Just In
- 11 min ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 1 hr ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 2 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- 2 hrs ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Movies அடுத்த விஜய் யார்? சர்ச்சையை கிளப்பி விட்ட திருப்பூர் சுப்ரமணியம்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அப்பாடா... இனி ஓலா ஆட்டோவில் கொரோனா பயம் இல்லாமல் பயணிக்கலாம்
கொரோனா அச்சம் இல்லாமல் பயணிகளும், ஓட்டுனர்களும் செல்வதற்கான புதிய பாதுகாப்பு கவசத்தை தனது வாடகை ஆட்டோரிக்ஷாக்களில் கொடுத்து வருகிறது ஓலா டாக்சி நிறுவனம். அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.
தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று சொல்லும் அளவுக்கு கொரோனா எப்படி வரும், எப்போது வரும் சொல்ல முடியாத அளவுக்கு மிகவும் கொடூரமான முறையில் மனிதர்களிடத்தில் பரவி உயிர்களை பலி வாங்கி வருகிறது. இது மனித குலத்திற்கே பெரும் ஆபத்தாக மாறி இருக்கிறது.
இதனால், மக்கள் வீட்டை வெளியில் செல்வதற்கே அச்சமான சூழல் உருவாகி உள்ளது. ஆனால், அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கும், அலுவலகம் மற்றும் இதர முக்கிய பணிகளுக்கும் வெளியில் செல்லும் கட்டாயத்தில் பலர் உள்ளனர்.
இந்த நிலையில், பொது போக்குவரத்து சேவைகள் முடங்கி இருக்கும் நிலையில், தற்போது ஆட்டோரிக்ஷாக்கள்தான் பலரின் மலிவு கட்டண போக்குவரத்து சாதனமாக இருந்து வருகிறது. குறிப்பாக, ஓலா உள்ளிட்ட நிறுவனங்களின் ஆட்டோரிக்ஷா சேவை மிக சரியான கட்டணத்தில் கிடைப்பதால், அதனை பயன்படுத்துவது தவிர்க்க இயலாத விஷயமாக மாறி உள்ளது.
இந்த நிலையில், ஆட்டோரிக்ஷாவில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியாமல் பயணிப்பவர்கள் அல்லது ஓட்டுனர் மூலமாக மிக எளிதாக பிறருக்கு பரவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால், ஆட்டோரிக்ஷாக்களை பயன்படுத்துவதிலும் மக்களுக்கு அச்சம் இருந்து வருகிறது.
இந்த அச்சத்தை போக்கி கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் வகையில் புதிய தடுப்பு முறையை தனது ஆட்டோரிக்ஷாக்களில் வழங்கி வருகிறது ஓலா டாக்சி நிறுவனம்.
அதாவது, ஓட்டுனருக்கும் பின்புற பயணிகள் இருக்கைக்கு இடையில் பாலீதின் கவர் மூலமாக தடுப்பு கொடுக்கப்படுகிறது. இதனால், பயணிகள் அல்லது ஓட்டுனர் மூலமாக பயணிப்போருக்கு கொரோனா பாதிப்பு எளிதாக பரவுவதை தவிர்க்க முடியும்.
அதேபோன்று, 48 மணிநேரத்திற்கு ஒருமுறை ஆட்டோரிக்ஷாவை முழுமையாக கிருமி நாசினி மூலமாக தூய்மைபடுத்துவதும் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், ஆட்டோரிக்ஷாவில் கொரோனா வைரஸ் இருந்தாலும் அழிக்கப்பட்டுவிடும்.
மேலும், ஆட்டோரிக்ஷாவில் ஏறும் பயணி மற்றும் ஓட்டுனர் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டியதும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, ஐந்து அடுக்கு பாதுகாப்பு தடுப்பு முறைகளுடன் ஆட்டோரிக்ஷாக்களை இயக்க வேண்டும் என்று ஓட்டுனர்களை ஓலா டாக்சி நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.