உல்லாச காரில் ஹீரோ போல் கிளம்பிய இளைஞர்... ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் வழங்கிய போலீஸ்!
ஜாலி ரைடு செல்லும் வகையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரில் சென்று கொண்டிருந்த இளைஞருக்கு போலீஸார் விநோத தண்டனை மற்றும் அபராத செல்லாணை வழங்கியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உயிர் கொல்லி கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு தழுவிய அளவில் ஊரடங்கு உத்தரவு அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக இருக்கும் ஊரடங்கால் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக, ஏழை, எளியோர் மற்றும் தினக் கூலித் தொழிலாளர்களின் அத்தியாவசியத் தேவைகள் கேள்விக் குறியாகவே மாறிவிட்டது.

அரசு சார்பில் கணிசமான நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுக்கள் பொதுமக்கள் மத்தியில் எழும்பிய வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையைப் போக்கும் விதமாக ஒரு சில தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சிறப்பு உதவிகளை வழங்கி வருகின்றன. இதில், வாகன உற்பத்தி நிறுவனங்களின் பங்கு இன்றியமையாத ஒன்று.

என்னதான் நிறுவனங்கள் உதவிகளை வாரி வழங்கினாலும் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு எண்ணிலடங்காதவை. இதனால், நடப்பு 2020ம் ஆண்டு மிகப் பெரிய கருப்பாண்டு ஆண்டாகவே வரலாற்றில் மாறியிருக்கின்றது.
ஒவ்வொரு நாளும் கசப்பான அனுபவங்களை உலக நாடுகளுக்கும், அதன் மக்களுக்கும் வைரஸ் ஏற்படுத்தி வருகின்றது.

குறிப்பாக, இந்தியா போன்ற அதிக மக்கள் தொகைக் கொண்ட நாட்டில் எண்ணிலடங்கா துயரத்தை கொரோனா உருவாக்கியிருக்கின்றது. இவ்வாறு நாடு முழுவதும் கசப்பான சூழல் நிலவினாலும் தங்களுக்கு தாங்களே ஆறுதல் கூறிக் கொண்டு பலர் ஊரடங்கைக் கடைபிடித்து அரசுக்கு பக்க பலமாக இருந்து வருகின்றனர்.

ஆனால், ஒரு சிலர் மட்டும் அரசின் நோக்கத்தை சீர் குலைக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றித் திரிந்த வண்ணம் இருக்கின்றனர். இம்மாதிரியான சம்பவங்கள் சமீப காலமாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
அதிலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் அதிகம் செல்வந்தர்கள் மற்றும் முக்கிய பிரபலங்களாகவே இருக்கின்றனர். எனவே, இந்த கொரோனா வைரஸ் பலரின் வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது என்றே கூறலாம்.

இந்நிலையில், மத்தியபிரதேச மாநிலம், இந்தூரில் அப்பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகன், சொகுசு காரில் வெளியே சென்றதற்காக போலீஸார் தண்டனை மற்றும் அபராத செல்லாணை வழங்கியுள்ளனர்.
ஹீரோக்களைத் தோற்கடிக்கும் ஸ்டைலில், ரூஃப் லெஸ் காரில் வந்த இளைஞருக்கு விநோதமான தண்டனை வழங்கும் விதமாக, தோப்புகரணம் போடச் செய்துள்ளனர் மபி., போலீஸார்.

ஊரடங்கை உத்தரவை மீறிய வெளியே வந்தது மற்றும் பாதுகாப்பு கவசங்கள் (மாஸ்க்) ஏதும் அணியாத இருந்தது உள்ளிட்ட காரணங்களுக்காகவே போலீஸார் இத்தகைய தண்டனையை அந்த இளைஞருக்கு வழங்கியுள்ளனர்.
தற்போது உலகம் முழுவதும் பரவியிருக்கும் வைரஸ் அச்சம் காரணமாக மக்களை அனைவரையும் அவசிய தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தி வருகின்றது.

அதேசமயம், அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்கள் முகமூடி, கையுறை போன்றவ பாதுகாப்பு கவசங்களைக் கட்டாயம் அணிந்தே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதில் எதையுமே கடை பிடிக்காத அந்த இளைஞர் ரூஃப் இல்லாத போர்ஷே 718 பாக்ஸ்டர் என்னும் ஆடம்பர காரில் வெளியே வந்துள்ளார்.

சூப்பர் ஸ்போர்ட்ஸ் காராக தோற்றமளிக்கும் இந்த கார் விபத்து போன்றவற்றில் இருந்து அதிக பாதுகாப்பை வழங்கினாலும், கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாக்குமா., என்ற கேள்விக்கு பதில் கிடையாது.
எனவேதான் போலீஸார் அந்த இளைஞருக்கு எந்தவொரு விளக்குமளிக்காமல் நடு ரோட்டிலேயே வைத்து தோப்புகரணம் போட செய்துள்ளனர்.

இந்த வீடியோ தற்போது பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. அந்த இளைஞர் ஏன் வெளியே வந்தார் என்பதுகுறித்த தகவல் வெளியாகவில்லை.

இருப்பினும், அவரிடம் வெளியே வருவதற்கான பாஸ் இருந்ததாகக் கூறப்படுகின்றது. எனினும், அவர் மாஸ்க் அணியாத குற்றத்திற்காக, காரை விட்டு இறங்கிய உடன் எந்த கேள்வியும் கேட்காமல், பாதுகாப்பு அதிகாரிகள் தோப்புகரணம் இட செய்துள்ளனர்.
அந்த இளைஞர் பயன்படுத்திய கார், இருவர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய டூ சீட்டர் லக்சூரி கார் ஆகும். இது இந்தியாவில் 85.53 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இந்த சூப்பர் கார் மணிக்கு 275கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. அதிலும், 0த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 4.7 செகண்டுகளிலேயே தொட்டுவிடுகின்ற அளவிற்கு திறன் வாய்ந்தது.


Click it and Unblock the Notifications








