தீபிகா படுகோனேவை பின்தொடர்ந்த கார்கள்... போலீஸ் என்ன செய்ய போறாங்க தெரியுமா? அவங்களுக்கு தேவைதான்...
தீபிகா படுகோன் உள்ளிட்ட சில நடிகைகளை விரட்டிய கார்களுக்கு தக்க பாடம் புகட்ட இருப்பதாக மும்போ போலீஸார் அறிவித்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

வேளாண் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டாங்களும், கண்டன ஆர்பாட்டங்களும் விவாசயிகள் சார்பில் முன்னெடுத்து வரும்நிலையில் ஊடகங்கள் சில நடிகர்களின் பக்கம் பின் தொடர்ந்து மக்களை திசைத் திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழும்பிய வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக, சுஷாந்த் இறப்பு விவகாரத்தை கையிலெடுத்துக்கொண்ட சில தனியார் ஊடகங்கள் அதை விறு விறுப்புடன் எடுத்து சென்றுக் கொண்டிருக்கின்றன.

நடிகரின் இறப்புகுறித்து தினம் ஒரு விவாதம், சிறப்பு செய்திகள் ஆகியவற்றை வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில், சுஷாந்தின் இறப்பு விவகாரத்தில் கிளம்பிய புதிய சர்ச்சையான போதைப் பொருள் விவகாரத்தில் பல்வேறு பாலிவுட் திரைப்பிரலங்கள் சிக்கியிருக்கின்றனர். இதில், விசாரிக்கப்பட்டு வரும் நடிகர்கள் சிலரை தனியார் ஊடகங்கள் கழுகு போல் விடாமல் விரட்டிய வண்ணம் இருக்கின்றன.

இந்த நிலையில், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்திற்கு விசாரணைக்காக வந்த பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவை, தனியார் ஊடகங்கள் சில விமான நிலையத்தில் விரட்ட ஆரம்பித்து விசாரணை நடைபெற்ற இடம் வரை பின் தொடர்ந்து விரட்டின. மேலும், அவர் விசாரணை முடித்து திரும்பும்போது வரையிலும் பின்தொடர்ந்தவாறு நேரலை செய்தன.

இந்த விவகாரத்தின் அடிப்படையிலேயே சில தனியார் ஊடகங்களின் வாகனங்கள் தற்போது பறிமுதல் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. குற்றவாளிகளைப் போலீஸார் விரட்டிச் செல்வதைப் போன்று, ஊடகங்களின் வாகனங்கள் நேரலைச் செய்தவாறு, அவர்களைப் பின் தொடர்ந்தது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை பேட்டியளிக்க முன் வராதநிலையிலும் அந்த ஊடகத்தினர் அத்துமீறி செயல்பட்டதாகக் கூறப்படுகின்றது.

குறிப்பாக, இரு வாகனங்களும் சாலையில் ஓடிக் கொண்டிருந்த வேலையிலும், நிரூபர் ஒருவர் நடிகையிடம் பேட்டி காண முயற்சித்தது, திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தகைய காரணத்திற்காகவே நடிகையைப் பின்தொடர பயன்படுத்தப்பட்ட பிரபல ஊடகங்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய இருப்பதாக மும்பை போலீஸார் அதிரடியாக அறிவித்திருக்கின்றனர்.

மேலும், இதுபோன்று இனி எந்த ஊடகங்கள் செய்தாலும் உடனடியாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர். நடிகையின் காரை பின் தொடர சில ஊடக வாகனங்கள் அதிக வேகத்தில் பறந்ததாகவும் போலீஸார் தங்களின் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

மேலும், பிறரின் வாகனங்களுக்கும் இடையூறு செய்கின்ற வகையில், அவர்கள் அந்த நேரத்தில் பயணித்ததாகவும் கூறப்படுகின்றது. எனவே, குறிப்பிட்ட அந்த ஊடக வாகனத்தின் டிரைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக போலீஸார் கூறியிருக்கின்றனர்.

தீபிகா படுகோனேவை மட்டுமின்றி போதை மருந்து விவகாரத்தில் சிக்கி விசாரணை வளையத்திற்கும் கொண்டுவரப்பட்டிருக்கும் ரியா சக்கரபோர்த்தி, சாரா அலிகான், ஸ்ரதா கபூர் மற்றும் ப்ரீத் சிங் ஆகியோரை விசாரணை மேற்கொள்ளும்போது ஊடகங்கள் இவ்வாறே நடந்துக் கொண்டிருக்கின்றன.

இதைத் தொடர்ந்தே, ஊடக வாகனங்களின்மீது போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி, ஒரு வாகனம் சாலையில் இயங்கிக் கொண்டிருக்கும் அதை துரத்தச் செய்வது சட்ட விரோதமானதாகும். விரட்டுதல் என்பது மிகவும் ஆபத்தானதாகும்.

குறிப்பாக, அந்த இடத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என நினைத்து வாகனங்கள் முன்னேறிச் சென்றுக் கொண்டிருந்த நேரத்தில், அவர்களை விடாமல் பின் தொடர்ந்து, கார்கள் இயங்கிக் கொண்டிருந்தபோதே, நடிகைகளிடம் நிரூபர்கள் பேட்டியெடுக்கவும் முயற்சித்தது மிகவும் ஆபத்தானது ஆகும். இந்த செயல் இரு வாகனங்களுக்குமே நொடிப்பொழுதில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது.

எனவேதான், இதுபோன்ற செயல்களைக் கண்டிக்கும் விதமாக போலீஸார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சமூக வலைதளங்களிலும்கூட ஊடகங்களின் முரண்பாடான இந்த செயலுக்கு கண்டனங்கள் எழுப்பிய வண்ணம் இருக்கின்றன.
நாட்டில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பின் விளைவுகள் மற்றும் வேளாண் சட்டதிருத்த மசோதாவால் உருவாகியிருக்கும் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்ற வேலையில், நடிகைகளின் பிரச்னையைத் தலையில் வைத்துக் கொண்டிருப்பதாக சிலர் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல ஆக்டிவிஸ்டும், வழக்குரைஞருமான பிரசாந்த் பூஷன், தனியார் ஊடகத்தின் செயல்குறித்து கூறியதாவது, "கடைசியாக புலனாய்வு பத்திரிக்கைக்கான நோபல் பரிசை வென்றுவிட்டது. தீபிகா படுகோனின் காருக்கு முன்னாள் அவர்களின் கார்களை எடுத்துச் செல்ல முயன்றது! ஆஹா!" என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications