Just In
- 2 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 4 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 6 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 9 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News வல்லவர்களை..நல்லவர்களை..! இன்றைக்கு ரொம்ப முக்கியம்.. எடப்பாடி பழனிசாமி வைத்த முக்கிய கோரிக்கை..!
- Movies ’சிட்டிசன்’ அஜித்தால் கடுப்பான சீனியர் சிட்டிசன்.. ஓட்டுப் போடும் இடத்தில் ஏற்பட்ட வாக்குவாதம்!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ட்ரைபர் வடிவில் சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தியுள்ள ரெனால்ட்...
ரெனால்ட் இந்தியா நிறுவனம் புதிய கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட சப்-4 மீட்டர் எஸ்யூவி மாடலை பொது சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.
முழுக்க முழுக்க மறைப்பால் மறைக்கப்பட்டுள்ள இந்த சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் தற்போதைக்கு எச்பிசி என்கிற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த எச்பிசி காரை பற்றிய தகவல்கள் மற்றும் சோதனை ஓட்ட புகைப்படங்கள் கடந்த சில மாதங்களாக தான் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த கார் மீண்டும் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய சிஎம்எஃப்-ஏ+ கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு வருகின்ற இந்த கார் இந்த ஃப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படும் மூன்றாவது மாடலாகும். இதற்கு முன்பு இதே கட்டமைப்பில் ரெனால்ட்டின் க்விட் மற்றும் ட்ரைபர் கார்கள் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சப்-4 மீட்டர் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்படவுள்ள இந்த காரை பற்றிய எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும் இந்த சோதனை ஓட்டத்தில் கார் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளதால் டிசைன், பெயிண்ட் அமைப்பு மற்றும் தொழிற்நுட்பங்கள் பற்றி எதுவும் அறிய முடியவில்லை.
சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள எச்பிசி எஸ்யூவி மாடலை மொத்தமாக பார்த்தோமேயானால், புதுமையான தோற்றத்தை இந்த கார் கொண்டுள்ளது. குறிப்பாக முன்புறம் க்விட் மற்றும் ட்ரைபர் மாடல்களை ஒத்துள்ளது.
விரைவில் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் இந்த எச்பிசி எஸ்யூவி வேறொரு பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இதுகுறித்த வெளிவந்துள்ள தகவலின்படி, இந்த புதிய எஸ்யூவி கார் 95 பிஎச்பி பவரை வழங்கக்கூடிய மூன்று சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினை பெறவுள்ளது.
இதே சிஎம்எஃப்-ஏ+ கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட ட்ரைபர் மாடலின் டிசைன் உள்ளிட்டவை சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், இந்த கட்டமைப்பில் தயாரிக்கப்படும் கார்கள் அடிப்படையான செயல்படுத்திறனில் அவ்வளவு சிறப்பாக செயல்படுவதில்லை.
இந்த எஸ்யூவி காரின் விலையுயர்ந்த வேரியண்ட்கள் பெரிய அளவிலான எச்ஆர் 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினை பெறவுள்ளதாக கசிந்துள்ள தகவல்கள் கூறுகின்றன. மற்றப்படி இந்த மாடலின் டீசல் வேரியண்ட்களை பற்றி விபரமும் வெளியாகவில்லை.
இந்திய சந்தையில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு கியர்பாக்ஸ் தேர்வுகளை கொண்ட கார்களுக்கு கடுமையான தேவை ஏற்பட்டு வருவதால், இந்த புதிய எஸ்யூவி காரில் இரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளையும் வழங்க ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனம் க்விட் ஹேட்ச்பேக் மற்றும் ட்ரைபர் எம்பிவி மாடல்களின் விற்பனையில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் தான் தனது புதிய எஸ்யூவி மாடலை இந்த இரு கார்கள் தயாரிக்கப்பட்ட ஃப்ளாட்ஃபாரத்திலேயே ரெனால்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்திய சந்தையில் வலுவாக காலூன்ற நிஸான் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து செயல்பட்டுவரும் ரெனால்ட், தனது புதிய தயாரிப்பு கார்களுக்கு குறைவான விலையை நிர்ணயிக்கவே முயற்சித்து வருகிறது. இதனால் இந்நிறுவனத்தால் அதிக விலை கொண்ட மாடல்களின் விற்பனையில் மிக சிறப்பாக செயல்பட முடிவதில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
குறிப்பாக ஒவ்வொரு மாதமும் கணிசமான விற்பனை எண்ணிக்கையை பெற்றுவந்த டஸ்டர் மாடலின் தற்போதைய தலைமுறை கார் பெரியளவில் சந்தை பங்கை பெறவில்லை. இதற்கு டஸ்டர் மாடல் நிலைநிறுத்தப்பட்டுள்ள காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் உள்ள கடுமையான போட்டியையும் ஒரு காரணமாக சொல்லலாம். இதனால் இந்த புதிய எச்பிசி எஸ்யூவி மாடலை பட்ஜெட் விலையில் எதிர்பார்க்கலாம்.
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!