Just In
- just now மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 45 min ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 1 hr ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 3 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
Don't Miss!
- News மேடையிலேயே நிலைக்குலைந்த நிதின் கட்கரி.. மயங்கி விழுந்ததால் பரபரப்பு.. ஷாக் வீடியோ
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Movies அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
திருடர்களை தேடி பிடித்த வேன்கள் இனி வைரசை அழிக்க உதவும்... தரமான நடவடிக்கை எடுத்த மும்பை போலீஸ்..
கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துக் கொண்டிருக்கும் வேலையில் போலீஸார் தரமான நடவடிக்கையை மக்களின் பாதுகாப்பிற்காக எடுக்கத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
கண்களுக்கு புலப்படாத ஒற்றை வைரஸ் (கொரோனா) உலக நாடுகள் அனைத்திற்கும் பெரும் சவாலை ஏற்படுத்தி வருகின்றது. நாளுக்கு நாள் புதிய எண்ணிக்கையில் பரவி வரும் இந்த வைரசைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக சுகாதாரத்துறையே திக்கி திணறி வருகின்றன.
இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை பல்லாயிரக் கணக்கானோர் இறந்திருக்கின்றனர். மேலும், பாதிப்புற்றும் வருகின்றனர்.
ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!
இந்தியாவை பொறுத்தவரை இந்த வைரஸ் இப்போதே அதன் உக்கிர தன்மையைக் காட்ட தொடங்கியிருக்கின்றது. அதிலும், கடந்த சில வாரங்களாக இதன் பரவும் விகிதம் புதிய இலக்கை எட்டி வருகின்றது. எனவே, ஏப்ரல் 14ம் தேதி வரை மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு, தற்போது அடுத்த மாதம் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த 2.0 ஊரடங்கு உத்தரவினால் மக்கள் பெருத்த கலக்கத்தில் உறைந்திருக்கின்றனர். முதல்நிலை ஊரடங்கு உத்தரவின் தாக்கத்தில் இருந்தே அவர்கள் இன்னும் மீளாதநிலையில், 2.0 ஊரடங்கு உத்தரவு என்னவென்னெல்லாம் செய்யவிருக்கின்றதோ? என்ற அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.
இருப்பினும், கொரோனா பிடியில் இருந்து தப்பிக்க இம்மாதிரியான கசப்பான நடவடிக்கைகளே இப்போதைக்கு நம் கை வசம் இருக்கும் தீர்வாக உள்ளது.
இதைத்தொடர்ந்து, வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சியிலும் அந்தந்த மாநிலங்கள் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்தவகையில், சிறப்பு நடவடிக்கையாக மும்பை நகர போலீஸார் அவர்களின் வேன்களை கிருமி நாசினி எந்திரங்களாக பயன்படுத்த முடிவு செய்திருகின்றனர்.
நாட்டில் அதிகம் கொரோனா வைரஸ் தொற்றுடைய மாநிலமாக மஹாராஷ்டிரா இருக்கின்றது. 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதனாலயே இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் இது முதல் இடத்தில் இருக்கின்றது.
அதிலும் மாநிலத்தின் முக்கிய நகரங்களான மும்பை மற்றும் புனேவில் அதிக தொற்றுடையவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
எனவே, பல அதிரடி திட்டங்களுடன் அம்மாநில அரசு கொரோனாவிற்கு எதிரான போரில் களமிறங்கியிருக்கின்றன. அந்தவகையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் ஓர் நடவடிக்கைதான் இந்த கிருமி நாசினி தெளிப்பு திட்டம்.
இதற்காக அந்நகர காவல்துறையின் வாகனங்களை சிறப்பு தொழில்நுட்ப கருவிகளின் உதவியால் கிருமி நாசினி தெளிப்பு வாகனமாக மாற்றப்பட்டிருக்கின்றது. இந்த வாகனங்கள் நகரத்தின் சந்து, பொந்துகள் என அனைத்து பகுதிகளிலும் சென்று கிருமி நாசினிகளை தெளிக்கும்.
இந்த புதிய முயற்சியை உறுதி செய்யும் வகையில் மும்பை நகர போலீஸார் அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கொரோனாவிற்கு எதிரான போரில் பங்களிக்கும் விதமாக வேன்கள் கிருமிநாசினி எந்திரமாக மாற்றப்பட்டிருப்பதையும், அந்த வேனின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஓர் வேன் என்றதன் அடிப்படையில் காவலர்கள் வேன்கள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் பல ஏற்கனவே களத்தில் பணியைத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
கொரோனா வைரசிடம் இருந்து மக்களைக் காக்கும் பணியில் போலீஸாரின் பங்கு இன்றியமையாததாக உள்ளது.
நாட்டின் ஒரு சில இடங்களில் போலீஸார்களால் கசப்பான சம்பவங்கள் அரங்கேறினாலும், அவர்கள் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை தனித்துவிட்டு பணிக்கு வந்துள்ளனர் என்பதை நாம் உணர வேண்டும்.
மேலும், வைரசிடம் இருந்தும் நம்மை காத்துக்கொள்ள போலீஸாரின் பணி மட்டுமின்றி, சில பாதுகாப்பு அம்சங்களைக் கையாள வேண்டும் என்பது அவசியமானதாக மாறியிருக்கின்றது.
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!
-
உபேர் கேப்களில் அதிகம் தொலைக்கப்பட்ட பொருட்கள் இது தான்! எந்த ஊர்ல அதிகம் தெரியுமா?