Just In
- 58 min ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 1 hr ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 8 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 8 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
Don't Miss!
- News லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ரூ. 40 முதல் ரூ. 280 வரை உயரும் டோல் கட்டணம்.. உறைந்துபோன வாகன ஓட்டிகள்.. எந்த நகரத்தில் தெரியுமா..?
குறிப்பிட்ட நகரத்தின் டோல் கட்டணம் வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் உயரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது எந்த நகரத்தில் என்பதுகுறித்த விரிவான தகவலை இந்த பதிவில் காணலாம்.
சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தும் பல்வேறு டோல்கேட்டுகளில் முறைகேடுகள் தற்போதும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றது.
முறைகேடுகள் மற்றும் கட்டணம் செலுத்த நிலவும் அதிக நேரத்தைக் குறைக்கும் விதமாகவே ஃபாஸ்ட்டேக் நாடு முழுவதும் கட்டாயமாக்கப்பட்டு. இருப்பினும், எந்தவொன்றிற்கும் இத்திட்டம் முழுமையாக பயனளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், டோலுக்கான கட்டணத்தை குறிப்பிட்ட மாநிலத்தின் இரு நகரங்களுக்கு இடையே இருக்கும் டோல்பிளாசாக்களில் மட்டும் உயர்த்தவிருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த தகவலை ஆட்டோ கார் என்ற ஆங்கில தளம் வெளியிட்டிருக்கின்றது. அது வெளியிட்டுள்ள தகவலின்படி, மும்பை-புனே ஆகிய இரு நகரங்களுக்கும் இடையே இருக்கும் டோல்கேட்டுகளில் ரூ. 40 முதல் 280 வரை கட்டணத் தொகை உயரவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று, மும்பை மற்றும் லோனவலா ஆகிய இரு பகுதிகளுக்கும் இடையில் உள்ள டோல்கேட் கட்டணண் உயர்த்தப்பட இருப்பது அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, அங்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தில் ரூ. 30 முதல் 210 ரூபாய் வரை உயர்த்தப்பட இருக்கின்றது.
தற்போது, மும்பை-லோனவலா டோல் பிளாசாவில் காருக்கு ரூ. 173 கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. புதிய கட்டணத்தின்படி, இது 203 ரூபாயாக உயர இருக்கின்றது.
இதேபோன்று, மினி பேருந்துவிற்கு தற்போது வசூலிக்கப்படும் 266 ரூபாய், 315 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. இதுமட்டுமின்றி, இரு ஆக்ஸல் ட்ரக் வாகனத்திற்கு 370 ரூபாயில் இருந்து 435 ரூபாயாகவும், பேருந்துகளுக்கு 506 ரூபாயில் இருந்து 597 ரூபாயாகவும், இரண்டுக்கு மேற்பட்ட ஆக்ஸல்கள் கொண்ட டிரக்குகளுக்கு 876 ரூபாயில் இருந்து 1,035 ரூபாயாகவும் உயர்த்தப்பட இருக்கின்றது.
தொடர்ந்து, கிரேன் மற்றும் பல ஆக்ஸல் அமைப்புடைய வாகனங்களுக்கு ரூ. 1,376 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வாகனங்களுக்கு ரூ. 1,166 மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகின்றது.
வாகனம் | புதிய கட்டணம் | பழைய கட்டணம் | வித்தியாசம் |
கார் | RS 270 | Rs 230 | Rs 40 |
மினி பஸ் | Rs 420 | Rs 355 | Rs 65 |
ட்ரக் (இரு ஆக்ஸல்) | Rs 580 | Rs 493 | Rs 87 |
பேருந்து | Rs 797 | Rs 675 | Rs 122 |
ட்ரக் (பல ஆக்ஸல்) | Rs 1,380 | Rs 1,168 | Rs 212 |
கிரேன் மற்றும் மற்ற பல ஆக்ஸல் உடைய வாகனங்கள் | Rs 1,835 | Rs 1,555 | Rs 280 |
மும்பை-லோனவலா டோலைப் போலவே மும்பை மற்றும் புனே நகரங்களுக்கு இடையே இருக்கும் டோலில் கட்டணம் உயர்வு அமலுக்கு வரவிருக்கின்றது.
