Just In
- 31 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 37 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 2 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
உலக நாடுகளை கலக்கும் ஏழை விவசாயியின் மகன்... ஒன்றா, இரண்டா உலகின் பல காஸ்ட்லியான கார்கள் கை வசம்...!
ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த ரவி பிள்ளை, உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கின்றார். இவர் பயன்படுத்தும் கார்கள் ஒவ்வொன்றும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலை தொடர்ச்சியாக காணலாம்.
கேரள மாநிலம், கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி பிள்ளை. இந்தியா மற்றும் அரபு நாடுகளைக் கட்டிடத் தொழிலில் கலக்கிக் கொண்டிருக்கும் இவர், ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். ஆனால், தற்போது 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிபதியாக உள்ளார்.
ஆரம்பத்தில் பல்கலைக் கழகம் மற்றும் சிறு சிறு வணிகம் குறுகிய வட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ரவி பிள்ளை, ஆர்பி குழுமம் என்ற பெயரில் கட்டிடப் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். இத்தொழிலின் மூலமே தற்போது வளர்ச்சியின் உச்சத்தை எட்டியிருக்கின்றார்.
ஆம், ரவி பிள்ளை தற்போது இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் கன்ஸ்ட்ரக்சன் பணிகளை மேற்கொண்டு வருகின்றார். குறிப்பாக அரபு, கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் பெரும்பாலான கட்டிடப் பணிகளை இவரே செய்து வருகிறார். இவர், கட்டிடப் பணிகளில் மட்டுமின்றி வாகனங்கள்மீதும் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருக்கின்றார்.
இதனாலயே ரவி பிள்ளையின் வீட்டில் இருக்கும் கார் நிறுத்தத்தில் ஏராளமான விலையுயர்ந்த சொகுசு கார்கள் அணி வகுத்து நிற்கின்றன. அவை ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலானவை ஆகும். அந்தவகையில், ரவி பிள்ளையிடம் இருக்கும் கார்களைப் பற்றிய தகவலை இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்
ரவி பிள்ளையிடம் இருக்கும் விலையுயர்ந்த கார்களின் பட்டியலில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரே முதல் இடத்தில் இருக்கின்றது. இது ஓர் செடான் ரக லக்சூரி காராகும். இந்த காரை அவர் கடந்த 2011ம் ஆண்டு வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த காரில் உல்லாச கப்பல்களுக்கு இணையான சொகுசு வசதிகள் ஏராளமாக இடம்பெற்றிருக்கின்றன. இதனாலயே இந்த காரில் செல்லும்போது கப்பலில் பயணிப்பதைப் போன்று உணர்வு ஏற்படும். எனவேதான் ரவி பிள்ளை அவரது பொதுவான பயணங்களில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் செடான் காரையே அதிகம் பயன்படுத்துகின்றார்.
மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்600
லிமோசைன் தோற்றத்தில் காட்சியளிக்கும் இந்த மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 ஓர் செடான் ரக காராகும். இதில், அளவுகடந்த சொகுசு வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதனாலயே லக்சூரி பயணத்தை விரும்பும் தொழிலதிபர்களின் முதல் தேர்வாக மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்600 உள்ளது. இந்த காரின் இருக்கைகள் மசாஜ் வசதியைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதேபோன்று, உயர் ரக இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆம்பிசியன்ட் மின் விளக்கு, ஃபெர்ப்யூம் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான பிரிமியம் வசதிகள் அக்காரில் இடம்பெற்றிருக்கின்றன.
மேலும், மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்600 6.0 லிட்டர் வி12 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 530 பிஎச்பி மற்றும் 800 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இந்த கார் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
பிஎம்டபிள்யூ 520டி
ரவி பிள்ளையிடம் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 5 செரீஸ் காரும் பயன்பாட்டில் இருக்கின்றது. இது டீசல் எஞ்ஜினுடைய மாடலாகும். 520டி என்று அழைக்கப்படும் இந்த கார் இந்தியாவில் அமோகமான வரவேற்பைப் பெற்ற சொகுசு கார்களில் ஒன்றாகும். இந்த காரில் அதிக நம்பத் தன்மை இருப்பதன் காரணத்தினாலயே இந்தியர்கள் மத்தியில் இந்த கார் நல்லவேற்பைப் பெற்றது.
