Just In
- 13 min ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 57 min ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 2 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 2 hrs ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
Don't Miss!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Movies தேனிலவுக்கு சென்றபோதுதான் அந்த விஷயமே புரிந்ததாம்.. ஐஸ்வர்யா ராய் என்ன இப்படி சொல்லிட்டாங்க?
- News இதுக்கு எதுக்கு தட்கலில் டிக்கெட் புக் பண்ண வேண்டும்? ஏசி 2ம் வகுப்பு பெட்டியிலேயே இதுதான் நிலைமை
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வாடிக்கையாளர், ஓட்டுனர் பாதுகாப்பிற்காக ரூ.500 கோடியை ஒதுக்கிய ஓலா டாக்சி!
ஒவ்வொரு பயணத்தையும் பாதுகாப்பாக மாற்றும் வகையில், கொரோனா தடுப்பு நடைமுறைகளுடன் கார்களை இயக்குவதற்காக ரூ.500 கோடியை ஒதுக்கி இருக்கிறது ஓலா டாக்சி நிறுவனம்.
வாடகை கார் மார்க்கெட்டில் ஓலா டாக்சி நிறுவனம் முதன்மை வகிக்கிறது. பெருநகரங்களின் போக்குவரத்து சேவையிலும் ஓலா டாக்சி தவிர்க்க முடியாத அங்கமாகி உள்ளது. இந்த நிலையில், கொரோனா பிரச்னை காரணமாக, நிறுத்தப்பட்டு இருந்த டாக்சி சேவையை படிப்படியாக இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
கொரோனா ஊரடங்கில் தளர்வு வழங்கப்பட்டுள்ள 200 நகரங்களில் மீண்டும் டாக்சி சேவையை துவங்கி இருக்கிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளிலும் ஓலா டாக்சி நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.
MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!
அதன்படி, வாடிக்கையாளர்களும், ஓட்டுனர்களும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை அமல்படுத்தப்பட உள்ளது. ரைடு சேஃப் இந்தியா என்ற பெயரிலான இந்த திட்டத்தின்படி, வாடிக்கையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சிகளில் இறங்கி உள்ளது.
இதற்காக, கார்களை 48 மணிநேரத்திற்கு ஒருமுறை கிருமிநீக்கம் செய்யும் நடைமுறை பின்பற்றப்பட உள்ளது. இதற்காக, நாடு முழுவதும் 500 கிருமி நீக்க மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. அனைத்து கார்களும் இந்த மையங்களின் வாயிலாக சுத்தப்படுத்தப்படும்.
காரின் கைப்பிடி, இருக்கைகள் உள்ளிட்ட இடங்களிலும் ரசாயனம் மூலமாக கிருமி நீக்க நடைமுறைகள் பின்பற்றப்படும். அதேபோன்று, ஓலா டாக்சி ஓட்டுனர்களுக்கும் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களை ஏற்றிச் செல்லும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஓட்டுனர்களுக்கு பயிற்சி அளித்து, அதற்கு சான்றும் வழங்கி சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஓட்டுனர்களுக்கு தினசரி உடல்வெப்ப அளவு சோதிக்கும் நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும்.
பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுவதற்கு ஏற்ப பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதோடு, புதிய மொபைல்போன் செயலியையும் ஓலா அறிமுகப்படுத்த உள்ளது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீட்டை ஓலா செய்ய இருக்கிறது.
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!