இப்படி ஒரு காரியத்தை பஞ்சாப் வங்கி செய்யும் என யாரும் எதிர்பார்க்கல... பொங்கும் மக்கள்! என்ன நடந்தது

பஞ்சாப் வங்கி நிர்வாகத்தின் செயலால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இப்படி ஒரு காரியத்தை பஞ்சாப் வங்கி செய்யும் என யாரும் எதிர்பார்க்கல... இக்கட்டான சூழ்நிலையில இப்படி ஒன்னு தேவைதானா? பொங்கும் மக்கள்! என்ன நடந்தது!

நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், அவரின் பாதுகாப்பான பயணத்திற்காக புதிதாக வாங்கப்பட இருந்த விலையுயர்ந்த பென்ஸ் காரின் கொள்முதலை அண்மையில் நிராகரித்தார். இவரைப் போன்றே நாட்டின் சில முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் புதிய வாகனங்களின் கொள்முதலை தள்ளிப்போட்டனர்.

இப்படி ஒரு காரியத்தை பஞ்சாப் வங்கி செய்யும் என யாரும் எதிர்பார்க்கல... இக்கட்டான சூழ்நிலையில இப்படி ஒன்னு தேவைதானா? பொங்கும் மக்கள்! என்ன நடந்தது!

இவர்களின் இந்த கூற்றிற்கு ஒற்றை உயிர் கொல்லி வைரஸ் கொரோனா மட்டுமே காரணம் ஆகும். ஆம், கொரோனா வைரஸ் பாதிப்பால் நாட்டின் அனைத்து துறையும் அதளபாதாளத்தில் வீழ்ந்திருக்கின்றது. இதன் பின் விளைவாக நாட்டின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

இப்படி ஒரு காரியத்தை பஞ்சாப் வங்கி செய்யும் என யாரும் எதிர்பார்க்கல... இக்கட்டான சூழ்நிலையில இப்படி ஒன்னு தேவைதானா? பொங்கும் மக்கள்! என்ன நடந்தது!

எனவேதான் நிதிச்சுமையை கூடுதலாக உருவாக்கும் செயல்களுக்கு மத்திய அரசுகள் மட்டுமின்றி சில மாநில அரசுகளும் தடைவிதித்து வருகின்றன. குறிப்பாக, அத்தியாவசிய தேவையல்லாத கட்டுமானம் மற்றும் கொள்முதல்களுக்கு அவை தடை விதித்துள்ளன.

இப்படி ஒரு காரியத்தை பஞ்சாப் வங்கி செய்யும் என யாரும் எதிர்பார்க்கல... இக்கட்டான சூழ்நிலையில இப்படி ஒன்னு தேவைதானா? பொங்கும் மக்கள்! என்ன நடந்தது!

இந்நிலையில், கடந்த வருடங்களில் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கி வந்த பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) தற்போது மீண்டும் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அது, வங்கியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் மூன்று அதிகாரிகளின் வழக்கமான பயன்பாட்டிற்காக விலையுயர்ந்த ஆடி கார்களை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி ஒரு காரியத்தை பஞ்சாப் வங்கி செய்யும் என யாரும் எதிர்பார்க்கல... இக்கட்டான சூழ்நிலையில இப்படி ஒன்னு தேவைதானா? பொங்கும் மக்கள்! என்ன நடந்தது!

நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து பொதுத்துறைகளும் செலவுகளைக் குறைத்து வருகின்றநிலையில், பஞ்சாப் வங்கியின் இந்த பொது நலமற்ற செயல் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடுமையான சர்ச்சைக்கும் ஆளாகியுள்ளது.

இப்படி ஒரு காரியத்தை பஞ்சாப் வங்கி செய்யும் என யாரும் எதிர்பார்க்கல... இக்கட்டான சூழ்நிலையில இப்படி ஒன்னு தேவைதானா? பொங்கும் மக்கள்! என்ன நடந்தது!

கடந்த காலங்களில், நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஸி ஆகியோருக்கு கடன் வழங்கியதிலும் இதேபோன்றதொரு சர்ச்சையில் சிக்கியிருந்தது. இவர்கள், போலியாண ஆவணங்களின் அடிப்படையில் பல ஆயிரம் கோடிகளைக் கடனாகப் பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றனர். இதில், தற்போது நீரவ் மோடி லண்டன் சிறையில் தண்டனையை அனுபவித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.

இப்படி ஒரு காரியத்தை பஞ்சாப் வங்கி செய்யும் என யாரும் எதிர்பார்க்கல... இக்கட்டான சூழ்நிலையில இப்படி ஒன்னு தேவைதானா? பொங்கும் மக்கள்! என்ன நடந்தது!

இதைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை நீரவ் மோடியின் சொத்துக்களை ஏலம் விட்டு வங்கிக்கு ஏற்பட்ட இழப்பீட்டை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு, நிர்வாகம் ரீதியிலும், நாட்டின் பொருளாதார ரீதியிலும் சிக்கலான சூழ்நிலை நிலவிக் கொண்டிருக்கின்ற வேலையில், விலையுயர்ந்த கார்களை வாங்கியிருப்பது வங்கி மீது கசப்பான கருத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி ஒரு காரியத்தை பஞ்சாப் வங்கி செய்யும் என யாரும் எதிர்பார்க்கல... இக்கட்டான சூழ்நிலையில இப்படி ஒன்னு தேவைதானா? பொங்கும் மக்கள்! என்ன நடந்தது!