இங்கு தற்போது கார்களிடம் இருந்து குறைந்தபட்ச கட்டணாக ரூ. 230 வசூலிக்கப்பட்டு வருகின்றது. இதனை ரூ. 270ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று, மினி பேருந்துவிற்கு ரூ. 65ஐ உயர்த்தி 420 ரூபாயாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இரு ஆக்ஸல்களுடைய டிரக்குகளுக்கு ரூ. 87 உயர்த்தப்பட இருக்கின்றது. இதனால் இந்த வகை வாகனங்களிடம் இருந்து 580 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட இருக்கின்றது. மேலும், பேருந்துகளுக்கு 122 ரூபாயாக உயர்த்தப்பட இருக்கின்றது. இதனால், பேருந்துகளுக்கு வசூலிக்கப்பட்டு வந்த ரூ. 675 என்ற தொகை தற்போது 797 ரூபாயாக மாறியுள்ளது.
இதேபோன்று, இரண்டு ஆக்ஸல்களுக்கு அதிகமாக கொண்ட டிரக்குகளுக்கு ரூ. 1,168 இல் இருந்து ரூ. 1,380 ஆகவும், பல ஆக்ஸல்கள் கொண்ட வாகனங்கள் மற்றும் கிரேன்களுக்கு ரூ. 1,555இல் இருந்து ரூ. 1,835 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டணத் தொகை உயர்வால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர். இந்த புதிய கட்டண திட்டம் வருகின்ற ஏப்ரல் மாதம் 1ம் தேதியில் இருந்து இரு குறிப்பிட்ட நகரங்களுக்கு இடையே டோல்களில் செயல்பாட்டிற்கு வரவிருக்கின்றது.
வாகனங்கள் | புதிய கட்டணம் | பழைய கட்டணம் | வித்தியாசம் |
கார் | RS 203 | Rs 173 | Rs 30 |
மினி பேருந்து | Rs 315 | Rs 266 | Rs 49 |
ட்ரக் (இரு ஆக்ஸல்கள்) | Rs 435 | Rs 370 | Rs 65 |
பேருந்து | Rs 597 | Rs 506 | Rs 91 |
ட்ரக் (இரண்டிற்கு மேற்பட்ட ஆக்ஸல்கள்) | Rs 1,035 | Rs 876 | Rs 159 |
கிரேன் மற்றும் பல ஆக்ஸல்கள் கொண்ட வாகனம் பிற வாகனங்கள் | Rs 1,376 | Rs 1,166 | Rs 210 |
மிக முக்கியமாக, நெடுஞ்சாலைகளைக் கட்டமைக்கவும், வாகனங்கள் சீராக சென்று வருவதற்கான கட்டமைப்புகளை மேற்கொள்ளவே டோல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. ஆனால், டோல்களை குத்தகைக்கு எடுக்கும் நிறுவனங்கள் முறையாக பராமரிக்காமல், வெறும் லாபத்திற்கான நோக்கிலேயே செயல்படுகின்றது. இதனாலயே வாகன ஓட்டிகள் டோல் கட்டணத்தைச் செலுத்த தயக்கம் காட்டுகின்றனர்.
சாலைகளை முறையாக பராமரிக்காத காரணத்தால் அவை ஆபத்தை ஏற்படுத்தும் நுழை வாயிலாக மாறிவிடுகின்றன. தொடர்ந்து, பல்வேறு விபத்துகளுக்கும் காரணகர்த்தாவாக மாறிவிடுகின்றன. இதை நிரூபிக்கின்ற வகையிலேயே தமிழகத்தில் உலுக்கும் விதமாக சமீபத்தில் அவினாசி சாலை விபத்து அரங்கேறியது.
இதுபோன்ற எண்ணற்ற விபத்துகள் நாள்தோறும் இந்திய சாலைகளில் அரங்கேறிக்கொண்டுதான இருக்கின்றன. ஆனால், அதனை தவிர்க்காமல் அரசும், நெடுஞ்சாலைத்துறையும் வசூல் செய்வதில் மட்டுமே அதிக அக்கறை காட்டி வருகின்றன.
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு