Just In
- 31 min ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 50 min ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 1 hr ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 3 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
போதையில் இருந்தாகூட இப்படியா செய்வது... தரமான பாடம் புகட்டிய காவல்துறை... இந்த நாளை அவங்க மறக்கவே மாட்டாங்க!!
போதையில் அட்டகாசம் செய்த இளைஞர்களுக்கு போலீஸார் தக்க பாடம் புகட்டியிருக்கின்றனர். இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக டிசம்பர் 31ம் தேதி இரவு, அதாவது, ஜனவரி 1ம் தேதி பிறக்கும் அந்த நாளைக் கொண்டாடும் விதமாக மக்கள் பலர் மகிழ்ச்சியுடன் சாலையில் சுற்றித் திரிவது வழக்கம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காரின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டோ அல்லது சன் ரூஃப் வாயிலாக நின்றவாறோ கோஷம் எழுப்பிய வண்ணம் பயணிப்பதை நாம் பார்த்திருப்போம்.
ஆனாம், நாம் பார்க்கவிருக்கும் இந்த சம்பவத்தில் இளைஞர்கள் சிலர் அட்வான்ஸ்டாக டிசம்பர் 1ம் தேதியையே மிக சந்தோஷமாகக் கொண்டாடியிருக்கின்றனர். ஆமாங்க, இந்த இளைஞர்கள் காரின் ஜன்னலில் அமர்ந்தபடி அலப்பறையில் ஈடுபட்டவாறு மும்பை நகரத்தின் சாலைகளில் சுற்றித் திரிந்திருக்கின்றனர்.
இதைக் கண்டு அதிர்ந்துபோன சக வாகன ஓட்டி ஒருவர் தன்னுடைய செல்போனில் சம்பவம் முழுவதையும் படமாக்கி அதனை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார். இந்த வீடியோவே இளைஞர்கள் தற்போது போலீஸாரிடத்தில் சிக்க காரணமாகியிருக்கின்றது. டிசம்பர் 2ம் தேதி அதிகாலை சுமார் 1.25 மணியளவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
வீடியோ எடுக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே அதனை அந்நபர் டுவிட்டரில் பதிவிட்டிருக்கின்றார். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம். இந்த சம்பவம் மும்பை விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சஹாரா யுரான் மேம்பாலம் பகுதியில் அரங்கேயிருக்கின்றது. வீடியோவை ஒவ்வொரு நெட்டிசன்களும் மற்றவர்களும் காணும்படி ஷேர் செய்தனர்.
இவ்வாறு தொடர்ச்சியாக வீடியோ வைரலானதை அடுத்து 2 தேதி அன்றிலிருந்தே மும்பை போலீஸார் இளைஞர்களை தேட ஆரம்பித்திருக்கின்றனர். தீவிர தேடுதலைத் தொடர்ந்து நேற்றைய தினம் (4 டிசம்பர்) சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி மூவரை போலீஸார் கைது செய்தனர். ஜன்னலில் அமர்ந்து பயணித்தது மட்டுமின்றி இளைஞர்கள் சம்பவத்தின்போது மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
மேலும், கார் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோதே ஜன்னலில் அமர்ந்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் மதுவை அருந்தியிருக்கின்றனர். இதுபோன்ற விதிமீறல் செயல்களே இளைஞர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க காரணமாக அமைந்திருக்கின்றது. இளைஞர்கள் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்திருப்பது மும்பை மிர்ரர் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் பற்றிய வேறெந்த தகவலும் கிடைக்கவில்லை.
மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவது பெரும் விபத்துகளுக்கு வழி வகுக்கும் எனவேதான் போலீஸார் குடிபோதையில் வாகனங்களை இயக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கின்றனர். உலகின் பல்வேறு மூலைகளில் நடைபெறும் பெரும்பாலான விபத்துகளுக்கு வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவதே முக்கிய காரணமாக இருக்கின்றது. எனவேதான் இவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க முயற்சிக்கின்றனர்.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி