Just In
- 1 hr ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 2 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News பிறந்ததேதி இடிக்குதே! எடப்பாடியை விட சசிகலா பெரியவரா? உதயநிதிக்கு பதில் கூறிய ஈபிஎஸ்க்கு புது தலைவலி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இருக்குற கஷ்டத்துல இது வேறயா... மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி நிலையில் வாகன ஓட்டிகள்!
கொரோனாவால் மக்கள் பெரும் இழப்புகளையும், துயரங்களையும் சந்தித்து வருகின்றனர். வீடுகளில் முடங்கியிருப்பதே கடினமான விஷயமாக மாறி இருக்கிறது. மேலும், வேலை இழப்பு, சம்பள குறைப்பு, வருவாயில் அடி என பல்வேறு வகையிலும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும் பல இடங்களில் விலைவாசியும் உயர்ந்தது. இதனால் பன்முனை பொருளாதார தாக்குதல்களில் சிக்கி பலர் தவித்து வருகின்றனர். இந்த சூழலில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருவது வாகன ஓட்டிகள் மற்றும் மக்களிடையே புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
தேசிய ஊரடங்கு காரணமாக நுகர்வு அடியோடு முடங்கிய நிலையில், தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக வாகன போக்குவரத்து மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால், நுகர்வு வெகுவாக அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்கு மேல் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. தினசரி விலை உயர்வு திட்டமும் நிறுத்தப்பட்டு இருந்தது.
தேசிய ஊரடங்கு அமலில் இருந்தாலும் பல இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு முயற்சித்து வருகின்றனர். அலுவலகம் செல்வோர், வியாபாரிகள், வர்த்தகர்கள் மற்றும் போக்குவரத்து சேவை வழங்கும் நிறுவனங்கள் மீண்டும் தங்களது வர்த்தக செயல்பாடுகளை படிப்படியாக அதிகரித்து வருகின்றன.
கடந்த இரண்டு மாதங்களாக வருவாய் இல்லாமல் இருந்த நிலையில், அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பும் இந்த சூழலில், பெட்ரோல், டீசல் விலையை தினசரி உயர்த்தப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று 6வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இன்று டெல்லியில் பெட்ரோல் விலை 57 காசுகளும், டீசல் விலை 59 காசுகளும் உயர்த்தப்பட்டன. இன்றைய நிலவரப்படி, தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.57 என்றும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.22 என்றும் நிர்ணயிக்கப்பட்டது.
கடந்த ஆறு நாட்களாக பெட்ரோல், டீசல் விலை சிறிது சிறிதாக உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால், கடந்த ஆறு நாட்களில் பெட்ரோல் விலை ரூ.3.31 வரையிலும், டீசல் விலை ரூ.3.42 வரையிலும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதாவது, சிறிது சிறிதாக உயர்த்தப்பட்டு தற்போது கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், தொகை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தப்பட்டுவிட்டது.
ஏற்கனவே விலை வாசி உயரும் அபாயம் இருக்கும் நிலையில், டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகை அதிகரிக்கப்படும் என்பதால், அது நிச்சயம் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மறுபுறத்தில் இரண்டரை மாதங்களாக வருவாய் இல்லாமல் அல்லது சம்பள குறைப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் நிதி நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு இது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்ற நிலையில் சாமான்ய மக்கள் அல்லல் படும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?