Just In
- 4 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 5 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 5 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 6 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இனி பத்மினியை சாலையில் பார்க்கவே முடியாது... அடியோடு தூக்க முடிவு... ஒஹோ இதுதான் காரணமா!!!
பிரிமியர் பத்மினி காரை ஒட்டுமொத்தமாக ஸ்கிராப் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.
இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் தற்போதும் பிரிமியர் பத்மினி கார்களின் பயன்பாட்டை நம்மால் காண முடிகின்றது. குறிப்பாக, வட மாநிலங்களில் அதிகளவிலேயே அவற்றின் நடமாட்டம் தென்படுகின்றது. அந்தவகையில், பிரிமியர் பத்மினி அதிகம் காணப்படும் மாநிலங்களில் மஹாராஷ்டிரா மாநிலமும் ஒன்று.
இந்த மாநிலத்தின் மும்பை நகரத்தில் பெரும்பாலான கால் டாக்சிகள் பிரிமியர் பத்மினி காராகவே இருக்கின்றது. மும்பை ரயில் நிலையம் தொடங்கி விமானம் நிலையம் வரை இந்த கார்களை நம்மால் பார்க்க முடியும். கருப்பு மஞ்சள் நிறத்தில் சாலையில் இரு பக்கங்களிலும் அந்நகர மக்கள் இணையாக அவை பயன்பாட்டில் இருக்கின்றன. இவை, மும்பையில் 1974ம் ஆண்டில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் போக்குவரத்தில் இந்த வாகனமே மிகப்பெரிய பங்கினை வகிக்கின்றன. இந்நிலையில், இந்த புகழ்மிக்க வாகனத்தை அம்மாநில அரசு கூண்டோடு நீக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகறித்த தகவலை டீம்-பிஎச்பி தளம் வெளியிட்டுள்ளது.
அதாவது, மும்பையில் பயன்பாட்டில் இருக்கும் அனைத்து பிரிமியர் பத்மினி டாக்சி கார்களையும் ஸ்கிராப் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த தகவல் அம்மாநில மக்கள் மற்றும் மும்பை நகர வாசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம், அடுத்த மாதத்திற்குள் சாலையில் இயங்கிக் கொண்டிருக்கும் கடைசி பிரிமியர் பத்மினி வரை அனைத்தையும் ஸ்கிராப் செய்து அழிக்க அம்மாநில அரசு திட்டமிட்டு வருகின்றது.
இந்த அதிரடிக்கு முக்கிய காரணமாக இருப்பது பிரிமியர் பத்மினியால் ஏற்படும் மாசே முக்கிய காரணமாக இருக்கின்றது. தற்போது வாகனங்களால் ஏற்படும் மாசை குறைக்கும் விதமாக புதிய பிஎஸ்-6 உமிழ்வு அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
அத்துடன், நீண்ட காலமாக சாலையில் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களை ஸ்கிராப் செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது, பத்து முதல் 15 ஆண்டுகளுக்கும் அதிகமான வருடங்கள் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களை அதன் தன்மையைப் பொருத்து ஸ்கிராப் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில்தான் அண்மையில் மும்பை உயர் நீதிமன்றம் ஓர் உத்தரவை வெளியிட்டிருந்தது. அதில், மாசை அதிகம் ஏற்படுத்தும் வாகனங்களை ஸ்கிராப் செய்யும்படி கூறப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்தே, அதிகாரிகள் பிரிமியர் பத்மினி போன்ற மிக பழைய வாகனங்களைப் பயன்படுத்தி வரும் டாக்சி உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
எனவே, பிரிமியர் பத்மினி முழுமையாக சாலையை விட்டு அகற்றிய பின்னர் ஹூண்டாய் சேன்ட்ரோ மாடலே பத்மினியின் இடத்தை நிரப்பும் என கூறப்படுகின்றது. ஆகையால், மிக விரைவில் மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் சேன்ட்ரோவை மும்பையின் சாலையில் காண முடியும் என தெரிகின்றது.
பத்மினி பிரீமியர் 1974 மாடலில் 1,089 சிசி கார்பூரேட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெற்றிருக்கின்றது. இது அதிகபட்சமாக 40 எச்பி மற்றும் 83 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது. இந்த எஞ்ஜின் 4-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது பின்புற சக்கரங்களுக்கு சக்தியை வழங்கும். தற்போதும்கூட நல்ல பராமரிப்பில் இருக்கும் பிரிமியர் பத்மினி ரூ. 2 லட்சம் வரை விலைக்குப் போவது குறிப்பிடத்தகுந்தது.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!