்பனை மிக கடுமையாக சரிவடைந்துள்ளது. இதன் காரணமாகவும், கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காகவும், வாகன தொழிற்சாலைகளில் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே வாகன உற்பத்தி நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்குவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆம், கொரோனா வைரஸ் காரணமாக ஊழியர்களை வேலையை பறிக்க மாட்டோம் என எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ஆட்டோமொபைல் உள்பட பல்வேறு துறைகளை சார்ந்த நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ள சமயத்தில், எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் அதற்கு விதிவிலக்காக உள்ளது. 2020ம் ஆண்டில் ஒரு வேலையை கூட பறிக்க கூடாது என எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் உறுதிமொழி எடுத்துள்ளது.
உண்மையில் இத்தகைய முடிவுகள் அரிதானவை. எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஊழியர்களை ஒரு பெரிய குடும்பமாக கருதுவதை இந்த முடிவு காட்டுகிறது. எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ராஜிவ் சபா இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அவரது டிவிட்டர் பக்கத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டிவிட்டர் பயனர்கள் பலர் இந்த அறிவிப்பை வரவேற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் எதிரொலியால், ஊழியர்கள் மிக கடினமான நேரத்தை சந்தித்து கொண்டிருக்கும் இச்சமயத்தில், எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தை, மற்ற நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் எனவும் நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலை நிலவி வரும் இச்சமயத்தில், மற்ற நிறுவனங்களுக்கு எல்லாம் எம்ஜி மோட்டார் இந்தியா உண்மையிலேயே முன் உதாரணமாக மாறியுள்ளது. அதே சமயம் எம்ஜி நிறுவன கார்களை வைத்திருக்கும் ஒரு சிலரோ, எம்ஜி நிறுவனத்தின் இந்த முடிவால் பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
பல நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், எதிர்காலம் குறிச்ச அச்சமும், கவலையும் தற்போது தொற்றி கொண்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் வெளிவந்திருக்கும் இந்த அறிவிப்பால், எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவன ஊழியர்கள் நிம்மதி அடைந்திருப்பார்கள் என நாம் நம்பலாம். இந்திய மார்க்கெட்டில் குறுகிய காலத்திலேயே எம்ஜி நிறுவனம் மிகப்பெரிய அளவில் பிரபலமாகியுள்ளது.
எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் மற்றும் இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மிக பிரம்மாண்டமான வரவேற்பை வழங்கியுள்ளனர். அத்துடன் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையும் நன்றாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அத்துடன் அவ்வப்போது வெளியாகும் இத்தகைய அறிவிப்புகளும் அந்நிறுவனத்திற்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுக்கிறது.
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!