தற்போது வாங்கப்பட்டிருக்கும் மூன்று ஆடி கார்களின் மதிப்பு ரூ. 1.8 கோடியாகும். இவை அந்த வங்கியின் மேனேஜிங் டைரக்டர் எஸ்எஸ் மல்லிகார்ஜுன ராவ் மற்றும் இரு முக்கிய அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டுள்ளன. இதற்கான உரிய அனுமதியை அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் அசோசியேஷன் இடம் இருந்து பெற்றே வாங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி ஒரு காரியத்தை பஞ்சாப் வங்கி செய்யும் என யாரும் எதிர்பார்க்கல... இக்கட்டான சூழ்நிலையில இப்படி ஒன்னு தேவைதானா? பொங்கும் மக்கள்! என்ன நடந்தது!

இருப்பினும், தற்போதைய நாட்டின் சூழ்நிலையில் இந்தளவிற்கு விலையுயர்ந்த காரின் கொள்முதல் தேவைதான என்ற கேள்வியெழும்பியுள்ளது.

நாட்டின் முதல் மிகப்பெரிய வங்கியாக எஸ்பிஐ உள்ளது. இந்த வங்கியின் முக்கிய அதிகாரிகள் பலர் டொயோட்டா கொரல்லா ஆல்டிஸ் மற்றும் மாருதி சியாஸ் உள்ளிட்ட கார்களையேப் பயன்படுத்தி வருகின்றன. இவற்றைதான் மத்திய அரசு பணியில் இருக்கும் பலர் பயன்படுத்தி வருகின்றனர்.

இப்படி ஒரு காரியத்தை பஞ்சாப் வங்கி செய்யும் என யாரும் எதிர்பார்க்கல... இக்கட்டான சூழ்நிலையில இப்படி ஒன்னு தேவைதானா? பொங்கும் மக்கள்! என்ன நடந்தது!

இம்மாதிரியான சூழ்நிலையில், ஒரு யூனிட் காரே இந்திய மதிப்பில் ரூ. 63 லட்சங்கள் என்ற விலையில் விற்கப்பட்டு வரும் ஆடி ஏ6 லக்சூரி செடான் ரக காரை பஞ்சாப் நேஷனல் வங்கி வாங்கியிருக்கின்றது. இந்த காருக்கு ரூ. 3-4 லட்சங்கள் வரை தள்ளுபடி வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மூன்று கார்களின் மதிப்பு ரூ. 1.8 கோடியாக உள்ளது. இதுகுறித்த தகவலை இந்தியா டுடே தளம் வெளியிட்டுள்ளது.

இப்படி ஒரு காரியத்தை பஞ்சாப் வங்கி செய்யும் என யாரும் எதிர்பார்க்கல... இக்கட்டான சூழ்நிலையில இப்படி ஒன்னு தேவைதானா? பொங்கும் மக்கள்! என்ன நடந்தது!

இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, பஞ்சாப் நேஷ்னல் வங்கி சார்பில் ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், தங்களுக்கா ஒதுக்கப்பட்ட பயன்படுத்தப்படாத நிதியில் இருந்தே இந்த கார் வாங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

காரணங்கள் பல இருந்தாலும் மக்கள் மத்தியில், தற்போதைய பொருளாதர இக்கட்டான நிலையில் இதைத் தவிர்த்திருக்கலாம் என்ற கருத்தே ஓங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் பல ஏழை மக்கள் தற்போதும் வறுமையால் வாடி வருகின்றனர்.

இப்படி ஒரு காரியத்தை பஞ்சாப் வங்கி செய்யும் என யாரும் எதிர்பார்க்கல... இக்கட்டான சூழ்நிலையில இப்படி ஒன்னு தேவைதானா? பொங்கும் மக்கள்! என்ன நடந்தது!

இந்த நிலையில்தான் பஞ்சாப் நேஷ்னல் வங்கி விலையுயர்ந்த ஆடி ஏ6 கார்களின் மூன்று யூனிட்டுகளை வாங்கியிருக்கின்றது. செடான் ரக வாகனத்தில் அதிக சொகுசு வசதிகளை உள்ளடக்கிய மாடலாக ஆடி ஏ6 உள்ளது. ஆடி நிறுவனம் இந்த மாடலின் லேடஸ்ட் வெர்ஷனை கடந்த ஆண்டு இறுதியில்தான் இந்தியாவில் அறிமுகம் செய்தது.

இப்படி ஒரு காரியத்தை பஞ்சாப் வங்கி செய்யும் என யாரும் எதிர்பார்க்கல... இக்கட்டான சூழ்நிலையில இப்படி ஒன்னு தேவைதானா? பொங்கும் மக்கள்! என்ன நடந்தது!

இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது, அதிகபட்சமாக 248 பிஎஸ் பவரையும், 370 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இதில், 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் (டிசிடி) எஸ் ட்ரோனிக் கியர்பாக்ஸுடன் 12V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு தகவல் என்னவென்றால் இதன் எஞ்ஜின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 11, 2020, 16:30 [IST]
English summary
Punjab National Bank Buys 3 New Audi Cars For Top Management. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+