மீண்டும் ஊரடங்கு! ஆனா இந்த நிறுவனத்திற்கு மட்டும் விலக்கு... என்ன நிறுவனம் தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க
மீண்டும் நடைமுறைக்கு வந்த புதிய பொது முடக்கத்தில் ஒரு நிறுவனத்திற்கு மட்டும் தடையின்றி செயல்பட விலக்களிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் இன்னும் ஒரு சில நாடுகளில் தீவிரம் குறையாமல் பரவிக் கொண்டிருக்கின்றது. இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்தியாவைக் காட்டலாம். தற்போதும் நாட்டில் ஆயிரக்கணக்கானோர் வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற நிலை உலகின் சில வல்லாதிக்க நாடுகளில் தென்படுகின்றது. அதில் ஒன்றே அமெரிக்கா.

இந்த நாட்டிலும் வைரஸ் பரவல் தீவிரமாகக் காணப்படுகின்றது. இதனால் நாட்டின் சில முக்கியமான பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவு குறிப்பிட்ட ஓர் கார் உற்பத்தி நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பொருந்தாது என்பது தெரியவந்துள்ளது.

பிரபல மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாதான் அது. இந்த நிறுவனம் மின் வாகன உற்பத்தியை மட்டுமே மையமாகக் கோளாக் கொண்டு இயங்கி வருகின்றது. இதன் உற்பத்தி ஆலை, கலிஃபோர்னியாவின் அலமேடா கவுண்டி எனும் பகுதியில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த பகுதிக்கும் புதிய லாக்டவுண் திட்டம் பொருந்தும்.

ஆனால், டெஸ்லா நிறுவனத்தின் இயக்கம் அத்தியாவசியமானதாகக் கருதப்பட்டு அதற்கு பொதுமுடக்கத்தில் இருந்து விலக்களித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால், டெஸ்லா நிறுவனத்தின் ஊழியர்கள் தங்கு தடையின்றி பணிக்கு செல்லலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

முன்னதாக, லாக்டவுண் அறிவித்தபோது கலிஃபோர்னியாவின் சுகாதாரத்துறை அதிகாரி மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்கிற்கும் பெரிய வாக்குவாத மோதலே ஏற்பட்டது. பொதுமுடக்கத்தின் காரணமாக தன் நிறுவனத்தின் பாதிப்புகள் பெரியளவில் பாதிக்கப்படுகின்றது. இந்த நிலைத் தொடர்ச்சியாக நீடித்தால் தானும், தன்னுடைய நிர்வாகமும் மாநிலத்தை விட்டு வெளியேற நேரிடும் என எச்சரித்தார்.

இதுபோன்ற பழைய கசப்பான அனுபவங்களைக் கருத்தில் கொண்டே இம்முறை செயல்படுத்தப்பட்டிருக்கும் புதிய பொதுமுடக்க உத்தரவு சில முக்கியமான நிறுவனங்களின் இயக்கத்திற்கு விலக்கு அளித்துள்ளது. அதாவது, உற்பத்தியையும் அத்தியாவசியமானதாக எடுத்துக் கொண்டு இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

புதிய பொதுமுடக்கமானது இரவு 10 மணிக்கு தொடங்கி காலை 5 மணி வரை செயல்பாட்டில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களுக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த தடையுத்தரவு செயல்பாட்டில் இருக்கும் நேரத்தில் மக்கள் அல்லது அத்தியாவசிய தேவையில்லாத பணியாளர்கள் நடமாடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பு: படங்கள் அனைத்து உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