இந்த மிட்-சைஸ் செடான் ரக காரை ரவி பிள்ளை வெகு நீண்ட நாட்களாக பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, எந்தவொரு மாற்றமும் செய்யாமல் தற்போது வரை அக்காரை அவர் பயன்படுத்தி வருவதால், பிஎம்டபிள்யூ 520டி அவருக்கு மிகவும் பிடித்தமான கார் என யூகிக்கப்படுகின்றது.
ஆடி ஏ6 மேட்ரிக்ஸ்
ரவி பிள்ளை, அவரது மகளின் திருமணத்தை அலங்கரிக்கும் விதமாக ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் காரை வாங்கியிருந்தார். இக்கார் மண்டபத்தின் நுழைவாயிலில் வரவேற்பளிக்கும் விதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததைப் பலர் கண்டதாகக் கூறப்படுகின்றது. இக்கல்யாணம் 2015ம் ஆண்டு நடைபெற்றது. இந்த காரும் இந்தியாவில் அதிக புகழ்வாய்ந்த சொகுசு கார்களில் ஒன்றாக இருக்கின்றது.
இக்கார் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட கார் என்பதாலே அதிக பாதுகாப்பை விரும்பும் தொழிலதிபர்கள் இக்காரை தேர்வு செய்து வருகின்றனர். குறிப்பாக, இந்த கார் துப்பாக்கி குண்டு போன்ற வெடி விபத்து சம்பவங்களை எளிதாக கையாளும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்500
ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் காரை மட்டுமின்றி ரவி பிள்ளை மற்றுமொரு காரையும் அவரது மகளின் கல்யாணத்தின் களமிறக்கியிருந்தார். அதுதான் மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்500. இந்த காரை அவரது மகளுக்கு திருமண பரிசாக வழங்கியிருந்தார். மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்500 மாடலின் ஆரம்ப நிலை வேரியண்டையே அவர் பரிசாக வழங்கியிருந்தார்.
இது ஆரம்ப நிலை காராக இருந்தாலும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சொகுசு வசதிகளைத் தாங்கிய காராக அது இருக்கின்றது. இந்த காரின் புகைப்படங்களை சமீப காலங்களுக்கு முன்பு டீம் பிஎச்பி தளம் இணையத்தில் வெளியிட்டிருந்தது. இதன் மூலமே இக்காரின் தரிசனம் வெளியுலகிற்கு கிடைத்தது.
லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் ஆடோபயோகிராஃபி
நாம் மேலே பார்த்த பல கார்கள் செடான் ரக கார்களே ஆகும். எனவே, ரவி பிள்ளையிடம் இருக்கும் பெரிய உருவம் கொண்ட எஸ்யூவி ரக காராக லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் ஆடோபயோகிராஃபி காட்சியளிக்கின்றது. இந்த காரையும் ரவி பிள்ளை அவரது மகளின் திருமணத்தைத் தொடர்ந்தே வாங்கியுள்ளார். இதன் பின்னர்தான் அவரது கராஜிலும் இந்த கார் காட்சியளிக்க ஆரம்பித்துள்ளது.
இந்தியாவில் விற்பனையாகும் அதிகம் விலையுயர்ந்த எஸ்யூவி கார்களில் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் ஆடோபயோகிராஃபி காரும் ஒன்று. இது, அதிகபட்சம் இந்திய திரைப் பிரபலங்கள் மத்தியில் புகழ்வாய்ந்த காராக இருக்கின்றது. ஏராளமான சொகுசு வசதிகளை இக்கார் தாங்கியிருப்பதே இதற்கு காரணம்.