Just In
- 27 min ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 46 min ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 1 hr ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 2 hrs ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
Don't Miss!
- News உயிரைக் கொல்லும் ஸ்மோக் பிஸ்கட்! இவ்வளவு பாதிப்பு தருமா? தடை எப்போது?
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Movies படம் பார்க்க வரச் சொல்றாரு ஹரி.. ஆனால், விஷால் ‘ரத்னம்’ படத்தோட டிக்கெட் புக்கிங்கே ஆரம்பிக்கலையே?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு போட்டியாக முழு சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை உருவாக்கும் ஹோண்டா...
ஹோண்டா நிறுவனம் அடுத்த ஆண்டு மத்தியில் காம்பெக்ட் எஸ்யூவி மாடல் ஒன்றை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ போன்ற தற்போதைய பிரபலமான எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக வெளியாகவுள்ள இந்த எஸ்யூவி காரை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.
இந்திய சந்தையில் சப்-4 மீட்டர் எஸ்யூவி மாடல்களுக்கு பெரிய அளவில் தேவை நிலவி வருகிறது. இதன் காரணமாகவே மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ போன்ற காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இந்த இரு மாடல்கள் மட்டுமின்றி மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற மற்ற எஸ்யூவி மாடல்களும் கணிசமான விற்பனை எண்ணிக்கைகளை பெற்று வருகின்றன. இதனால் பெரும்பான்மையான அனைத்து நிறுவனங்களும் இந்தியாவில் ஒரு எஸ்யூவி காரை சந்தைப்படுத்தி உள்ளன அல்லது சந்தைப்படுத்த முனைப்பு காட்டி வருகின்றன.
இதில், விரைவில் எஸ்யூவி ரக காரை களமிறக்க திட்டமிட்டுள்ள நிறுவனங்களாக ஹோண்டா மற்றும் கியா போன்றவை உள்ளன. கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் புதிய எஸ்யூவி கார் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ள நிலையில் ஹோண்டா நிறுவனம் அடுத்த ஆண்டு மத்தியில் எஸ்யூவி விற்பனையை இந்தியாவில் துவங்கவுள்ளது.
இந்த வகையில் ஹோண்டா நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டுவரும் முழு காம்பெட் எஸ்யூவி மாடல் சில வெளிநாட்டு சந்தைகளுக்கும் கொண்டு செல்லப்படவுள்ளது. இந்த புதிய தயாரிப்பு தற்சமயம் விற்பனையாகி கொண்டிருக்கும் அமேஸ் செடான் மாடல் உடன் ப்ளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொள்ளவுள்ளது.
அமேஸின் ப்ளாட்ஃபாரம் மிக எடை குறைவான அனைத்து விதமான பாடி பேனல்களுக்கும் இடமளிக்கும். க்ரோம்-லேடன் முன்புற க்ரில் மற்றும் முழு-எல்இடி லைட்டிங் உள்ளிட்டவை ஹோண்டாவின் புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி காரில் எதிர்பார்க்கப்படும் டிசைன் அம்சங்களாகும்.
இவற்றுடன் வெளிநாட்டு சந்தைகளில் உள்ள புதிய தலைமுறை ஜாஸ் மாடலின் சில டிசைன் அமைப்புகளையும் இந்த புதிய மாடல் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டாவின் புதிய எஸ்யூவி காரின் சர்வதேச மாடலில் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஹைப்ரீட் பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.
ஆனால் இதன் இந்திய வெர்சனில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்படலாம். இந்த வேறுபட்ட என்ஜின் தேர்வுகளுடன் புதிய ஹோண்டா காம்பெக்ட் எஸ்யூவி மாடல் எலக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் மற்றும் பெரிய அளவிலான திரையுடன் இன்போடெயின்மெண்ட் யூனிட் போன்றவற்றையும் பெற்றிருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.
இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடலை தவிர்த்து ஹோண்டா கார்ஸ் நிறுவனம் டபிள்யூஆர்-வி என்ற சப்-4 மீட்டர் எஸ்யூவி மாடலை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. ஆனால் ஜாஸ் க்ராஸ்ஓவர் மாடலின் அடிப்படையில் இந்த கார் தயாரிக்கப்பட்டு வருவதால் மொத்த தோற்ற அளவில் க்ராஸ்ஓவர் வடிவத்திலேயே காட்சியளிப்பது, எஸ்யூவி கார் பிரியர்களின் கவனத்தை இழப்பதற்கு முக்கிய காரணமாகும்.